search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    கிரெடிட் கார்டு பயன்பாடும் எச்சரிக்கை உணர்வும்...
    X
    கிரெடிட் கார்டு பயன்பாடும் எச்சரிக்கை உணர்வும்...

    கிரெடிட் கார்டு பயன்பாடும் எச்சரிக்கை உணர்வும்...

    இப்போதெல்லாம் பெரும்பாலும் யாரும் பணத்தை எடுத்து செல்வதில்லை என்பதால், கார்டு மூலம் வாங்குபவர்களுக்கு மட்டும் சலுகைகளை கொடுக்கின்றன, வர்த்தக நிறுவனங்கள்.
    பொதுவாக ஒரு பொருளை வாங்குகிறபோது அதன் விற்பனை விலையில் இருந்து சற்றே விலை குறைத்து வாங்கினால்தான் இந்திய நுகர்வோருக்கு நிம்மதி. சிறிய கொள்முதல் என்றாலும் இந்திய மனங்கள் இதை எதிர்பார்க்கிறது. இந்திய வர்த்தகத்தில் இது சாதாரணமாக நடைமுறையில் உள்ளது. இந்த நுகர்வு கலாசாரத்தை முடிவுக்கு கொண்டு வந்தது ஒரே விலை விற்பனை முறை. விலையில் பேரம் பேச இந்த விற்பனை முறையானது, வாய்ப்பு வழங்கவே இல்லை. பேரம் பேசி விலையை குறைக்கும் முறையில் வாடிக்கையாளர்களுக்கு கிடைத்த நுகர்வு அனுபவமும், பலனும் தள்ளுபடி விற்பனையில் கிடைப்பதில்லை என்கின்றனர், நுகர்வோர். நமது பேரம் பேசும் திறனுக்கு ஏற்ப லாபத்தில் விட்டுக்கொடுக்கிறார்கள் வர்த்தகர்கள். அதாவது அவர்களது லாபத்தில் நாமும் பங்கு போட்டுக் கொள்கிறோம்.

    தரமான பொருளை பேரம் பேசி வாங்குவது எப்போதும் லாபகரமானதே என்கின்றனர், அனுபவசாலிகள். இந்த லாபம் மொத்தமாக பணம் கொடுத்து வாங்குபவர்களுக்கு மட்டும், அதுவும் சிறிய நிறுவனமாக இருந்தால் கிடைக்கும். பேரம் பேச வாய்ப்பில்லாத பெரிய நிறுவனங்களில் கிடைக்காது. ஆனால் பெரு நிறுவனங்கள் வாடிக்கையாளர்களை வேறு வகையில் இழுக்கத்தான் செய்கின்றன. கிரெடிட் கார்டு, டெபிட் கார்டு மூலம் வாங்குபவர்களுக்கு இந்த ஆதாயம் சென்று சேர்கிறது.

    இப்போதெல்லாம் பெரும்பாலும் யாரும் பணத்தை எடுத்து செல்வதில்லை என்பதால், கார்டு மூலம் வாங்குபவர்களுக்கு மட்டும் சலுகைகளை கொடுக்கின்றன, வர்த்தக நிறுவனங்கள்.

    கேஷ் பேக் ஆபர், ரிவார்டு பாயிண்ட் என்கிற பெயர்களில் இந்த சலுகைகள் கிடைக்கின்றன. இதில் கிரெடிட் கார்டு நிறுவனங்கள் சம்பந்தப்பட்டு இருந்தாலும், வர்த்தக நிறுவனங்களுக்கும் கூட்டு உள்ளது. விற்பனையில் இத்தனை சதவீதம் பணத்தை திரும்ப அளிக்கும் ஆபர்களால், வாடிக்கையாளரைகளை ஈர்த்து தங்கள் வர்த்தகத்தை நிறுவனங்கள் அதிகரித்துக் கொள்கின்றன.

    குறிப்பிட்ட வர்த்தக நிறுவனத்தில் செலவு செய்யும் தொகைக்கு ஏற்ப, கிப்ட் வவுச்சர்களை சில கிரெடிட் கார்டு நிறுவனங்கள் வழங்குகின்றன. உதாரணமாக குறிப்பாக சில பல்பொருள் அங்காடியில் 3500 ரூபாய்க்கு கிரெடிட் கார்டு மூலம் செலவு செய்தால், 500 ரூபாய் கிப்ட் வவுச்சர் என்றெல்லாம் அறிவிக்கப்படுகின்றன. இப்படி செலவு செய்யும் தொகையை பொறுத்து, கிரெடிட் கார்டு வகைக்கு ஏற்ப கிப்ட் வவுச்சர்கள் கிடைக்கும். இந்த கிப்ட் வவுச்சர் விவரங்களை சம்பந்தப்பட்ட கிரெடிட் கார்டு நிறுவன இணைய தளங்களில் கொடுத்துள்ளனர். கிரெடிட் கார்டை பயன்படுத்தும் போது நமது எதிர்கால வருமானத்தை நம்பி கடன் வாங்குகிறோம் என்கிற எச்சரிக்கை உணர்வும் இருக்கத்தான் வேண்டும்.
    Next Story
    ×