என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
லைஃப்ஸ்டைல்
X
பெண்களின் பணி அழுத்தத்தை தவிர்க்க
Byமாலை மலர்18 Feb 2021 7:23 AM GMT (Updated: 18 Feb 2021 7:23 AM GMT)
வேலை, குடும்பம், என இரட்டை குதிரையில் சவாரி செய்பவர்களுக்கு எப்போதும் சவால் தான். பணி அழுத்தம் மன அழுத்தமாகி உடலையும், மனதையும் பாதிக்காமல் தவிர்க்க மூன்று ஆலோசனைகள் இதோ...
வேலை, குடும்பம், என இரட்டை குதிரையில் சவாரி செய்பவர்களுக்கு எப்போதும் சவால் தான். பணி அழுத்தம் மன அழுத்தமாகி உடலையும், மனதையும் பாதிக்காமல் தவிர்க்க மூன்று ஆலோசனைகள் இதோ...
குறைந்த நேரத்தில் அதிக வேலைகளை செய்துமுடிக்க வேண்டிய கட்டாயம் ஏற்படலாம். இது உங்களுக்கு மட்டுமே என்றில்லாமல் பொதுவாக பலரும் சந்திக்கக்கூடிய ஒன்று தான். இதனை எதிர்கொள்ள சரியான திட்டமிடல் அவசியம். இன்று என்ன வேலைகள் எல்லாம் செய்ய வேண்டும்?எதை முதலில் முடிக்க வேண்டும். அதிக முக்கியத்துவம் வாய்ந்தது எது? அவசர வேலை எது? அவசிய வேலை எது? என் ஒரு பட்டியலிட்டால் வேலை சுலபமாகும். பட்டியலிட ஆகும் நேரத்தை மிச்சப்படுத்துவதாக எண்ணி அதனை தவிர்க்க வேண்டாம். சரியான திட்டமிடலுடன் கூடிய பட்டியலால் நேரமும் மிச்சமாகும்.
ஓய்வு என்பது உறங்குவதுஅல்ல. ஒரு வேலையிலிருந்து மற்றொரு வேலையை மாற்றி செய்வதும் ஒய்வுதான். எனவே வேலை நேரம் தவிர்த்து மீதி நேரங்களில் நடைப்பயணம், சூடான குளியல், யோகா மற்றும் தியானம் என உங்களுக்கு பிடித்தமானவற்றை செய்தால் மனம் ஒருநிலைப்படும். பணி நேரத்தில் கவனச்சிதறல் ஏற்படாமல் இருக்க வழிவகுக்கும். பாடல் கேட்பது, டான்ஸ் ஆடுவது ஏன் சற்றுநேரம் மொபைலோ, டிவியோ பார்க்காமல் கண்கள் மூடி சும்மா இருப்பதும் கூட நல்லது தான்.
சில நேரங்களில் நாம் நினைத்தபடி வேலை நடக்காமல் போகலாம். அப்போது எரிச்சலும் கோபமும் வரக்கூடும். அந்த சூழலை எப்படி எளிதாக கையாள்வது என்று அடுத்த கட்டத்தை நோக்கிதான் சிந்திக்க வேண்டும். இப்படியாகிவிட்டதே என்று எதிர்மறையாக எண்ணாமல், அடுத்து என்ன செய்வது என்று நேர்மறையாக யோசிப்பதே சரியானதாகும். எல்லாம் சீராகத்தான் இருக்கிறது என்ற எண்ணத்தை ஏற்படுத்திக்கொண்டு வேலையை தொடங்கினால் அந்த சூழல் பாஸிட்டிவாக மாறும்.
குறைந்த நேரத்தில் அதிக வேலைகளை செய்துமுடிக்க வேண்டிய கட்டாயம் ஏற்படலாம். இது உங்களுக்கு மட்டுமே என்றில்லாமல் பொதுவாக பலரும் சந்திக்கக்கூடிய ஒன்று தான். இதனை எதிர்கொள்ள சரியான திட்டமிடல் அவசியம். இன்று என்ன வேலைகள் எல்லாம் செய்ய வேண்டும்?எதை முதலில் முடிக்க வேண்டும். அதிக முக்கியத்துவம் வாய்ந்தது எது? அவசர வேலை எது? அவசிய வேலை எது? என் ஒரு பட்டியலிட்டால் வேலை சுலபமாகும். பட்டியலிட ஆகும் நேரத்தை மிச்சப்படுத்துவதாக எண்ணி அதனை தவிர்க்க வேண்டாம். சரியான திட்டமிடலுடன் கூடிய பட்டியலால் நேரமும் மிச்சமாகும்.
ஓய்வு என்பது உறங்குவதுஅல்ல. ஒரு வேலையிலிருந்து மற்றொரு வேலையை மாற்றி செய்வதும் ஒய்வுதான். எனவே வேலை நேரம் தவிர்த்து மீதி நேரங்களில் நடைப்பயணம், சூடான குளியல், யோகா மற்றும் தியானம் என உங்களுக்கு பிடித்தமானவற்றை செய்தால் மனம் ஒருநிலைப்படும். பணி நேரத்தில் கவனச்சிதறல் ஏற்படாமல் இருக்க வழிவகுக்கும். பாடல் கேட்பது, டான்ஸ் ஆடுவது ஏன் சற்றுநேரம் மொபைலோ, டிவியோ பார்க்காமல் கண்கள் மூடி சும்மா இருப்பதும் கூட நல்லது தான்.
சில நேரங்களில் நாம் நினைத்தபடி வேலை நடக்காமல் போகலாம். அப்போது எரிச்சலும் கோபமும் வரக்கூடும். அந்த சூழலை எப்படி எளிதாக கையாள்வது என்று அடுத்த கட்டத்தை நோக்கிதான் சிந்திக்க வேண்டும். இப்படியாகிவிட்டதே என்று எதிர்மறையாக எண்ணாமல், அடுத்து என்ன செய்வது என்று நேர்மறையாக யோசிப்பதே சரியானதாகும். எல்லாம் சீராகத்தான் இருக்கிறது என்ற எண்ணத்தை ஏற்படுத்திக்கொண்டு வேலையை தொடங்கினால் அந்த சூழல் பாஸிட்டிவாக மாறும்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X