என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
பெண்கள் மருத்துவம்
X
கர்ப்பகாலத்தில் கடல் உணவுகள் சாப்பிடலாமா?
Byமாலை மலர்20 April 2022 7:24 AM GMT (Updated: 20 April 2022 7:24 AM GMT)
கர்ப்ப காலத்தில் கடல் உணவை சாப்பிட்ட தாய்மார்கள், சாப்பிடாத தாய்மார்கள் மற்றும் அவர்களின் குழந்தைகளின் செயல்பாட்டை மதிப்பீடு செய்திருக்கிறார்கள்.
கர்ப்பிணி பெண்கள் ஆரோக்கியமான உணவுகளை சாப்பிடுவதற்கு அறிவுறுத்தப்படுகிறார்கள். அது வயிற்றில் வளரும் குழந்தையின் ஆரோக்கியத்திற்கு நேரடியாக வலு சேர்க்கிறது. கர்ப்ப காலத்தில் சாப்பிட வேண்டிய உணவுகள் பல இருக்கின்றன. அந்த பட்டியலில் புதிதாக கடல் உணவுகளையும் இணைத்திருக்கிறார்கள்.
இது தொடர்பாக ஆய்வு மேற்கொண்ட ‘பார்சிலோனா இன்ஸ்டிடியூட் பார் குளோபல் ஹெல்த்’ நிறுவனத்தின் விஞ்ஞானிகள் குழுவினர் கர்ப்ப காலத்தில் கடல் உணவு உட்கொள்வதற்கும், குழந்தைகளின் அறிவாற்றல் செயல்பாட்டிற்கும் இடையே வலுவான தொடர்பு இருப்பதை கண்டறிந்துள்ளனர். கர்ப்ப காலத்தின் ஆரம்ப கட்டத்தில் மிருதுவான, கொழுப்பு நிறைந்த மீன்களை உட்கொள்ள வேண்டும் என்று பரிந்துரை செய்துள்ளார்கள். அப்படி சாப்பிடுவது குழந்தைகளின் அறிவாற்றலையும், ஆழ்ந்து கவனிக்கும் திறனையும் மேம்படுத்த வழிவகுக்கும் என்றும் கூறுகிறார்கள்.
குழந்தையின் மூளை வளர்ச்சி மற்றும் நரம்பணுக்கள் உருவாக்கம் கர்ப்ப காலத்தில் தொடங்குகிறது. அவற்றின் செயல்பாட்டிற்கு ஒமேகா - 3, பாலி அன்சாச்சுரேட்டட் கொழுப்பு அமிலங்கள் போன்ற அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. கடல் உணவுகள் மூலம் இந்த வகையான ஊட்டச்சத்துக்களை நிவர்த்தி செய்து கொள்ளலாம் என்பது விஞ்ஞானிகளின் கருத்தாக இருக்கிறது.
இந்த ஆய்வுக்கு 1644 தாய்மார்கள் மற்றும் அவர்களின் குழந்தைகள் உட்படுத்தப்பட்டனர். கர்ப்ப காலத்தில் கடல் உணவை சாப்பிட்ட தாய்மார்கள், சாப்பிடாத தாய்மார்கள் மற்றும் அவர்களின் குழந்தைகளின் செயல்பாட்டை மதிப்பீடு செய்திருக்கிறார்கள். பல்வேறு வகையான கடல் மீன் உணவுகளை சாப்பிட்ட தாய்மார்களின் குழந்தைகள் பரிசோதனையில் சிறப்பாக செயல்பட்டிருக்கிறார்கள். ஆனால் கடல் உணவுகளை சாப்பிடாத தாய்மார்களின் குழந்தைகள் பின்தங்கி இருக்கிறார்கள். அதேவேளையில் எல்லா வகையான கடல் உணவுகளையும் சாப்பிடக்கூடாது. டாக்டரிடம் ஆலோசித்து ஒமேகா 3 கொழுப்பு அமிலம் நிறைந்த மீன் வகைகளை தேர்ந்தெடுத்து சாப்பிடுவது நல்லது.
இது தொடர்பாக ஆய்வு மேற்கொண்ட ‘பார்சிலோனா இன்ஸ்டிடியூட் பார் குளோபல் ஹெல்த்’ நிறுவனத்தின் விஞ்ஞானிகள் குழுவினர் கர்ப்ப காலத்தில் கடல் உணவு உட்கொள்வதற்கும், குழந்தைகளின் அறிவாற்றல் செயல்பாட்டிற்கும் இடையே வலுவான தொடர்பு இருப்பதை கண்டறிந்துள்ளனர். கர்ப்ப காலத்தின் ஆரம்ப கட்டத்தில் மிருதுவான, கொழுப்பு நிறைந்த மீன்களை உட்கொள்ள வேண்டும் என்று பரிந்துரை செய்துள்ளார்கள். அப்படி சாப்பிடுவது குழந்தைகளின் அறிவாற்றலையும், ஆழ்ந்து கவனிக்கும் திறனையும் மேம்படுத்த வழிவகுக்கும் என்றும் கூறுகிறார்கள்.
குழந்தையின் மூளை வளர்ச்சி மற்றும் நரம்பணுக்கள் உருவாக்கம் கர்ப்ப காலத்தில் தொடங்குகிறது. அவற்றின் செயல்பாட்டிற்கு ஒமேகா - 3, பாலி அன்சாச்சுரேட்டட் கொழுப்பு அமிலங்கள் போன்ற அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. கடல் உணவுகள் மூலம் இந்த வகையான ஊட்டச்சத்துக்களை நிவர்த்தி செய்து கொள்ளலாம் என்பது விஞ்ஞானிகளின் கருத்தாக இருக்கிறது.
இந்த ஆய்வுக்கு 1644 தாய்மார்கள் மற்றும் அவர்களின் குழந்தைகள் உட்படுத்தப்பட்டனர். கர்ப்ப காலத்தில் கடல் உணவை சாப்பிட்ட தாய்மார்கள், சாப்பிடாத தாய்மார்கள் மற்றும் அவர்களின் குழந்தைகளின் செயல்பாட்டை மதிப்பீடு செய்திருக்கிறார்கள். பல்வேறு வகையான கடல் மீன் உணவுகளை சாப்பிட்ட தாய்மார்களின் குழந்தைகள் பரிசோதனையில் சிறப்பாக செயல்பட்டிருக்கிறார்கள். ஆனால் கடல் உணவுகளை சாப்பிடாத தாய்மார்களின் குழந்தைகள் பின்தங்கி இருக்கிறார்கள். அதேவேளையில் எல்லா வகையான கடல் உணவுகளையும் சாப்பிடக்கூடாது. டாக்டரிடம் ஆலோசித்து ஒமேகா 3 கொழுப்பு அமிலம் நிறைந்த மீன் வகைகளை தேர்ந்தெடுத்து சாப்பிடுவது நல்லது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X