என் மலர்tooltip icon

    பெண்கள் உலகம்

    பிரசவத்தை சிக்கலாக்கும் உடல் வறட்சி
    X

    பிரசவத்தை சிக்கலாக்கும் உடல் வறட்சி

    கர்ப்பமாக இருக்கும் போது உடல் வறட்சி அடைந்தால் பிரசவமானது சிரமமாகிவிடும் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.




    dehydration during pregnancy

    கர்ப்பமாக இருக்கும் போது பெண்கள் ஒரு நாளைக்கு குறைந்தது 10-12 டம்ளர் தண்ணீராவது குடிக்க வேண்டும். அப்போது தான் உடலில் நீர்ச்சத்தானது அதிகம் இருந்து, பிரசவமானது எளிதாக இருக்கும். அவ்வாறு இல்லாமல் உடல் வறட்சியாக இருந்தால் அந்த பிரசவமானது சிரமமாகிவிடும் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். மேலும் கர்ப்பமாக இருக்கும் போது தண்ணீர் குடிக்காமல் இருந்தால் உடலில் ஒரு சில மாற்றங்களும் தெரியும் என்றும் சொல்கின்றனர்.

    மேலும் தண்ணீர் குடிக்க முடியவில்லை என்றாலும் ஒரு டம்ளர் பழ ஜூஸ் ஆவது குடிக்க வேண்டும். அதுமட்டுமல்லாமல் சாதாரணமாக இருக்கும் போது உடலில் இருக்கும் சக்தியானது, கர்ப்பமாக இருக்கும் போது இருக்காது. ஏனெனில் அப்போது உண்ணும் அனைத்துமே கருவில் இருக்கும் குழந்தைக்கு செல்லும். மேலும் சில காரணங்களாலும் சக்தியானது வெளியேறும் என்றும் மருத்துவர்கள் கூறுகின்றனர்.

    பிரசவத்தின் போது உடலில் இரத்தத்தின் அளவு அதிகரித்து, உடலில் இருக்க வேண்டிய நீர்மத்தன்மையுள்ள பொருளை நீண்ட நேரம் தக்க வைக்க முடியாமல் போய்விடும். மேலும் கருப்பையில் இருக்கும் ஆம்னியான் நீர் குறைவாக இருந்தால், கருவில் இருக்கும் குழந்தையானது கருப்பையில் இருக்க முடியாமல், விரைவில் வெளியே வந்துவிடும். இந்த நிலையிலேயே குறைபிரசவம் ஏற்படுகிறது. இதனால் குழந்தைக்கு கை, கால் ஊனம் ஏற்படவும் வாய்ப்புகள் உள்ளது.

    சாதாரணமாக இருக்கும் போது உடலில் இருந்து வெளியேறும் வெப்பமானது, பிரசவத்தின் போது வெளியேறாது உடலிலேயே தங்கிவிடும். இதற்கு காரணம் நீர்ச்சத்து உடலில் இல்லாததே. ஆகவே உடலில் உள்ள வெப்பத்தை சரியாக வைக்க அதிகமாக தண்ணீரானது குடிக்க வேண்டும். மேலும் அவ்வாறு வெப்பம் உடலிலேயே இருந்தால் காய்ச்சல் வருவது போல் இருக்கும், அப்போது அந்த காய்ச்சலானது குழந்தைக்கும் வரும். இந்த நிலை முடிவில் குழந்தையின் மூளையை பாதித்து மூளைக்குறைபாட்டை ஏற்படுத்தும்.

    உடல் வறட்சியானது மலச்சிக்கல் மற்றும் தாய்ப்பால் உற்பத்தியில் குறைபாடு போன்றவற்றை ஏற்படுத்தும். மேலும் சிறுநீரகத்தில் பிரச்சனையை உண்டுபண்ணும். அதுமட்டுமல்லாமல் தாய்க்கு பாதிப்பை ஏற்படுத்துதை விட குழந்தையின் சிறுநீரகம் மற்றும் கல்லீரலையும் பாதிக்கும். மேலும் தாயின் உடலில் இரத்தக் குறைபாட்டை ஏற்படுத்தும்.

    சொல்லப்போனால், தாய், சேய் இருவருக்குமே மிகுந்த ஆபத்தை ஏற்படுத்தும் என்று கூறுகின்றனர் மருத்துவர்கள். உடலை சரியாக முறையாக பராமரித்து, பாதுகாத்து வந்தால் தாய் சேய் ஆகிய இரு உயிருமே நலமோடு ஆரோக்கியமாக இருக்கலாம். எனவே தண்ணீரை அதிகமாக குடிங்க!!! குழந்தையை ஆரோக்கியமா பெற்றெடுங்க!!!
    Next Story
    ×