search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    மனைவி இன்றிரவு உங்களோடு உறவில் ஈடுபட விரும்புகிறார் என்பதை உணர்த்தும் அறிகுறிகள்
    X

    மனைவி இன்றிரவு உங்களோடு உறவில் ஈடுபட விரும்புகிறார் என்பதை உணர்த்தும் அறிகுறிகள்

    மனைவி இன்றிரவு உங்களோடு உறவில் ஈடுபட விரும்புகிறார் என்பதை சில அறிகுறிகள் மூலம் உணர்த்துவார்கள்.
    ஆண்களுக்கு தான் எல்லாம் தோன்றும் என நினைப்பது தவறு. ஓர் ஆய்வில் ஆண்களை விட உறவில் ஈடுபட மிகுந்த விருப்பம் கொண்டவர்கள் பெண்கள் தான் என்று தெரியவந்துள்ளது. இந்தியா போன்ற நாடுகளில் நாம் பெண்களை கடவுளுக்கு இணையாக மதிப்பதால் அவர்கள் அதை பெரும்பாலும் வெளிப்படையாக கூறுவது இல்லை.

    மற்றும் உடலுறவில் ஈடுபடுவது, நாட்டம் கொள்வது என்பது தவறானது அல்ல. இது மனிதர்கள், மிருகங்கள் என அனைவரிடமும் எழும் சாதாரன உணர்வு தான் இது. அந்த வகையில் வெளிப்படையாக கூற மனமில்லாத பெண்கள், அதை எந்த அறிகுறிகளின் மூலம் வெளிப்படுத்துகிறார்கள் என்பது பற்றி இனிக் காண்போம்…..

    * உங்கள் துணை, உங்களை பார்த்த படியே இடையில் ஒரு கையை வைத்துக் கொண்டு கண்களால் உங்களை கவ்வியப்படி பார்ப்பது முதல் அறிகுறி.

    * இரவு உங்களோடு பேசிக் கொண்டிருக்கும் போது, பேச்சை கவனிக்காது அவ்வப்போது பெருமூச்சு விட்டபடி இருக்கிறார் என்றால் அது தான் இரண்டாவது அறிகுறி.

    * தன்னை தானே கட்டிபிடித்து அமர்ந்திருப்பது உங்கள் தோள்களை கட்டிப்பிடித்திருக்க வேண்டிய கைகள், தன்னை தானே கட்டியணைத்து, தனிமையில் விடப்பட்டது போல கொஞ்சம் இடைவெளி விட்டு அமர்ந்திருப்பது மூன்றாவது அறிகுறி. இங்கே நீங்கள் புரிந்துக் கொள்ள வேண்டும். (இல்லாங்காட்டி…. அம்புட்டு தான்..)

    * நீங்கள் படுக்கையறையில் உடனிருக்கும் போதும், தானாக தனக்கு தானே உளறுவது நான்காவது அறிகுறி.

    - பெரும்பாலும் இந்த அறிகுறி எல்லா பெண்களிடமும் எதிர்பார்க்க முடியாது. ஆனந்த கூத்து என்பது போல, சில அசைவுகளை வெளிப்படுத்துவது தான் இந்த கடைசி அறிகுறி. இதிலும் நீங்கள் கண்டுக்கொள்ளவில்லை எனில், உங்களுக்கும் ஓர் நேரம் வரும் என்பதை மறந்துவிட வேண்டாம்.

    பெண்களுக்கு தங்களுக்கு ஏற்படும் பாலியல் ஆசைகளை தங்கள் கணவருக்கு மறைமுகமாகதான் உணர்த்துவார்கள். அதை நாசூக்காக ஆண்கள் புரிந்து கொண்டால் அன்றைய இரவு மன்மத கொண்டாட்டம் தான்.

    Next Story
    ×