search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    குடும்பங்களில் பிரச்சனை யாரால் வருகிறது தெரியுமா?
    X

    குடும்பங்களில் பிரச்சனை யாரால் வருகிறது தெரியுமா?

    கணவனால் தான் வீட்டில் அதிக பிரச்சனைகள் ஏற்படுகின்றன. அதனை சரிகட்ட மனைவின் மேல் பழியை போடுகிறார்கள்
    குடும்பம் என்பது ஒவ்வொரு தனி மனிதனையும் சுற்றியே உள்ளது. வீட்டு தலைவனை பொருத்த மட்டில் மனைவி, குழந்தைகள், பெற்றோர் அவன் குடும்பம்... இது ஒவ்வொருவர் மனபான்மையில் மறுபடும்.

    குடும்பத்தில் பிரச்சைனைகள் பலவற்றுக்கும் காரணம் நம் மனம் தான். நாம் எப்பொழுது நம் வாழ்க்கையை ஒப்பிட்டு பார்ப்பதை நிறுத்துகிறோமோ அன்று நிச்சயம் பிரச்சைனைகள் குறைந்து விட்டது போல தோன்றும்.

    பிரச்சனை இல்லாத குடும்பம் இருக்க முடியாது. ஆனால் அவை எல்லையைக் கடக்கும் பொழுதுதான் பிரச்சனை பெரிய இடியாக அந்தக் குடும்பத்தை தாக்கி சின்னாபின்னமாக்கி விடுகின்றது. பிரச்சனைகள் பலவிதம் கணவன் மனைவிக்குள் பிரச்சனை, குழந்தைகளால் வரும் பிரச்சனை, குடும்பத்தாரால் வரும் பிரச்சனை, சில நேரங்களில் நண்பர்களால் கூட பிரச்சனைகள் வரும்.

    ஆனால் கல்யாணமாகி ஒருசில மாதமானாலும் சரி, பல வருடங்கள் ஆகியிருந்தாலும் சரி பிரச்சனை ஏற்ப்பட்டு கணவனும் மனைவியும் சண்டை போட்டுக் கொண்டு பிரிந்துப் போகும் நிலமை தற்காலத்தில் ஒரு நோயைப் போன்று பரவி வருவதைக் அதிகமாக காணமுடிகின்றது.

    இதுபோன்ற பிரச்சனையை மனைவியை விட கணவன் மனது வைத்தால் நிச்சயமாக நிறுத்த முடியும். எவ்வளவு பெரிய குடும்பப் பிரச்சனையையும் அவர்கள் நினைத்தால் தவிடு பொடியாக்க முடியும். ஆனால் பெரும்பான்மையான ஆண்கள் ஏனோ அதைச் செய்ய முற்படுவதில்லை.

    கணவனால் தான் பெரும்பான்மையான குடும்பங்கள் பிரியக் காரணமாக இருக்க முடியுமே ஒழிய நிச்சயம் ஒரு மனைவியாக இருக்க முடியாது. வீணாக அவர்கள் மீது வீண்பழியைச் சுமத்தி தப்பிப்பதும் ஆண்களாகத் தான் இருக்க முடியம். இதோடு மட்டுமல்லாமல் குடும்பங்களில் பொதுவாக ஏற்படும் பிரச்சனைகள் பெரிதாவதற்க்கும் காரணம் ஆண்கள் தானே ஒழிய பெண்களால் அல்ல.

    கணவனால் தான் வீட்டில் அதிக பிரச்சனைகள் ஏற்படுகின்றன. அதனை சரிகட்ட மனைவின் மேல் பழியை போடுகிறார்கள்  கணவன்மார்கள் சிறிது விட்டு கொடுத்து போனாலே போதும். வீட்டில் நிம்மதியும் சந்தோசமும் தானாக வந்து விடும். இதனை ஆண்கள் எப்போது உணர்வார்கள் என்றால் அவர்களுக்கு வயதாகும் போது தான் பொண்டாட்டியின் அருமை புரியும்.

    அடடா நம்ம எத்தகைய சந்தோசத்தை இழந்து விட்டோமென்று அவர்களுக்கு புரியும். கண்கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் செய்து என்ன பிரயோஜனம்? வீட்டில் கணவனுக்கு பிடித்ததை பார்த்து பார்த்து மனைவியானவள் சமைத்து கொடுக்கிறாள். குழந்தை பிறந்தவுடன் குழந்தையும் கவனித்து கொண்டு வீட்டையும் கவனித்து கொள்கிறாள். அதற்கு எத்தனை எத்தனை பொறுமையும் அன்பும் நிதானமும் தேவை. அத்தகைய குணங்கள் கொண்டவள் மனைவி. இத்தகைய குணங்கள் கொண்ட மனைவியால் வீட்டில் பிரச்சனைகள் வர வாய்ப்பே இல்லை.

    அனைவரின் எண்ணங்களும் ஒன்று போல் இருந்தால், வாழ்க்கை சலித்து விடும், ஆகவே மற்றவரின் மாற்று எண்ணங்களை ஒத்து கொள்கிறோமோ இல்லையோ மதிக்க தெரிந்து கொண்டால் பல பிரச்சைனைகள் இல்லாமல் போய் விடும். இதில் ஆண்களும் சரி பெண்களும் இருவருமே மாற்றத்தை உணர வேண்டியவர்கள் தான்.
    Next Story
    ×