என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
லைஃப்ஸ்டைல்
X
பெண்களே உங்களுக்காக ஏன் சிறிது நேரம் ஒதுக்க கூடாது?
Byமாலை மலர்16 Feb 2021 8:28 AM GMT (Updated: 16 Feb 2021 8:28 AM GMT)
பெண்களாகிய நாம் குடும்பத்தினரின் தேவைக்காக நேரம் ஒதுக்கும் நாம் நமக்கே நமக்காக என்று ஒருநாளில் சிறிது நேரம் ஒதுக்குகிறோமா? என நம்மை நாம் கேள்வி கேட்போம். இல்லை என்பதே பெரும்பான்மையோரின் பதிலாக இருக்கும்.
பெண்களாகிய நாம் குடும்பத்தினரின் தேவைக்காக நேரம் ஒதுக்குதல், அலுவலகப்பணிகளுக்காக நேரம் ஒதுக்குதல், தொழிலை முன்னேற்ற நேரம் ஒதுக்குதல் என்று நேரத்தை மிக நேர்த்தியாக திட்டமிட்டு கையாள்கிறோம், அதே நேரத்தில் நமக்கே நமக்காக என்று ஒருநாளில் சிறிது நேரம் ஒதுக்குகிறோமா? என நம்மை நாம் கேள்வி கேட்போம். இல்லை என்பதே பெரும்பான்மையோரின் பதிலாக இருக்கும்.
எல்லாவற்றுக்கும் நேரம் ஒதுக்கும் நாம் நமக்காக ஏன் சிறிது நேரம் ஒதுக்க கூடாது? நம்மை பராமரித்து கொள்வதற்கும் ஆற்றுப்படுத்துவதற்கும் நாம் நிச்சயம் நமக்காக நேரத்தை ஒதுக்க வேண்டும். அந்த நேரத்தில் நமக்கு பிடித்த கைவினை பொருளை செய்வது ஜன்னல் ஓரத்தில் அமர்ந்து சூடான தேநீரை ருசித்து பருகுவது என்று எதை வேண்டுமானலும் செய்யலாம்.
ஒருநாளில் ஐந்து நிமிடம் மட்டும் தான் உங்களுக்காக கிடைக்கிறது என்றால் சிறிதும் தாமதிக்காமல் அந்த நேரத்தை உங்களுக்காக செலவிடுங்கள். அந்த ஐந்து நிமிட நேரத்தில் சிறிது நேரம் வெளியில் நடக்கலாம். அமைதியாக உட்கார்ந்து ஆழமாக சுவாசிக்கலாம்.
பொதுவாக நீங்கள் தினமும் எழுந்திருக்கும் நேரத்திற்கு 15 நிமிடங்கள் முன்பாக எழுந்தீர்கள் என்றால் அந்த பதினைந்து நிமிட நேரத்தில் ஒரு பத்திரிக்கை படித்தல், நடைப்பயிற்சி செய்தல், தியானத்தில் ஈடுபடுதல் அல்லது உங்களை ஆற்றுப்படுத்தும் எந்த ஒரு செயலிலும் ஈடுபட முடியும்.
உங்களை ஆரோக்கியமாக வைத்திருக்க உங்களுக்காக நேரத்தை ஒதுக்குவது மிக முக்கியம் என்பதை நினைவில் கொள்ளுங்கள். இதனால் நாம் ஆற்றும் எந்த கடமையிலும் நம்மால் மேலும் சிறப்பாக செயலாற்ற முடியும்.
எல்லாவற்றுக்கும் நேரம் ஒதுக்கும் நாம் நமக்காக ஏன் சிறிது நேரம் ஒதுக்க கூடாது? நம்மை பராமரித்து கொள்வதற்கும் ஆற்றுப்படுத்துவதற்கும் நாம் நிச்சயம் நமக்காக நேரத்தை ஒதுக்க வேண்டும். அந்த நேரத்தில் நமக்கு பிடித்த கைவினை பொருளை செய்வது ஜன்னல் ஓரத்தில் அமர்ந்து சூடான தேநீரை ருசித்து பருகுவது என்று எதை வேண்டுமானலும் செய்யலாம்.
ஒருநாளில் ஐந்து நிமிடம் மட்டும் தான் உங்களுக்காக கிடைக்கிறது என்றால் சிறிதும் தாமதிக்காமல் அந்த நேரத்தை உங்களுக்காக செலவிடுங்கள். அந்த ஐந்து நிமிட நேரத்தில் சிறிது நேரம் வெளியில் நடக்கலாம். அமைதியாக உட்கார்ந்து ஆழமாக சுவாசிக்கலாம்.
பொதுவாக நீங்கள் தினமும் எழுந்திருக்கும் நேரத்திற்கு 15 நிமிடங்கள் முன்பாக எழுந்தீர்கள் என்றால் அந்த பதினைந்து நிமிட நேரத்தில் ஒரு பத்திரிக்கை படித்தல், நடைப்பயிற்சி செய்தல், தியானத்தில் ஈடுபடுதல் அல்லது உங்களை ஆற்றுப்படுத்தும் எந்த ஒரு செயலிலும் ஈடுபட முடியும்.
உங்களை ஆரோக்கியமாக வைத்திருக்க உங்களுக்காக நேரத்தை ஒதுக்குவது மிக முக்கியம் என்பதை நினைவில் கொள்ளுங்கள். இதனால் நாம் ஆற்றும் எந்த கடமையிலும் நம்மால் மேலும் சிறப்பாக செயலாற்ற முடியும்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X