search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    வீட்டில் தனியாக இருக்கும் பெண்கள் கவனிக்க வேண்டியவை
    X
    வீட்டில் தனியாக இருக்கும் பெண்கள் கவனிக்க வேண்டியவை

    வீட்டில் தனியாக இருக்கும் பெண்கள் கவனிக்க வேண்டியவை

    வீட்டில் தனியாக இருக்கும் பெண்கள் கட்டாயம் தங்களது அண்டை வீட்டாருடன் அறிமுகம் ஆகிக்கொள்ள வேண்டும். ஏதேனும் ஆபத்து ஏற்படும் போது அக்கம் பக்கம் உள்ளவர்கள் உடனடியாக உதவிக்கு வருவார்கள்.
    பெண்கள் எப்பொழுதும் தங்கள் பாதுகாப்பு விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும். குறிப்பாக வீட்டில் தனியாக இருக்கும் பெண்கள் மிகுந்த எச்சரிக்கை உணர்வுடன் இருக்க வேண்டும். ஏனெனில் பெண்களுக்கு எதிரான பெரும்பாலான குற்றங்கள் வீட்டில் தனியாக இருக்கும் பெண்களையே அதிகம் குறிவைக்கின்றன.

    தனிமையில் இருப்பது அமைதியையும் ஆனந்தத்தையும் தரும் என்றாலும், அதில் ஆபத்தும் உள்ளது என்பதை முதலில் உணர வேண்டும். எனவே தன்னை மறந்து தொலைக்காட்சி மற்றும் சமூக வலைத்தளங்களில் மூழ்கி இருப்பதை தவிர்க்க வேண்டும்.

    வீட்டில் தனியாக உள்ள பெண்களுக்கு மிகப்பெரிய எதிரி பயம்தான். எந்த சூழ்நிலையையும் பயமில்லாமல் தைரியத்தோடு எதிர்கொள்ள வேண்டும்.

    இன்றைய வாழ்க்கை சூழ்நிலையில் பலருக்கும் தங்கள் அருகில் வசிப்பவர்களை பற்றி அறிந்து கொள்ள நேரமும், விருப்பமும் இருப்பதில்லை. வீட்டில் தனியாக இருக்கும் பெண்கள் கட்டாயம் தங்களது அண்டை வீட்டாருடன் அறிமுகம் ஆகிக்கொள்ள வேண்டும். ஏதேனும் ஆபத்து ஏற்படும் போது அக்கம் பக்கம் உள்ளவர்கள் உடனடியாக உதவிக்கு வருவார்கள்.

    அறிமுகம் இல்லாதவர்களுக்கு வீட்டு முகவரியை கொடுப்பதை தவிர்க்க வேண்டும். நீங்கள் ஒரு அப்பார்ட்மெண்டில் வசிக்கிறீர்கள் என்றால் இணையத்தில் பொருட்கள் ஆர்டர் செய்யும் போது உங்கள் கதவு எண்ணுக்கு பதிலாக அப்பார்ட்மெண்ட் எண்ணை மட்டும் கொடுக்கலாம். டெலிவரி செய்பவர்களை அப்பார்ட்மெண்ட் வாசலுக்கு வந்து உங்களை தொடர்பு கொள்ளும் படி அறிவுறுத்தலாம். அப்பார்ட்மெண்ட் வாசலில் உள்ள பாதுகாவலர் பகுதியில் நீங்கள் அவற்றை பெற்று கொள்ளலாம்.

    பெண்களின் பாதுகாப்பை மையமாககொண்டு ஏராளமான பாதுகாப்பு செயலிகள் இணையத்தில் தரவிறக்கம் செய்து பயன்பாட்டில் வைத்து கொள்வது நல்லது. அவசர அலாரங்களை அமைத்தல் ஆடியோ பதிவுகளை அனுப்புதல் ஒரே நேரத்தில் பல அவசர எண்களுக்கு செய்திகளை அனுப்புதல் ஜி.பி.எஸ். இருப்பிடங்களை அனுப்புதல் போன்ற செயலிகளை தரவிறக்கம் செய்து பயன்பாட்டில் வைத்து கொள்ள வேண்டும்.

    நம்முடைய பாதுகாப்பிற்கு தொழில் நுட்ப  வசதிகளை பயன்படுத்தி கொள்ள வேண்டும். ஸ்மார்ட்போன் வழியாகவே வீட்டில் உள்ள மின்விளக்குகளை எரிய வைக்கும் வசதி, பாதுகாப்பு உபகரணங்களை செயல்பட வைக்கும் வசதி போன்றவை தற்போது பயன்பாட்டில் உள்ளன. அறிமுகம் இல்லாதவர்கள் வீட்டிற்குள் நுழைவது போன்ற ஆபத்தை நீங்கள் உணரும்போது ஒரு அறையிலிருந்தே மற்ற அறைகளின் மின் விளக்குகளை எரிய விடுதல், தொலைக்காட்சியை செயல்பட வைத்தல் போன்றவைகளை செய்யலாம்.

    இதனால் வீட்டுக்குள் நுழைய முற்படும் நபர்களுக்கு நீங்கள் வீட்டில் தனியாக இல்லை, ஒன்றுக்கு மேற்பட்ட நபர்கள் உள்ளனர் எனும் எச்சரிக்கையை கொடுக்கலாம். இதன் மூலம் ஆபத்துகளை தவிர்க்க முடியும்.
    Next Story
    ×