
விலை அதிகமாக இருக்கும் பட்சத்தில் தவணை முறையை தேர்ந்தெடுக்கலாம். அதுவும் அதிக மாதங்கள் நீடிக்க அனுமதிக்கக்கூடாது. அது வட்டிவிகிதத்தை அதிகப்படுத்தி விடும். சரியான நேரத்தில் பொருட்களை வாங்குவதும் முக்கியமானது. சில பொருட்கள் அந்தந்த பருவ காலங்களுக்குத்தான் தேவைப்படும். அந்த சமயத்தில் பெரும்பாலான நிறுவனங்கள் சலுகை விலைகளை அறிவிக்கும். அப்போது வாங்குவது புத்திசாலித்தனமானது. விலையும் குறைவாக இருக்கும் என்பதால் பட்ஜெட்டுக்கு பங்கம் நேராது.
கண்களில் தென்படும் அழகழகான பொருட்களை பார்க்கும்போதெல்லாம் அவைகளை வாங்குவதற்கு மனம் ஏங்கும். வீட்டிலேயே வாங்கும் பொருட்களை பற்றி திட்டமிட்டு அதற்கான நிதியை ஒதுக்கிவிட்டுத்தான் நிறைய பேர் கடைக்கு செல்வார்கள். ஆனால் கடைக்கு சென்றதும் கண்ணில்பட்ட பொருட்களையெல்லாம் வாங்கிவிடுவார்கள். அப்போது சிலர் வாங்க நினைத்திருந்த பொருட்களையே மறந்துவிடுவார்கள். அது கடனாளி ஆக்கிவிடும். நிதி திட்டமிடல் என்பது முதலீடு போன்றது. அதனை புரிந்துகொண்டு முறையாக செலவழிக்க வேண்டியது அவசியமானது.