என் மலர்
பெண்கள் மருத்துவம்
பெண்களில் பலர் ஊட்டச் சத்துணவு கிடைக்காத காரணத்தினால் தான் நீரிழிவு, இதயநோய், ரத்தச் சோகை போன்றவற்றுக்கு ஆளாகின்றனர்.
பெரும்பாலான நோய்களுக்கு ஊட்டச்சத்து இல்லாத உணவு வகைகளே காரணம் என பல்வேறு ஆய்வுகளில் தெரியவந்துள்ளது. அதிலும் பெண்களில் பலர் ஊட்டச் சத்துணவு கிடைக்காத காரணத்தினால் தான் நீரிழிவு, இதயநோய், ரத்தச் சோகை போன்றவற்றுக்கு ஆளாகின்றனர். சரிவிகித சத்துணவு வகைகளை உட்கொண்டாலே பெரும்பாலான நோய்களை தவிர்த்து விடலாம்.
அத்திப்பழம் எண்ணற்ற தாதுச் சத்துக்களையும், வைட்டமின்களையும் கொண்டுள்ளது. இது ரத்தத்தில் உள்ள ஹீமோகுளோபின் அணுக்களை அதிகரிக்கிறது. இரும்புச்சத்து, கால்சியம் போன்ற சத்துக்கள் சரிவிகிதமாக கிடைக்கச் செய்கின்றன. எனவே வாரம் இருமுறையாவது அத்திப்பழத்தை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். பெண்கள் உண்ணும் உணவில் கரோட்டினாய்டு சத்துக்கள் அவசியம் இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும். மஞ்சள், ஆரஞ்சு நிற காய்கனிகளில் கரோட்டினாய்டுகள் காணப்படுகின்றன. இந்த உணவு பெண்களுக்கு மார்பக, கர்ப்பப்பை புற்றுநோய் ஏற்படுவதை தடுக்கும்.
தக்காளியில் உள்ள லைகோபீன் பெண்களுக்கு மார்பகப் புற்றுநோய் ஏற்படாமல் தடுக்கிறது. இது மிகச்சக்தி வாய்ந்த ஆன்டி ஆக்சிடென்டுகளை கொண்டுள்ளது. இது இதயநோய் ஏற்படுவதில் இருந்து பாதுகாக்கிறது. பெண்கள் அன்றாட உணவில் தக்காளியை அவசியம் சேர்த்துக் கொள்ள வேண்டும். (இப்போது தக்காளி விற்கும் விலையில் இது சாத்தியமா என்ற கேள்வி எழத்தான் செய்யும். விலை குறையும் போது நன்றாக தக்காளி சாப்பிட பழகிக்கொள்ளுங்கள்).
பெண்கள் அன்றாடம் உண்ணும் உணவில் ஒமேகா 3 கொழுப்பு அமிலம் இருப்பது அவசியம். இந்த ஒமேகா 3 அமிலம், நெத்திலி, கானாங்கெளுத்தி, மத்தி என அனைத்து வகை மீன்களிலும் உள்ளது. எனவே மீன் உணவு அவசியம். ஒமேகா 3 கொழுப்பு அமிலம் மார்பகப் புற்றுநோய் ஏற்படாமல் பாதுகாக்கிறது. எலும்புகளின் ஆரோக்கியத்தை பாதுகாப்பதோடு, மனஅழுத்தம் ஏற்படாமல் தடுக்கிறது.
மீன் தவிர, சோயாபீன்ஸ், வால்நட் போன்றவற்றையும் உட்கொள்ளலாம். இதன் மூலம் இதயநோய்கள், முடக்குவாதம் போன்ற நோய்கள் ஏற்படாமல் தடுக்கலாம்.
பெண்கள் தினசரி இருவேளை பால் அருந்த வேண்டும். பாலில் கால்சியம் சத்து அடங்கியுள்ளது. வைட்டமின் டி சத்தும் தேவையான அளவு கிடைப்பதால் எலும்பு தேய்மான நோய்களை தவிர்க்கமுடியும்.
ஓட்ஸ் உணவில் பெண்களின் ஆரோக்கியத்திற்குத் தேவையான பெரும்பாலான சத்துக்கள் அடங்கியுள்ளன. இது இதய ஆரோக்கியத்திற்கு ஏற்றது. இதில் வைட்டமின் பி-6, போலிக் அமிலம் ஆகியவை அடங்கியுள்ளன. இவை, பெண்களுக்கு உயர்ரத்த அழுத்தம் ஏற்படாமல் தடுப்பதோடு மாதவிடாய் காலச் சிக்கல்களையும் தவிர்க்கிறது.
கீரைகளில் எண்ணற்ற வைட்டமின்களும், தாது உப்புக்களும் அடங்கியுள்ளன. கீரைகளில் உள்ள மெக்னீசியமும் பெண்களுக்கு மாதவிடாய்ச்சிக்கல் ஏற்படாமல் தடுக்கிறது. உடல் பருமனையும் தடுக்கிறது. எனவே தினசரி உணவில் பெண்கள் கீரை உட்கொள்வது அவசியம். ஆக, நல்ல சத்தான சமச்சீர் ஆகாரம் மூலம் நோய்களைத் தடுக்கமுடியும். குடும்பத்தின் அச்சாணி பெண்கள் என்பதால் அவர்கள் ஆரோக்கியமாக இருந்தால் குடும்பமே ஆரோக்கிய குடும்பமாக மாறிவிடும்.
அத்திப்பழம் எண்ணற்ற தாதுச் சத்துக்களையும், வைட்டமின்களையும் கொண்டுள்ளது. இது ரத்தத்தில் உள்ள ஹீமோகுளோபின் அணுக்களை அதிகரிக்கிறது. இரும்புச்சத்து, கால்சியம் போன்ற சத்துக்கள் சரிவிகிதமாக கிடைக்கச் செய்கின்றன. எனவே வாரம் இருமுறையாவது அத்திப்பழத்தை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். பெண்கள் உண்ணும் உணவில் கரோட்டினாய்டு சத்துக்கள் அவசியம் இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும். மஞ்சள், ஆரஞ்சு நிற காய்கனிகளில் கரோட்டினாய்டுகள் காணப்படுகின்றன. இந்த உணவு பெண்களுக்கு மார்பக, கர்ப்பப்பை புற்றுநோய் ஏற்படுவதை தடுக்கும்.
தக்காளியில் உள்ள லைகோபீன் பெண்களுக்கு மார்பகப் புற்றுநோய் ஏற்படாமல் தடுக்கிறது. இது மிகச்சக்தி வாய்ந்த ஆன்டி ஆக்சிடென்டுகளை கொண்டுள்ளது. இது இதயநோய் ஏற்படுவதில் இருந்து பாதுகாக்கிறது. பெண்கள் அன்றாட உணவில் தக்காளியை அவசியம் சேர்த்துக் கொள்ள வேண்டும். (இப்போது தக்காளி விற்கும் விலையில் இது சாத்தியமா என்ற கேள்வி எழத்தான் செய்யும். விலை குறையும் போது நன்றாக தக்காளி சாப்பிட பழகிக்கொள்ளுங்கள்).
பெண்கள் அன்றாடம் உண்ணும் உணவில் ஒமேகா 3 கொழுப்பு அமிலம் இருப்பது அவசியம். இந்த ஒமேகா 3 அமிலம், நெத்திலி, கானாங்கெளுத்தி, மத்தி என அனைத்து வகை மீன்களிலும் உள்ளது. எனவே மீன் உணவு அவசியம். ஒமேகா 3 கொழுப்பு அமிலம் மார்பகப் புற்றுநோய் ஏற்படாமல் பாதுகாக்கிறது. எலும்புகளின் ஆரோக்கியத்தை பாதுகாப்பதோடு, மனஅழுத்தம் ஏற்படாமல் தடுக்கிறது.
மீன் தவிர, சோயாபீன்ஸ், வால்நட் போன்றவற்றையும் உட்கொள்ளலாம். இதன் மூலம் இதயநோய்கள், முடக்குவாதம் போன்ற நோய்கள் ஏற்படாமல் தடுக்கலாம்.
பெண்கள் தினசரி இருவேளை பால் அருந்த வேண்டும். பாலில் கால்சியம் சத்து அடங்கியுள்ளது. வைட்டமின் டி சத்தும் தேவையான அளவு கிடைப்பதால் எலும்பு தேய்மான நோய்களை தவிர்க்கமுடியும்.
ஓட்ஸ் உணவில் பெண்களின் ஆரோக்கியத்திற்குத் தேவையான பெரும்பாலான சத்துக்கள் அடங்கியுள்ளன. இது இதய ஆரோக்கியத்திற்கு ஏற்றது. இதில் வைட்டமின் பி-6, போலிக் அமிலம் ஆகியவை அடங்கியுள்ளன. இவை, பெண்களுக்கு உயர்ரத்த அழுத்தம் ஏற்படாமல் தடுப்பதோடு மாதவிடாய் காலச் சிக்கல்களையும் தவிர்க்கிறது.
கீரைகளில் எண்ணற்ற வைட்டமின்களும், தாது உப்புக்களும் அடங்கியுள்ளன. கீரைகளில் உள்ள மெக்னீசியமும் பெண்களுக்கு மாதவிடாய்ச்சிக்கல் ஏற்படாமல் தடுக்கிறது. உடல் பருமனையும் தடுக்கிறது. எனவே தினசரி உணவில் பெண்கள் கீரை உட்கொள்வது அவசியம். ஆக, நல்ல சத்தான சமச்சீர் ஆகாரம் மூலம் நோய்களைத் தடுக்கமுடியும். குடும்பத்தின் அச்சாணி பெண்கள் என்பதால் அவர்கள் ஆரோக்கியமாக இருந்தால் குடும்பமே ஆரோக்கிய குடும்பமாக மாறிவிடும்.
கருச்சிதைவு அல்லது குறைப்பிரசவத்திற்கு வழிவகுக்கும் கர்ப்ப காலத்தில் பெண்கள் சாப்பிடக்கூடாத உணவுகளை பற்றி பார்க்கலாம்.
கர்ப்ப காலத்தில் பெண்கள் ஆரோக்கியமான குழந்தையைப் பெற்றெடுக்க பெண்கள் தங்களது வாழ்க்கை முறை மற்றும் உணவுப் பழக்கவழக்கங்களில் சிறு மாற்றங்களைக் கொண்டு வர வேண்டியிருக்கும். ஏனெனில் கர்ப்பமாக இருக்கும் போது, நோயெதிர்ப்பு சக்தி குறைவாக இருக்கும்.
பெண்கள் உண்ணும் உணவுகளில் அதிக கவனத்தை செலுத்த வேண்டும். இல்லாவிட்டால் உணவுப் பொருட்களின் மூலம் கிருமிகளானது உடலினுள் சென்று கருச்சிதைவு அல்லது குறைப்பிரசவத்திற்கு வழிவகுக்கும். கருச்சிதைவு அல்லது குறைப்பிரசவத்திற்கு வழிவகுக்கும் கர்ப்ப காலத்தில் பெண்கள் சாப்பிடக்கூடாத உணவுகளை பற்றி பார்க்கலாம்.
கர்ப்பிணிகள் ஃபெடா சீஸ் உண்பதைத் தவிர்க்க வேண்டும். ஏனெனில் அதில் லிஸ்டெரியா என்னும் பாக்டீயா உள்ளது. இது குறைப்பிரசவம் மற்றும் கருச்சிதைவை ஏற்படுத்தக்கூடிய பாக்டீரியா. வேண்டுமானால் சீடர் மற்றும் ஸ்விஸ் சீஸ் சாப்பிடலாம். முக்கியமாக சீஸ் வாங்கும் போது அதில் உள்ள டேபிளில் லிஸ்டெரியா-ப்ரீ சீஸ் என்று குறிப்பிடப்பட்டுள்ளதா என பாருங்கள்.
கடல் உணவுகளை கர்ப்பிணிகள் அதிகம் உட்கொள்வதைத் தவிர்ப்பது நல்லது. ஏனெனில் அதில் பாக்டீரியாக்கள் மற்றும் மெர்குரி அதிகம் இருக்கும். எனவே இதனை அதிகம் உட்கொள்ளும் போது, அதனால் நரம்பு மண்டலம் நஞ்சடையக்கூடும். வேண்டுமானால் மாதத்திற்கு ஒருமுறை சுத்தமான நீரில் வளர்க்கப்பட்ட மீனை சமைத்து சாப்பிடலாம்.
கர்ப்பமாக இருக்கும் போது உணவுகளை நன்கு முழுமையாக சமைத்து தான் சாப்பிட வேண்டும். குறிப்பாக முட்டை, இறைச்சி போன்றவற்றை நன்கு சமைத்து தான் சாப்பிட வேண்டும். இல்லாவிட்டால், அதில் உள்ள பாக்டீரியாக்கள் கருப்பையில் வளரும் குழந்தையைத் தாக்கி, பெரும் பாதிப்பை ஏற்படுத்திவிடும்.
பெண்கள் உண்ணும் உணவுகளில் அதிக கவனத்தை செலுத்த வேண்டும். இல்லாவிட்டால் உணவுப் பொருட்களின் மூலம் கிருமிகளானது உடலினுள் சென்று கருச்சிதைவு அல்லது குறைப்பிரசவத்திற்கு வழிவகுக்கும். கருச்சிதைவு அல்லது குறைப்பிரசவத்திற்கு வழிவகுக்கும் கர்ப்ப காலத்தில் பெண்கள் சாப்பிடக்கூடாத உணவுகளை பற்றி பார்க்கலாம்.
கர்ப்பிணிகள் ஃபெடா சீஸ் உண்பதைத் தவிர்க்க வேண்டும். ஏனெனில் அதில் லிஸ்டெரியா என்னும் பாக்டீயா உள்ளது. இது குறைப்பிரசவம் மற்றும் கருச்சிதைவை ஏற்படுத்தக்கூடிய பாக்டீரியா. வேண்டுமானால் சீடர் மற்றும் ஸ்விஸ் சீஸ் சாப்பிடலாம். முக்கியமாக சீஸ் வாங்கும் போது அதில் உள்ள டேபிளில் லிஸ்டெரியா-ப்ரீ சீஸ் என்று குறிப்பிடப்பட்டுள்ளதா என பாருங்கள்.
கடல் உணவுகளை கர்ப்பிணிகள் அதிகம் உட்கொள்வதைத் தவிர்ப்பது நல்லது. ஏனெனில் அதில் பாக்டீரியாக்கள் மற்றும் மெர்குரி அதிகம் இருக்கும். எனவே இதனை அதிகம் உட்கொள்ளும் போது, அதனால் நரம்பு மண்டலம் நஞ்சடையக்கூடும். வேண்டுமானால் மாதத்திற்கு ஒருமுறை சுத்தமான நீரில் வளர்க்கப்பட்ட மீனை சமைத்து சாப்பிடலாம்.
கர்ப்பமாக இருக்கும் போது உணவுகளை நன்கு முழுமையாக சமைத்து தான் சாப்பிட வேண்டும். குறிப்பாக முட்டை, இறைச்சி போன்றவற்றை நன்கு சமைத்து தான் சாப்பிட வேண்டும். இல்லாவிட்டால், அதில் உள்ள பாக்டீரியாக்கள் கருப்பையில் வளரும் குழந்தையைத் தாக்கி, பெரும் பாதிப்பை ஏற்படுத்திவிடும்.
சாந்தபடுத்துதல் என்றால் நட்போடு அணுகுதல் என்று அர்த்தம். ஆனால் சாந்தபடுத்துதலை விட வெளியேற்றுவதே நல்லது.
பாலியல் உணர்வு, கோபம், பயம், வெறுப்பு போன்றவர்களை அடக்கினால், அது உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் பல விபரித விளைவுகளையும் ஏற்படுத்தி விடும். இதை போன்ற உணர்வுகளை சாந்தப்படுத்த வேண்டும் அல்லது வெளியேற்ற வேண்டும். சாந்தபடுத்துதல் என்றால் நட்போடு அணுகுதல் என்று அர்த்தம். ஆனால் சாந்தபடுத்துதலை விட வெளியேற்றுவதே நல்லது.
பொதுவாக பாலியல் உணர்வுகளை சற்று வெறுமனே பார்த்துக் கொண்டிருந்தாலே அது வேகமாக மேலே கிளம்பி, பிறகு மெல்ல சாந்தமாகி விடும்.
உதாரணமாக ஒரு சிறு வயது பையன் மிகவும் துடிப்பாக விளையாட்டுப் பொருட்களை போட்டு உடைத்துக் கொண்டிருக்கிறான் அல்லது கெட்ட வார்த்தைகளை பேசிக்கொண்டு இருக்கிறான் என்று வைத்துக்கொள்ளுங்கள். இவர்களை நீங்கள் மூர்க்கமாக அடக்க நினைத்தால் என்ன ஆகும்? அது மேலும் மேலும் கூடிக்கொண்டே தான் போகும் அல்லது அது அடங்கியது போல நடிக்கும்.
ஆனால் இப்படி விளையாடும் பொழுதும், பேசும்பொழுதும், அவனை சற்று வெறுமனே, எதுவும் கூறாமல் உற்றுப் பார்த்துக் கொண்டே இருங்கள். அவன் சற்று போக்கிரித்தனமாக விளையாடுவான். இல்லை மேலும் அசிங்கமாகப் பேசக்கூடும். அந்த எல்லையை அடைந்தவுடன் அவன் கீழே இறங்கித்தான் வரவேண்டும் இல்லையா?
ஆகவே நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் பாலுணர்வைக் கண்டிக்காமல், அடக்காமல் அதன் போக்கை மனக்கண்ணுள் சற்று வெறுமனே பார்த்துக் கொண்டிருங்கள். இப்படித்தான் அதைச் சாந்தபடுத்த முடியும். இப்படிச் சாந்தபடுத்திய பாலுணர்வுச் சக்தி வேறு வகையில் மெல்ல மாறிவிடும்.
அப்படியும் சாந்தபடுத்த முடியவில்லை என்றால் அதன் போக்கிலேயே நீங்களும் சென்று விடுங்கள்! சில காலம் சென்று அது தானே சாந்தநிலைக்கு வந்து விடும். தேவை உங்களுக்கு விழிப்புணர்வு தான். எதிலும் இயந்திரத்தனமாக செயல்படாதீர்கள். குற்ற உணர்வு தேவை இல்லாதது.
பொதுவாக பாலியல் உணர்வுகளை சற்று வெறுமனே பார்த்துக் கொண்டிருந்தாலே அது வேகமாக மேலே கிளம்பி, பிறகு மெல்ல சாந்தமாகி விடும்.
உதாரணமாக ஒரு சிறு வயது பையன் மிகவும் துடிப்பாக விளையாட்டுப் பொருட்களை போட்டு உடைத்துக் கொண்டிருக்கிறான் அல்லது கெட்ட வார்த்தைகளை பேசிக்கொண்டு இருக்கிறான் என்று வைத்துக்கொள்ளுங்கள். இவர்களை நீங்கள் மூர்க்கமாக அடக்க நினைத்தால் என்ன ஆகும்? அது மேலும் மேலும் கூடிக்கொண்டே தான் போகும் அல்லது அது அடங்கியது போல நடிக்கும்.
ஆனால் இப்படி விளையாடும் பொழுதும், பேசும்பொழுதும், அவனை சற்று வெறுமனே, எதுவும் கூறாமல் உற்றுப் பார்த்துக் கொண்டே இருங்கள். அவன் சற்று போக்கிரித்தனமாக விளையாடுவான். இல்லை மேலும் அசிங்கமாகப் பேசக்கூடும். அந்த எல்லையை அடைந்தவுடன் அவன் கீழே இறங்கித்தான் வரவேண்டும் இல்லையா?
ஆகவே நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் பாலுணர்வைக் கண்டிக்காமல், அடக்காமல் அதன் போக்கை மனக்கண்ணுள் சற்று வெறுமனே பார்த்துக் கொண்டிருங்கள். இப்படித்தான் அதைச் சாந்தபடுத்த முடியும். இப்படிச் சாந்தபடுத்திய பாலுணர்வுச் சக்தி வேறு வகையில் மெல்ல மாறிவிடும்.
அப்படியும் சாந்தபடுத்த முடியவில்லை என்றால் அதன் போக்கிலேயே நீங்களும் சென்று விடுங்கள்! சில காலம் சென்று அது தானே சாந்தநிலைக்கு வந்து விடும். தேவை உங்களுக்கு விழிப்புணர்வு தான். எதிலும் இயந்திரத்தனமாக செயல்படாதீர்கள். குற்ற உணர்வு தேவை இல்லாதது.
பெண்கள் சரியான அளவிலான பிரா அணியவில்லை என்றால் முதுகு வலி, கழுத்து, தோள்பட்டை வலிகள் ஏற்படும்.
பெண்களின் மார்பின் எடையை தாங்கக் கூடிய அளவிற்கு சரியான பிரா அணியவேண்டியது அவசியம் என்று ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.
இல்லையெனில் பெண்களுக்கு முதுகு வலி, கழுத்து, தோள்பட்டை வலிகள் ஏற்படுவதோடு மார்பகங்களும் பொலிவிழந்து, விரைவில் தொய்வடைந்து போய் விடும்.
பிரா அணிவது இன்றைக்கு வெறும் பேஷனாகிமட்டுமே வருகிறது. 10ல் 8 பெண்கள் சரியான அளவில் பிரா அணிவதில்லை என்று சமீபத்திய ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது. ஆஸ்திரேலியாவில் 80 சதவீத பெண்கள் பொருத்தமற்ற, அளவு சரியில்லாத பிராக்களையே அணிகிறார்கள் என்று தெரிய வந்துள்ளது.
88 சதவீத டீன் ஏஜ் பெண்கள் அவர்களுக்குப் பொருத்தமான பிராக்களை அணிவதில்லை என்றும். மேலும், 85 சதவீத பெண்களுக்கு எது தங்களுக்குப் பொருத்தமான பிரா என்ற விழிப்புணர்வு இல்லை என்றும் சர்வே தெரிவிக்கிறது.
பெரிய அளவிலான மார்பகங்களைக் கொண்ட பெண்களுக்கு ஒவ்வொரு மார்பும் சராசரியாக 600 கிராம் எடை கொண்டதாக இருக்குமாம். இந்த எடையை சரியான முறையில் தாங்கக் கூடிய பிராக்களை அணியாவிட்டால், பெண்களுக்கு முதுகு வலி, கழுத்து, தோள்பட்டை வலிகள் ஏற்படுகிறதாம். மேலும் மார்பகங்களும் பொலிவிழந்து, விரைவில் தொய்வடைந்து போய் விடும்.
பெண்கள் பொருத்தமான பிராக்களை தேர்வு செய்வதில் பல குழப்பங்களைச் சந்திக்கிறார்கள். தங்களது மார்பு அளவு என்ன என்பதை சரியான முறையில் அளவிட அவர்கள் தயங்குகிறார்கள்.
இத்தனைக்கும் அளவு பார்ப்போர் பெண்களாகவே உள்ளன போதிலும், அவர்களிடம் தங்களது மார்பகங்களைக் காட்ட பெண்களுக்குத் தயக்கம் காணப்படுகிறது. மேலும் கடைகளில் உள்ள உடை மாற்றும் அறைகளுக்குச் சென்று பிராக்களைப் போட்டுப் பார்த்துக் கொள்ள பலரும் முன்வருவதில்லை. இதற்குப் பல்வேறு பிரச்சினைகள் காரணமாக சொல்லப்படுகின்றன.
இந்த விழிப்புணர்வு குறைபாடுக்கு பெண்களின் அம்மாக்கள்தான் முதல் காரணம். அவர்கள்தான் தங்களது மகள்களுக்கு இதுதொடர்பான விழிப்புணர்வு பிரா அணிய ஆரம்பிக்கும்போதே சொல்லித் தந்திருக்க வேண்டும். பிராக்கள் குறித்த அடிப்படை விஷயங்களைக் கற்றுக் கொடுத்திருக்க வேண்டும்.
அம்மாக்கள் மட்டுமே மகள்களுக்கு இதை சொல்லித் தர சரியான நபர்கள். ஆனால் அவர்கள் செய்யத் தவறியதால்தான் பிள்ளைகள் பிராக்கள் குறித்த விழிப்புணர்வு இல்லாமல் வளர காரணமாகி விடுகிறது.
பிராக்கள் வசதியானதாக, சரியாக இருக்க வேண்டும் என்பதை பலரும் உணரவில்லை. மார்பகங்கள் ஆடாமல், அசையாமல் இருக்க மட்டுமே பிரா உதவுகிறது என்பதே பெரும்பாலான பெண்களின் கருத்தாக உள்ளது. பல பெண்களுக்கு பிராக்கள் பெரும் சுமையாக தெரிவதாக கூறினர்.
எப்படா வீட்டுக்குப் போவோம், பிராவை கழற்றிப் போடுவோம் என்றிருக்கும் என்று பல பெண்கள் எங்களிடம் தெரிவித்தனர். இதற்குக் காரணம், அவர்கள் அணியும் பொருத்தமற்ற பிராக்கள்தான். சரியான பிராக்கள் அணிந்தால் இந்தப் பிரச்சினை அவர்களுக்கு நிச்சயம் வராது.
மார்பகம் பிராவுக்குள் கச்சிதமாக பொருந்தியிருக்க வேண்டும். அப்போதுதான் நாம் சரியான பிராவை அணிந்திருக்கிறோம் என்று அர்த்தம். அவுசகரியமாக உணர்ந்தால் நாம் சரியில்லாத பிராவைப் போட்டிருக்கிறோம் என்று உணர வேண்டும் என்றார் அவர்.
பெண்களுக்கு சரியான பிரா எது, உங்களின் பிராவை எப்படி சரியான முறையில் தேர்வு செய்யலாம், உங்களது மார்புக்கு ஏற்ற பிரா எது என்பது குறித்த அடிப்படை விஷயங்களைப் பெண்களுக்குக் இவர்களுடை தாயார் கற்றுத் தர வேண்டும். எனவேதான் எப்போதுமே சரியான அளவிலான, பொருத்தமான பிராக்களை அணிய வேண்டும் என்று மருத்துவர்கள் பரிந்துரைக்கிறார்கள். இருப்பினும் பெரும்பாலான பெண்கள் இதை சரிவர கவனிப்பதில்லை.
இல்லையெனில் பெண்களுக்கு முதுகு வலி, கழுத்து, தோள்பட்டை வலிகள் ஏற்படுவதோடு மார்பகங்களும் பொலிவிழந்து, விரைவில் தொய்வடைந்து போய் விடும்.
பிரா அணிவது இன்றைக்கு வெறும் பேஷனாகிமட்டுமே வருகிறது. 10ல் 8 பெண்கள் சரியான அளவில் பிரா அணிவதில்லை என்று சமீபத்திய ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது. ஆஸ்திரேலியாவில் 80 சதவீத பெண்கள் பொருத்தமற்ற, அளவு சரியில்லாத பிராக்களையே அணிகிறார்கள் என்று தெரிய வந்துள்ளது.
88 சதவீத டீன் ஏஜ் பெண்கள் அவர்களுக்குப் பொருத்தமான பிராக்களை அணிவதில்லை என்றும். மேலும், 85 சதவீத பெண்களுக்கு எது தங்களுக்குப் பொருத்தமான பிரா என்ற விழிப்புணர்வு இல்லை என்றும் சர்வே தெரிவிக்கிறது.
பெரிய அளவிலான மார்பகங்களைக் கொண்ட பெண்களுக்கு ஒவ்வொரு மார்பும் சராசரியாக 600 கிராம் எடை கொண்டதாக இருக்குமாம். இந்த எடையை சரியான முறையில் தாங்கக் கூடிய பிராக்களை அணியாவிட்டால், பெண்களுக்கு முதுகு வலி, கழுத்து, தோள்பட்டை வலிகள் ஏற்படுகிறதாம். மேலும் மார்பகங்களும் பொலிவிழந்து, விரைவில் தொய்வடைந்து போய் விடும்.
பெண்கள் பொருத்தமான பிராக்களை தேர்வு செய்வதில் பல குழப்பங்களைச் சந்திக்கிறார்கள். தங்களது மார்பு அளவு என்ன என்பதை சரியான முறையில் அளவிட அவர்கள் தயங்குகிறார்கள்.
இத்தனைக்கும் அளவு பார்ப்போர் பெண்களாகவே உள்ளன போதிலும், அவர்களிடம் தங்களது மார்பகங்களைக் காட்ட பெண்களுக்குத் தயக்கம் காணப்படுகிறது. மேலும் கடைகளில் உள்ள உடை மாற்றும் அறைகளுக்குச் சென்று பிராக்களைப் போட்டுப் பார்த்துக் கொள்ள பலரும் முன்வருவதில்லை. இதற்குப் பல்வேறு பிரச்சினைகள் காரணமாக சொல்லப்படுகின்றன.
இந்த விழிப்புணர்வு குறைபாடுக்கு பெண்களின் அம்மாக்கள்தான் முதல் காரணம். அவர்கள்தான் தங்களது மகள்களுக்கு இதுதொடர்பான விழிப்புணர்வு பிரா அணிய ஆரம்பிக்கும்போதே சொல்லித் தந்திருக்க வேண்டும். பிராக்கள் குறித்த அடிப்படை விஷயங்களைக் கற்றுக் கொடுத்திருக்க வேண்டும்.
அம்மாக்கள் மட்டுமே மகள்களுக்கு இதை சொல்லித் தர சரியான நபர்கள். ஆனால் அவர்கள் செய்யத் தவறியதால்தான் பிள்ளைகள் பிராக்கள் குறித்த விழிப்புணர்வு இல்லாமல் வளர காரணமாகி விடுகிறது.
பிராக்கள் வசதியானதாக, சரியாக இருக்க வேண்டும் என்பதை பலரும் உணரவில்லை. மார்பகங்கள் ஆடாமல், அசையாமல் இருக்க மட்டுமே பிரா உதவுகிறது என்பதே பெரும்பாலான பெண்களின் கருத்தாக உள்ளது. பல பெண்களுக்கு பிராக்கள் பெரும் சுமையாக தெரிவதாக கூறினர்.
எப்படா வீட்டுக்குப் போவோம், பிராவை கழற்றிப் போடுவோம் என்றிருக்கும் என்று பல பெண்கள் எங்களிடம் தெரிவித்தனர். இதற்குக் காரணம், அவர்கள் அணியும் பொருத்தமற்ற பிராக்கள்தான். சரியான பிராக்கள் அணிந்தால் இந்தப் பிரச்சினை அவர்களுக்கு நிச்சயம் வராது.
மார்பகம் பிராவுக்குள் கச்சிதமாக பொருந்தியிருக்க வேண்டும். அப்போதுதான் நாம் சரியான பிராவை அணிந்திருக்கிறோம் என்று அர்த்தம். அவுசகரியமாக உணர்ந்தால் நாம் சரியில்லாத பிராவைப் போட்டிருக்கிறோம் என்று உணர வேண்டும் என்றார் அவர்.
பெண்களுக்கு சரியான பிரா எது, உங்களின் பிராவை எப்படி சரியான முறையில் தேர்வு செய்யலாம், உங்களது மார்புக்கு ஏற்ற பிரா எது என்பது குறித்த அடிப்படை விஷயங்களைப் பெண்களுக்குக் இவர்களுடை தாயார் கற்றுத் தர வேண்டும். எனவேதான் எப்போதுமே சரியான அளவிலான, பொருத்தமான பிராக்களை அணிய வேண்டும் என்று மருத்துவர்கள் பரிந்துரைக்கிறார்கள். இருப்பினும் பெரும்பாலான பெண்கள் இதை சரிவர கவனிப்பதில்லை.
பெண்கள் மாதவிலக்கு சமயங்களில் பல்வேறு தொல்லைகளை அனுபவிக்கின்றனர். அவை என்னவென்று பார்க்கலாம்.
* தலைவலி அல்லது தலை பாரம்
* முதுகு அல்லது பிறப்புறுப்புப் பகுதியில் வலி
* கீழ் வயிற்றில் வலி
* இடுப்புமற்றும் தொடைப்பகுதி பளுவாக இருப்பது போன்ற உணர்வு
* அதிகமாக வியர்த்தல்
* படபடப்பு
* பரபரப்பு அல்லது மந்தமான மனநிலை,
* எந்த வேலையும் செய்ய இயலாத உடல் அல்லது மனநிலை, ஓய்வெடுக்க வேண்டும் என்ற உணர்வு
* உடல் சோர்வாக இருப்பது போன்ற உணர்வு
* உற்சாகமின்மை,
* உடலுறவுகொள்ளவேண்டும் என்ற வேட்கை
* கரும்புள்ளிகள், முகப்பருக்கள்
சில பெண்களுக்கு மூக்கு, காதுகள், ஆசனவாய் போன்றவற்றிலும் இந்த ரத்த ஒழுக்கு வரும். இதை விகாரியஸ் மென்சஸ் என்கிறார்கள். இதற்கு உடனடியாக மருத்துவம் பார்க்கவேண்டும்.
* மாதவிலக்கு வரும் சமயத்தைத் தொடர்ந்து பெண்களுக்கு ரத்த சோகை வரும் வாய்ப்பு அதிகம்.
* டீன் ஏஜ் காலத்தில் வெளியில் செல்லும் பெண்ணுக்கு தொடர்ந்து மாதவிலக்கு வரவில்லை, நோயும் இல்லை என்றால் அவள் கர்ப்பமாக இருக்கிறாள் என்று பொருள்.
என்ன மாதிரியான அறிகுறிகள் வந்தாலும் அதை அம்மாவிடம், டாக்டரிடம் சொல்லவேண்டும், இல்லாவிட்டால் பிறகு அது பெரிய பிரச்சினையாக முடியும் என்பதையும் கற்பிக்க வேண்டும். செக்ஸ் தொடர்பான படங்களைப் பார்த்தல், படித்தல் போன்றவற்றை மேற்கொள்ளுதல் ஆகியவை அதிகம் இருக்கும்.
* முதுகு அல்லது பிறப்புறுப்புப் பகுதியில் வலி
* கீழ் வயிற்றில் வலி
* இடுப்புமற்றும் தொடைப்பகுதி பளுவாக இருப்பது போன்ற உணர்வு
* அதிகமாக வியர்த்தல்
* படபடப்பு
* பரபரப்பு அல்லது மந்தமான மனநிலை,
* எந்த வேலையும் செய்ய இயலாத உடல் அல்லது மனநிலை, ஓய்வெடுக்க வேண்டும் என்ற உணர்வு
* உடல் சோர்வாக இருப்பது போன்ற உணர்வு
* உற்சாகமின்மை,
* உடலுறவுகொள்ளவேண்டும் என்ற வேட்கை
* கரும்புள்ளிகள், முகப்பருக்கள்
சில பெண்களுக்கு மூக்கு, காதுகள், ஆசனவாய் போன்றவற்றிலும் இந்த ரத்த ஒழுக்கு வரும். இதை விகாரியஸ் மென்சஸ் என்கிறார்கள். இதற்கு உடனடியாக மருத்துவம் பார்க்கவேண்டும்.
* மாதவிலக்கு வரும் சமயத்தைத் தொடர்ந்து பெண்களுக்கு ரத்த சோகை வரும் வாய்ப்பு அதிகம்.
* டீன் ஏஜ் காலத்தில் வெளியில் செல்லும் பெண்ணுக்கு தொடர்ந்து மாதவிலக்கு வரவில்லை, நோயும் இல்லை என்றால் அவள் கர்ப்பமாக இருக்கிறாள் என்று பொருள்.
என்ன மாதிரியான அறிகுறிகள் வந்தாலும் அதை அம்மாவிடம், டாக்டரிடம் சொல்லவேண்டும், இல்லாவிட்டால் பிறகு அது பெரிய பிரச்சினையாக முடியும் என்பதையும் கற்பிக்க வேண்டும். செக்ஸ் தொடர்பான படங்களைப் பார்த்தல், படித்தல் போன்றவற்றை மேற்கொள்ளுதல் ஆகியவை அதிகம் இருக்கும்.
குழந்தை பெற்றுகொள்ள முடியாத தம்பதிகளுக்கு ஒரு பெரிய வரப்பிரசாதமாக இருப்பது தான் ஐவிஎஃப் முறை.
குழந்தை பெற்றுகொள்ள முடியாத தம்பதிகளுக்கு ஒரு பெரிய வரப்பிரசாதமாக இருப்பது தான் ஐவிஎஃப் முறை. செயற்கைமுறையில் சோதனைக்குழாயில் கருத்தரிப்பு செய்து அதை கருப்பைக்கு மாற்றி கருப்பையில் குழந்தையை வளரச்செய்வதே இம்முறை.. இம்முறை அதிக வெற்றியை கொடுத்தாலும் சிலருக்கு இம்முறை தோல்வியையும் ஏற்படுத்தியுள்ளது.
பலருக்கு ஓரிரு முறை தோல்வி ஏற்பட்ட பின்பே வெற்றி கிடைக்கிறது. ஐவிஎஃப் முறை(இன்பிட்ரோ ஃபெர்டிலைசேஷன்) அதிக செலவும் அலைச்சலும் தேவைப்படும் முறை என்பதால் தோல்வி ஏற்படும் போது தம்பதிகள் மனம் தளர்ந்து விடுவதும், எதனால் இப்படி ஏற்படுகிறது என்பதை புரிந்து கொள்ள முடியாமலும் வருந்துகின்றனர். பொதுவாக ஐவிஎஃப் தோல்விக்கு பெண்ணின் வயதும் கருவின் தரமும், கருமாற்றும் போது ஏற்படும் பிரச்சனைகளுமே முக்கிய காரணங்களாக இருக்கின்றன.
பெண்ணின் வயது.....
கருத்தரிக்கும் வாய்ப்பு வயது ஏறும் போது குறைகிறது. இளம் வயதில் கருத்தரிக்கும் வாய்ப்பு அதிகமாக இருக்கும். 35 வயதிற்குள் இருக்கும் பெண்களுக்கு கருத்தரிக்கும் வாய்ப்பு 32 சதவீதம் என்றால் 40 வயதான பெண்களுக்கு வெறும் 16% வாய்ப்பே உள்ளது.
கருவின் தரம்.....
கருவின் தரமே ஐவிஎஃப் முறையின் வெற்றியை பெரிதும் நிர்ணயிக்கிறது. கருவின் உள்ள மரபணு குறைபாட்டினால் கரு, கருப்பையில் தங்காமல் வெளியேறிவிடுகிறது. பார்க்க நன்றாக இருக்கும் கருவில் கூட 50 சதவீதம் மரபணு குறைபாடு இருக்கலாம் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர். மரபணு குறைபாடும் மற்ற சில குறைபாடுகளும் சேர்ந்து கரு, கருப்பையில் ஒட்டாமல் வெளியேற காரணமாகிறது.
கருப்பையில் கரு ஊன்றுவதில் ஏற்படும் பிரச்சனைகள்...
கருப்பையில் ஊன்றப்பட்ட கரு வளர்ச்சியடையாமல் நின்று விடுவதை பெரும்பாலான ஐவிஎஃப் தோல்விக்கு காரணம். கரு வளராமல் போவது எதனால் என்று சொல்ல முடியாது. மேலும் கருப்பையில் சதை வளர்ச்சி(பாலிப்), சினைப்பையில் நீர்க்கட்டி போன்றவைகளும் கருப்பையில் கரு தங்காமல் போவதற்கு காரணமாகின்றன.
ஐவிஎஃப் வெற்றியடைவதற்கான வழிமுறைகள் அதிக எண்ணிக்கை...
இரண்டிற்கு மேற்பட்ட கருவை கருப்பைக்கு செலுத்துவதன் மூலம் ஐவிஎஃப் முறையை வெற்றி பெற செய்யலாம். அதிக கரு என்பதால் அதிக சிசு உண்டாகும் என்ற பயம், வயது முதிர்ந்த ஏற்கனவே ஐவிஎஃப் தோல்வியுற்ற பெண்களுக்கு மிகக்குறையே.
கடினமான கருமாற்றத்தை சுலபமாக்குவது.....
கருவை கருப்பைக்கு மாற்றும் போது கருப்பைவாய் சுருங்கி இருப்பதோ, கருப்பை வாய் வளைந்து இருப்பதோ கருமாற்றத்தை கடினமாக்குவதுடன், ரத்தப்போக்கையும் ஏற்படுத்தலாம். இதை தடுக்க ஐவிஎஃப் முறைக்கு முன்பாக ஹிஸ்டரோஸ்கோப்பி மூலம் இதை சோதனை செய்து பார்க்க வேண்டும்.
முதிர்ந்த கருவை மாற்றுதல்.....
ப்ளாஸ்டோ சிஸ்ட் என்ற முதிர்ந்த கருவை(சிலநாட்கள் வளர்ந்த) கருப்பைக்கு மாற்றுவதின் மூலம் சிறந்த கருவாக தேர்ந்தெடுத்து மாற்றலாம்.
கருமுட்டை உடைவதற்கு உதவுதல்....
கரு, கருப்பையில் ஊன்றுவதற்கு முன் அதன் மேற்புற மெல்லிய ஓடு உடைந்து அதனுள்ளிருக்கும் கரு மட்டுமே கருப்பையில் ஊன்றி வளரத்தொடங்கும்.
கருவை சுற்றியிருக்கும் மெல்லிய ஓடான ஜோளா பெலுசிடா உடையாததனாலும் கூட கரு தங்காமல் போகலாம். எனவே கருவை மாற்றுவதற்கு முன் அதன் ஓட்டை உடைத்து (அசிஸ்டட் ஹேட்சிங்) கருப்பையில் பொருத்துவது, ஐவிஎஃப் வெற்றியடைய உதவும்.
சில ஆராய்ச்சிகள் கருப்பையில் உட்புற சுவற்றை ஐவிஎஃப்க்கு முன்பு லேசாக கீறி விடுவதும் வெற்றியளிக்கும் என்று கூறுகின்றன.
மரபணு சோதனை...
கருவை மாற்றுவதற்கு முன்பு ப்ரீஇன்ப்ளான்டேஷன் ஜெனடிக் டெஸ்டிக் (பிஜிடி) மூலம் மரபணு குறைபாடு கருவில் உள்ளதா என்பதை பரிசோதித்து பின்பு கருப்பைக்கு மாற்றுவதும் சிறந்தது. கருவின் மரபணு குறைபாடு இருப்பதே பெரும்பாலான ஐவிஎஃப் தோல்விக்கும், குறை பிரசவத்திற்கும் காரணமாக இருப்பதால் பிஜிடி பரிசோதனை இப்பிரச்சனையை தவிர்க்க உதவுகிறது.
முட்டை மற்றும் விந்தணு மற்றும் முட்டையின் தரம் சரியில்லையென்றாலும் ஐவிஎஃப் தோல்வியடையலாம். இதை தவிர்க்க தரமான முட்டை மற்றும் விந்தணு தானம் மூலம் இப்பிரச்சனையை சரிசெய்யலாம்.
மேற்கூரிய வழிமுறைகள் மூலம் தம்பதியரின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்து ஐவிஎஃப் முறையின் வெற்றியை அதிகரிக்க முடியும்.
பலருக்கு ஓரிரு முறை தோல்வி ஏற்பட்ட பின்பே வெற்றி கிடைக்கிறது. ஐவிஎஃப் முறை(இன்பிட்ரோ ஃபெர்டிலைசேஷன்) அதிக செலவும் அலைச்சலும் தேவைப்படும் முறை என்பதால் தோல்வி ஏற்படும் போது தம்பதிகள் மனம் தளர்ந்து விடுவதும், எதனால் இப்படி ஏற்படுகிறது என்பதை புரிந்து கொள்ள முடியாமலும் வருந்துகின்றனர். பொதுவாக ஐவிஎஃப் தோல்விக்கு பெண்ணின் வயதும் கருவின் தரமும், கருமாற்றும் போது ஏற்படும் பிரச்சனைகளுமே முக்கிய காரணங்களாக இருக்கின்றன.
பெண்ணின் வயது.....
கருத்தரிக்கும் வாய்ப்பு வயது ஏறும் போது குறைகிறது. இளம் வயதில் கருத்தரிக்கும் வாய்ப்பு அதிகமாக இருக்கும். 35 வயதிற்குள் இருக்கும் பெண்களுக்கு கருத்தரிக்கும் வாய்ப்பு 32 சதவீதம் என்றால் 40 வயதான பெண்களுக்கு வெறும் 16% வாய்ப்பே உள்ளது.
கருவின் தரம்.....
கருவின் தரமே ஐவிஎஃப் முறையின் வெற்றியை பெரிதும் நிர்ணயிக்கிறது. கருவின் உள்ள மரபணு குறைபாட்டினால் கரு, கருப்பையில் தங்காமல் வெளியேறிவிடுகிறது. பார்க்க நன்றாக இருக்கும் கருவில் கூட 50 சதவீதம் மரபணு குறைபாடு இருக்கலாம் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர். மரபணு குறைபாடும் மற்ற சில குறைபாடுகளும் சேர்ந்து கரு, கருப்பையில் ஒட்டாமல் வெளியேற காரணமாகிறது.
கருப்பையில் கரு ஊன்றுவதில் ஏற்படும் பிரச்சனைகள்...
கருப்பையில் ஊன்றப்பட்ட கரு வளர்ச்சியடையாமல் நின்று விடுவதை பெரும்பாலான ஐவிஎஃப் தோல்விக்கு காரணம். கரு வளராமல் போவது எதனால் என்று சொல்ல முடியாது. மேலும் கருப்பையில் சதை வளர்ச்சி(பாலிப்), சினைப்பையில் நீர்க்கட்டி போன்றவைகளும் கருப்பையில் கரு தங்காமல் போவதற்கு காரணமாகின்றன.
ஐவிஎஃப் வெற்றியடைவதற்கான வழிமுறைகள் அதிக எண்ணிக்கை...
இரண்டிற்கு மேற்பட்ட கருவை கருப்பைக்கு செலுத்துவதன் மூலம் ஐவிஎஃப் முறையை வெற்றி பெற செய்யலாம். அதிக கரு என்பதால் அதிக சிசு உண்டாகும் என்ற பயம், வயது முதிர்ந்த ஏற்கனவே ஐவிஎஃப் தோல்வியுற்ற பெண்களுக்கு மிகக்குறையே.
கடினமான கருமாற்றத்தை சுலபமாக்குவது.....
கருவை கருப்பைக்கு மாற்றும் போது கருப்பைவாய் சுருங்கி இருப்பதோ, கருப்பை வாய் வளைந்து இருப்பதோ கருமாற்றத்தை கடினமாக்குவதுடன், ரத்தப்போக்கையும் ஏற்படுத்தலாம். இதை தடுக்க ஐவிஎஃப் முறைக்கு முன்பாக ஹிஸ்டரோஸ்கோப்பி மூலம் இதை சோதனை செய்து பார்க்க வேண்டும்.
முதிர்ந்த கருவை மாற்றுதல்.....
ப்ளாஸ்டோ சிஸ்ட் என்ற முதிர்ந்த கருவை(சிலநாட்கள் வளர்ந்த) கருப்பைக்கு மாற்றுவதின் மூலம் சிறந்த கருவாக தேர்ந்தெடுத்து மாற்றலாம்.
கருமுட்டை உடைவதற்கு உதவுதல்....
கரு, கருப்பையில் ஊன்றுவதற்கு முன் அதன் மேற்புற மெல்லிய ஓடு உடைந்து அதனுள்ளிருக்கும் கரு மட்டுமே கருப்பையில் ஊன்றி வளரத்தொடங்கும்.
கருவை சுற்றியிருக்கும் மெல்லிய ஓடான ஜோளா பெலுசிடா உடையாததனாலும் கூட கரு தங்காமல் போகலாம். எனவே கருவை மாற்றுவதற்கு முன் அதன் ஓட்டை உடைத்து (அசிஸ்டட் ஹேட்சிங்) கருப்பையில் பொருத்துவது, ஐவிஎஃப் வெற்றியடைய உதவும்.
சில ஆராய்ச்சிகள் கருப்பையில் உட்புற சுவற்றை ஐவிஎஃப்க்கு முன்பு லேசாக கீறி விடுவதும் வெற்றியளிக்கும் என்று கூறுகின்றன.
மரபணு சோதனை...
கருவை மாற்றுவதற்கு முன்பு ப்ரீஇன்ப்ளான்டேஷன் ஜெனடிக் டெஸ்டிக் (பிஜிடி) மூலம் மரபணு குறைபாடு கருவில் உள்ளதா என்பதை பரிசோதித்து பின்பு கருப்பைக்கு மாற்றுவதும் சிறந்தது. கருவின் மரபணு குறைபாடு இருப்பதே பெரும்பாலான ஐவிஎஃப் தோல்விக்கும், குறை பிரசவத்திற்கும் காரணமாக இருப்பதால் பிஜிடி பரிசோதனை இப்பிரச்சனையை தவிர்க்க உதவுகிறது.
முட்டை மற்றும் விந்தணு மற்றும் முட்டையின் தரம் சரியில்லையென்றாலும் ஐவிஎஃப் தோல்வியடையலாம். இதை தவிர்க்க தரமான முட்டை மற்றும் விந்தணு தானம் மூலம் இப்பிரச்சனையை சரிசெய்யலாம்.
மேற்கூரிய வழிமுறைகள் மூலம் தம்பதியரின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்து ஐவிஎஃப் முறையின் வெற்றியை அதிகரிக்க முடியும்.
பகலில் மனைவிடம் எந்தவித அன்னியோனியமும் இல்லாமல் இரவில் மட்டும் தேடும் கணவனை எந்த மனைவியும் விரும்புவதில்லை.
பகலில் மனைவிடம் எந்தவித அன்னியோனியமும் இல்லாமல் இரவில் மட்டும் தேடும் கணவனை எந்த மனைவியும் விரும்புவதில்லை. ஒருவேளை உறவிற்கு உடன்பட்டாலும் அதில் எவ்வித உணர்ச்சியும் இருக்காது 'என்னவும் செய்துவிட்டு போ' என்கிற விரக்தி மட்டுமே இருக்கும்...இதே நிலை தொடர்ந்து நீடித்தால் உடல் உறுப்புகளில் கடினத்தன்மையும், வலியும் ஏற்படக் கூடும்.
பொதுவாக முப்பத்தைந்து அதற்கு மேல் வயதுள்ள பெண்களில் சிலருக்கு உறவின் மேல் விருப்பமின்மை தோன்றும்...இதை சில நடவடிக்கைகளை வைத்து கணவர்கள் புரிந்துகொள்ளலாம்...
* இவர்களில் பலரும் கருத்தடை சாதனம் பொருத்தியோ, குடும்ப கட்டுப்பாடு ஆபரேஷன் செய்தவர்களாகவே இருப்பார்கள். இருந்தும் ஆணுறை அணிய செய்து உறவு கொள்ள சொல்வார்கள்.
* உறுப்பில் வலி இல்லை என்றாலும் வலிக்கிறது, எரிச்சலாக இருக்கிறது என்பார்கள்.
* தலை வலி, வயிறு வலி போன்ற வெளியே தெரியாத காரணங்கள்.
* தூக்கம் வருகிறது, பசங்க தூங்கல, டயர்டா இருக்கு...
நேரடியாக உறவு பிடிக்கவில்லை என்று சொல்ல தயங்குவார்கள். அப்படி சொல்லிவிட்டால் கணவன் தன்னை வெறுத்துவிடுவானோ என்கிற அச்சம் ஒரு காரணம் !!
மனைவி உறவின் மேல் விருப்பம் இல்லை என்பது போல் காட்டிக்கொண்டால் அது போல் கோபம் வேறு எதிலும் ஒரு ஆணிற்கும் வராது. சாதாரண நேரத்தில் மனைவி மீது அன்பை வாரி பொழிபவர்களும் உறவுக்கு 'ரெட் சிக்னல்' என்றதும் எரிமலையாய் பொங்கிவிடுவார்கள்...எதற்காக மறுக்கிறாள், என்ன காரணம் என்று நிதானித்து யோசிக்க கூடிய மனநிலை ஆண்களுக்கு அப்போது இருப்பதில்லை. உடனே நடந்தாகவேண்டும் என்று உறவை பற்றிய ஒரு உந்துதல் மட்டுமே அவர்கள் மனதில் இருக்கும்.
உறவு நடக்காத பட்சத்தில் மனைவி மீது எரிந்து விழுவது, சம்பந்தம் இல்லாமல் திட்டுவது, ஒரு சிலர் ஒரு நிலையை தாண்டி போய் ' உனக்கு வேறு யாருடனோ தொடர்பு இருக்கிறது, அதுதான் என்னை நிராகரிக்கிற' என்று சிறிதும் யோசிக்காமல் நடத்தையில் சேறை வாரி இறைப்பார்கள்.
இதற்கு பிறகு மனைவிக்கு, கணவனின் மேல் இருக்கிற அன்பு மொத்தமாக குறைந்து போகும் என்பதை தவிர வேறு எந்த நல்ல விசயமும் நடக்க போவதில்லை.
உடல் உறவை தவிர்த்தல் என்பது இப்படி சந்தேகத்தில் வந்து முடிந்துவிட கூடிய ஆபத்தும் இருக்கிறது !!?
இத்தகைய விஷயத்தை வெகு சாதாரணமாக எடுத்துகொள்ளாமல் கவனமாக கையாளுவது கணவன் மனைவி இருவருக்கும் நல்லது.
படுக்கை அறையில் ஆணை விட பெண்ணே அதிக இன்பத்தை பெறுகிறாள்...உடலுறவின் மூலம் அவர்களது ஈஸ்ட்ரோஜன் அதிகரிப்பதால் பெண், உறவை அதிகம் விரும்பவே செய்வாள்...அப்படிபட்ட பெண் உறவை தவிர்க்கிறாள் என்றால், எதனால் என்று புரிந்து கொள்வது ஒரு கணவனின் கடமை...அந்த காரணத்தை அறிந்து சரி செய்து கொள்வது தொடரும் குடும்ப வாழ்க்கைக்கு மிக மிக முக்கியம்.
பொதுவாக முப்பத்தைந்து அதற்கு மேல் வயதுள்ள பெண்களில் சிலருக்கு உறவின் மேல் விருப்பமின்மை தோன்றும்...இதை சில நடவடிக்கைகளை வைத்து கணவர்கள் புரிந்துகொள்ளலாம்...
* இவர்களில் பலரும் கருத்தடை சாதனம் பொருத்தியோ, குடும்ப கட்டுப்பாடு ஆபரேஷன் செய்தவர்களாகவே இருப்பார்கள். இருந்தும் ஆணுறை அணிய செய்து உறவு கொள்ள சொல்வார்கள்.
* உறுப்பில் வலி இல்லை என்றாலும் வலிக்கிறது, எரிச்சலாக இருக்கிறது என்பார்கள்.
* தலை வலி, வயிறு வலி போன்ற வெளியே தெரியாத காரணங்கள்.
* தூக்கம் வருகிறது, பசங்க தூங்கல, டயர்டா இருக்கு...
நேரடியாக உறவு பிடிக்கவில்லை என்று சொல்ல தயங்குவார்கள். அப்படி சொல்லிவிட்டால் கணவன் தன்னை வெறுத்துவிடுவானோ என்கிற அச்சம் ஒரு காரணம் !!
மனைவி உறவின் மேல் விருப்பம் இல்லை என்பது போல் காட்டிக்கொண்டால் அது போல் கோபம் வேறு எதிலும் ஒரு ஆணிற்கும் வராது. சாதாரண நேரத்தில் மனைவி மீது அன்பை வாரி பொழிபவர்களும் உறவுக்கு 'ரெட் சிக்னல்' என்றதும் எரிமலையாய் பொங்கிவிடுவார்கள்...எதற்காக மறுக்கிறாள், என்ன காரணம் என்று நிதானித்து யோசிக்க கூடிய மனநிலை ஆண்களுக்கு அப்போது இருப்பதில்லை. உடனே நடந்தாகவேண்டும் என்று உறவை பற்றிய ஒரு உந்துதல் மட்டுமே அவர்கள் மனதில் இருக்கும்.
உறவு நடக்காத பட்சத்தில் மனைவி மீது எரிந்து விழுவது, சம்பந்தம் இல்லாமல் திட்டுவது, ஒரு சிலர் ஒரு நிலையை தாண்டி போய் ' உனக்கு வேறு யாருடனோ தொடர்பு இருக்கிறது, அதுதான் என்னை நிராகரிக்கிற' என்று சிறிதும் யோசிக்காமல் நடத்தையில் சேறை வாரி இறைப்பார்கள்.
இதற்கு பிறகு மனைவிக்கு, கணவனின் மேல் இருக்கிற அன்பு மொத்தமாக குறைந்து போகும் என்பதை தவிர வேறு எந்த நல்ல விசயமும் நடக்க போவதில்லை.
உடல் உறவை தவிர்த்தல் என்பது இப்படி சந்தேகத்தில் வந்து முடிந்துவிட கூடிய ஆபத்தும் இருக்கிறது !!?
இத்தகைய விஷயத்தை வெகு சாதாரணமாக எடுத்துகொள்ளாமல் கவனமாக கையாளுவது கணவன் மனைவி இருவருக்கும் நல்லது.
படுக்கை அறையில் ஆணை விட பெண்ணே அதிக இன்பத்தை பெறுகிறாள்...உடலுறவின் மூலம் அவர்களது ஈஸ்ட்ரோஜன் அதிகரிப்பதால் பெண், உறவை அதிகம் விரும்பவே செய்வாள்...அப்படிபட்ட பெண் உறவை தவிர்க்கிறாள் என்றால், எதனால் என்று புரிந்து கொள்வது ஒரு கணவனின் கடமை...அந்த காரணத்தை அறிந்து சரி செய்து கொள்வது தொடரும் குடும்ப வாழ்க்கைக்கு மிக மிக முக்கியம்.
நீங்கள் கருத்தரித்து உள்ளீர்கள் என்பதை கூட முன்கூட்டியே உங்களது மார்பகங்களில் ஏற்படும் மாற்றங்களை வைத்து தெரிந்துக் கொள்ளலாம்
பிரசவத்தின் வலியும், அதன் பிறகு பெண்கள் எதிர்கொள்ளும் மாற்றங்களும் கருத்தரித்த நாள் முதலே தொடங்கிவிடுகிறது. முக்கியமாக மாதம் அதிகரிக்க அதிகரிக்க உடல் ரீதியாக அவர்கள் பல மாற்றங்களை சந்திக்க நேரிடும். இம்மாற்றங்களில் மற்றவர் உன்னிப்பாக கவனிக்கும் வகையில் இருப்பது மார்பகங்களில் ஏற்படும் மாற்றங்கள் தான்.
கருத்தரித்த பெண்கள் பலருக்கே அவர்கள் மார்பகங்களில் ஏற்படும் மாற்றங்களுக்கு கர்ப்பமாக இருப்பது தான் காரணம் என்று தெரியாது. மற்றும் நீங்கள் கருத்தரித்து உள்ளீர்கள் என்பதை கூட முன்கூட்டியே உங்களது மார்பகங்களில் ஏற்படும் மாற்றங்களை வைத்து தெரிந்துக் கொள்ளலாம்...
நீங்கள் கருத்தரித்துவிட்டால் மாதவிடாய் ஏற்படாது. இந்த காரணத்தால் உங்கள் மார்பகங்கள் பெரியதாகின்றன. எனவே, இதை வைத்தே நீங்கள் கருவுற்று இருக்கிறீர்கள் என்பதை உணர்ந்துவிடலாம். இவ்வாறு மார்பகங்கள் திடீரென பெரியதாவதை கண்டால் வீட்டில் உள்ள பெரியவர்கள் எளிதாக பெண்கள் கருவுற்றுவிட்டார்கள் என்பதை அறிந்துக் கொள்வார்கள்.
மாதாமாதம் வயிறு மட்டுமின்றி, அவரவர் உடல்நிலையை பொறுத்து மார்பகங்களும் பெரியதாகும். இதனால் நீங்கள் கருவுற்றிருக்கும் நாட்களில் இரண்டு, மூன்று முறையாவது உள்ளாடைகள் அளவு மாறுவதால் புதிது வாங்க வேண்டி வரும்.
கர்ப்பிணி பெண்களுக்கு அவர்களது மார்பகங்களில் நமைச்சல் மற்றும் கூச்சம் கொஞ்சம் அதிகமாக இருக்கும். கர்ப்பமாக இருக்கும் பெண்களின் மார்பகங்களில் நீலநிற நரம்பிகள் தென்படும் வாய்ப்புகள் இருக்கிறது. இது சாதாரண ஒன்று தான்.
மார்பகங்கள் பெரிதானால், அதற்கேற்ற உள்ளாடை மாற்றி அணியுங்கள். இல்லையேல் மூச்சுவிட சிரமமாகவும், பால் சுரப்பதை தடுக்கும் வகையிலும் அமைந்துவிடும்.
கருத்தரித்த பெண்கள் பலருக்கே அவர்கள் மார்பகங்களில் ஏற்படும் மாற்றங்களுக்கு கர்ப்பமாக இருப்பது தான் காரணம் என்று தெரியாது. மற்றும் நீங்கள் கருத்தரித்து உள்ளீர்கள் என்பதை கூட முன்கூட்டியே உங்களது மார்பகங்களில் ஏற்படும் மாற்றங்களை வைத்து தெரிந்துக் கொள்ளலாம்...
நீங்கள் கருத்தரித்துவிட்டால் மாதவிடாய் ஏற்படாது. இந்த காரணத்தால் உங்கள் மார்பகங்கள் பெரியதாகின்றன. எனவே, இதை வைத்தே நீங்கள் கருவுற்று இருக்கிறீர்கள் என்பதை உணர்ந்துவிடலாம். இவ்வாறு மார்பகங்கள் திடீரென பெரியதாவதை கண்டால் வீட்டில் உள்ள பெரியவர்கள் எளிதாக பெண்கள் கருவுற்றுவிட்டார்கள் என்பதை அறிந்துக் கொள்வார்கள்.
மாதாமாதம் வயிறு மட்டுமின்றி, அவரவர் உடல்நிலையை பொறுத்து மார்பகங்களும் பெரியதாகும். இதனால் நீங்கள் கருவுற்றிருக்கும் நாட்களில் இரண்டு, மூன்று முறையாவது உள்ளாடைகள் அளவு மாறுவதால் புதிது வாங்க வேண்டி வரும்.
கர்ப்பிணி பெண்களுக்கு அவர்களது மார்பகங்களில் நமைச்சல் மற்றும் கூச்சம் கொஞ்சம் அதிகமாக இருக்கும். கர்ப்பமாக இருக்கும் பெண்களின் மார்பகங்களில் நீலநிற நரம்பிகள் தென்படும் வாய்ப்புகள் இருக்கிறது. இது சாதாரண ஒன்று தான்.
மார்பகங்கள் பெரிதானால், அதற்கேற்ற உள்ளாடை மாற்றி அணியுங்கள். இல்லையேல் மூச்சுவிட சிரமமாகவும், பால் சுரப்பதை தடுக்கும் வகையிலும் அமைந்துவிடும்.
தற்போதுள்ள பல தம்பதிகள் பணம் செலவானாலும் பரவாயில்லை சிசேரியன் செய்துக் கொள்கிறோம் என கூறுகின்றனர்.
சிசேரியன் செய்வதில் சுலபம். ஆனால், அதன் பிறகு மீண்டும் ஆரோக்கியம் அடைவது, இயல்பான வேலைகளில் ஈடுபடுவது, ஏன் பெண்கள் கழிவறை சென்று வருவது கூட கடினம் தான்.
சிசேரியன் செய்தவர்களுக்கு ஓரிரு வாரங்கள் வலி அதிகமாக தான் இருக்கும். இதை தவிர்க்க, மருத்துவர்களே சில வலிநிவாரணி மருந்துகளை தருவார்கள். இது தற்காலிகமாக வலி இல்லாமல் இருக்க உதவும்.
சிசேரியன் ஆன பெண்கள், புரோபயாடிக் உணவுகள் உட்கொள்ள வேண்டியது அவசியம். இதில் இருந்து கிடைக்கும் நல்ல பாக்டீரியா, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க செய்து ஆரோக்கியத்தை வலிமையடைய செய்கிறது. தயிர் ஓர் சிறந்த புரோபயாடிக் உணவு. சிசேரியன் செய்த பெண்கள் ஊட்டச்சத்துக்களில் நிறைய கவனம் எடுத்துக் கொள்ள வேண்டும். முக்கியமாக வைட்டமின் சி மற்றும் புரதம் நிறைந்த உணவுகள்.
சிசேரியன் செய்ததால், கீறல்கள் இருக்க வாய்ப்புகள் இருக்கும். எனவே, அந்த இடத்தில் அதிக அழுத்தம் தராமலும், தொற்று ஏற்படாமலும் பார்த்துக் கொள்ள வேண்டியது அவசியம். முக்கியமாக குளிக்கும் நீரினை சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும்.
சிசேரியன் என சொல்லிக் கொண்டு படுக்கையில் படுத்துக் கொண்டே இருக்க வேண்டாம். நேரம் கிடைக்கும் போது கொஞ்ச நேரம் நடைப்பயிற்சி செய்யுங்கள். இது உடலில் இரத்த கட்டிகள் உண்டாகாமல் இருக்க உதவும்.
பிரசவத்திற்கும், முன்னும், பின்னும் மலச்சிக்கல் ஏற்பட வாய்ப்புகள் உண்டு. முக்கியமாக சிசேரியன் செய்த பெண்கள் உட்கார்ந்து எழுந்து மலம் கழிக்க முயற்சிக்கும் போது அழுத்தம் அதிகரித்து இரத்த கசிவு ஏற்படும் வாய்ப்புகள் இருக்கிறது. எனவே, உதவிக்கு ஸ்டூல் வைத்துக் கொள்வது நல்லது. மேலும், மறவாமல் நார்ச்சத்து உணவுகள் உட்கொள்ளுங்கள் இது, மலச்சிக்கல் உண்டாகாமல் தடுக்கும்.
குறைந்தது ஆறு மாதத்திற்காவது அதிக எடை கொண்ட பொருட்களை தூக்குவதை தவிர்ப்பது நல்லது. இது சிசேரியன் செய்த இடத்தில் அதிக வலியை உண்டாக்கும்.
சிசேரியன் செய்த பெண்களுக்கு உடலுறவில் ஈடுபடும் போது வலி அதிகமாக இருக்கும். இது சிசேரியன் செய்த 18 மாதங்கள் வரை கூட இந்த பிரச்சனை இருக்கலாம் என மருத்துவர்கள் கூறுகின்றனர்.
சிசேரியன் செய்தவர்களுக்கு ஓரிரு வாரங்கள் வலி அதிகமாக தான் இருக்கும். இதை தவிர்க்க, மருத்துவர்களே சில வலிநிவாரணி மருந்துகளை தருவார்கள். இது தற்காலிகமாக வலி இல்லாமல் இருக்க உதவும்.
சிசேரியன் ஆன பெண்கள், புரோபயாடிக் உணவுகள் உட்கொள்ள வேண்டியது அவசியம். இதில் இருந்து கிடைக்கும் நல்ல பாக்டீரியா, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க செய்து ஆரோக்கியத்தை வலிமையடைய செய்கிறது. தயிர் ஓர் சிறந்த புரோபயாடிக் உணவு. சிசேரியன் செய்த பெண்கள் ஊட்டச்சத்துக்களில் நிறைய கவனம் எடுத்துக் கொள்ள வேண்டும். முக்கியமாக வைட்டமின் சி மற்றும் புரதம் நிறைந்த உணவுகள்.
சிசேரியன் செய்ததால், கீறல்கள் இருக்க வாய்ப்புகள் இருக்கும். எனவே, அந்த இடத்தில் அதிக அழுத்தம் தராமலும், தொற்று ஏற்படாமலும் பார்த்துக் கொள்ள வேண்டியது அவசியம். முக்கியமாக குளிக்கும் நீரினை சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும்.
சிசேரியன் என சொல்லிக் கொண்டு படுக்கையில் படுத்துக் கொண்டே இருக்க வேண்டாம். நேரம் கிடைக்கும் போது கொஞ்ச நேரம் நடைப்பயிற்சி செய்யுங்கள். இது உடலில் இரத்த கட்டிகள் உண்டாகாமல் இருக்க உதவும்.
பிரசவத்திற்கும், முன்னும், பின்னும் மலச்சிக்கல் ஏற்பட வாய்ப்புகள் உண்டு. முக்கியமாக சிசேரியன் செய்த பெண்கள் உட்கார்ந்து எழுந்து மலம் கழிக்க முயற்சிக்கும் போது அழுத்தம் அதிகரித்து இரத்த கசிவு ஏற்படும் வாய்ப்புகள் இருக்கிறது. எனவே, உதவிக்கு ஸ்டூல் வைத்துக் கொள்வது நல்லது. மேலும், மறவாமல் நார்ச்சத்து உணவுகள் உட்கொள்ளுங்கள் இது, மலச்சிக்கல் உண்டாகாமல் தடுக்கும்.
குறைந்தது ஆறு மாதத்திற்காவது அதிக எடை கொண்ட பொருட்களை தூக்குவதை தவிர்ப்பது நல்லது. இது சிசேரியன் செய்த இடத்தில் அதிக வலியை உண்டாக்கும்.
சிசேரியன் செய்த பெண்களுக்கு உடலுறவில் ஈடுபடும் போது வலி அதிகமாக இருக்கும். இது சிசேரியன் செய்த 18 மாதங்கள் வரை கூட இந்த பிரச்சனை இருக்கலாம் என மருத்துவர்கள் கூறுகின்றனர்.
குழந்தைக்கு தாய்பால் தருவதும் அதனை நிறுத்துவதும் தாயிடம் தான் உள்ளது.
தாயான பின்பு தன் குழந்தைக்கு எத்தனை வயது வரை தாய்ப்பால் தருவது? தாய்பாலை எப்படி மறக்கடிக்கச்செய்வது என பல் கேள்விகளுக்கு பதில் தெரியாமல் தாய்மார்கள் தவிக்கிறார்கள்.
குழந்தைக்கு தாய்பால் தருவது மிகவும் அவசியமானது. அலுவலக பணிக்கு செல்பவர்களுக்கு வசதியாக இன்றுபாலை பீய்ச்சி எடுக்க வசதியான கருவிகள் சுட வந்துள்ளன. எனவே குழந்தைக்கு தாய்பாலை உடனே கூட நிறுத்திவிட வேண்டிய அவசியமும் ஏற்படாது.
ஆயினும் சுற்றியிருப்பவர்கள் ஆறுமாதம் ஆகிவிட்டதா போதும் பால் தருவதை விடு என கூறிவிடுவர். ஆனால் குழந்தை அப்போது தான் தீவிரமாய் பால் குடி மறப்போனா? பார் என்ற சப்தமிட்டு சலனப்படுத்தும். எப்படி இருப்பினும் குழந்தைக்கு தாய்பால் தருவதும் அதனை நிறுத்துவதும் தாயிடம் தான் உள்ளது.
தாய்பால் நிறுத்தவேண்டிய காலம் :
குழந்தை ஆறு மாதத்திற்கு பின் சிறுசிறு உணவுகள் எடுத்து கொண்டாலும் உடனே தாய்பாலை நிறுத்த வேண்டிய அவசியமில்லை. ஏனெனில் இதர உணவுடன் தாய்பாலும் ஓர் அவசியமான உணவே. மேலும் உலக சுகாதார நிறுவனம் இரண்டு வயது வரை கூட குழந்தைக்கு தாய்பால் தரலாம் என ஆலோசனை கூறியுள்ளது.
சில தாய்மார்கள் குழந்தை தான் நடக்க ஆரம்பித்துவிட்டதே ஏன் இன்னும் தாய்பால் தரவேண்டும் என்று நினைப்பார்கள். அது தவறு.
குழந்தை விருப்பத்திற்கு ஏற்ப அது மறக்கும் நிலை ஏற்படும் வரை தாய்பால் தரலாம். அதனால் தாய்க்கும் குழந்தைக்கும் ஏதும் பிரச்சனை இல்லை என்றால் போதும். குழந்தையை வெறுப்பேற்றும் வகையில் தாய்பாலை சட்டென நிறுத்திவிட்டு வேறு உணவுகளை ஊட்டுவதற்கு மிகவும் சிரமப்பட வேண்டியிருக்கும். மேலும் குழந்தை அதனை மனதில் வைத்து வேறு உணவுகளை உண்பதை தவிர்ப்பது, அதனை தள்ளுவது போன்ற விஷயங்களை மேற்கொள்ளும்.
எனவே தாய்பால் குடிப்பதை படிப்படியாக குறைக்க பார்க்க வேண்டும். குழந்தைக்கு பிடித்த வேறு ஆகாரங்களை அதிகப்படுத்திய பிறகே பால் கொடுப்பதை அதற்கேற்ப குறைத்திட வேண்டும். பால் தரும் நேர இடைவெளியை அதிகரித்திட வேண்டும். பிறகு பகல் நேரத்தில் பால் கொடுப்பதை பெரும்பாலும் குறைத்திட வேண்டும். குழந்தையின் மனநிலைக்கு ஏற்றபடி இதனை படிப்படியாக செய்திடல் வேண்டும்.
தாய்பால் தந்து கொண்டிருந்தால் எப்படி பணிக்கு செல்வது?
குழந்தைக்கு பிடித்தமான பாட்டிலில் தாய்பாலை சேகரித்து வைத்து தரலாம். மேலும் பொதுஇடத்தில் தாய்பால் தருவது கடினமாக உள்ளது என்று நினைத்தால் பகல் நேரத்தில் பால் தருவதை படிப்படியாக குறைத்து இரவு நேரங்களில் தாய்பால் கொடுக்கலாம்.
குழந்தை ஓரளவிற்கு தாய்பால் இன்றி தன் பணிகளை மேற்கொள்கிறது என நினைக்கும் போது தாய்பால் கொடுப்பதை நிறுத்திவிடலாம்.
உடனே மாத்திரை ஏதும் எடுத்திட வேண்டாம். இயற்கையாகவே சில உணவுகளை உண்ணும்போது பால்சுரப்பது குறைத்து விடும்.
புரோட்டின் சார்ந்த உணவுகளை குறைப்பதன் மூலம் பால் சுரப்பது குறைந்து விடும். திடீரென பால் தருவதை நிறுத்தும் போது தாய்மார்களுக்கு சில ஹார்மோன் பிரச்சனைகள் கூட ஏற்படலாம். எனவே உடல் நலத்திற்கு பாதிப்பு ஏற்படாத வண்ணம் குழந்தையின் மனநிலைக்கு ஏற்ப யோசித்து செயல்பட வேண்டும்.
குழந்தையின் வளர்ச்சிக்கும் மனநிலைக்கும் பாதிப்பு ஏற்படாதவாறு தாய்பால் நிறுத்துவது அமைவது அவசியம்.
குழந்தைக்கு தாய்பால் தருவது மிகவும் அவசியமானது. அலுவலக பணிக்கு செல்பவர்களுக்கு வசதியாக இன்றுபாலை பீய்ச்சி எடுக்க வசதியான கருவிகள் சுட வந்துள்ளன. எனவே குழந்தைக்கு தாய்பாலை உடனே கூட நிறுத்திவிட வேண்டிய அவசியமும் ஏற்படாது.
ஆயினும் சுற்றியிருப்பவர்கள் ஆறுமாதம் ஆகிவிட்டதா போதும் பால் தருவதை விடு என கூறிவிடுவர். ஆனால் குழந்தை அப்போது தான் தீவிரமாய் பால் குடி மறப்போனா? பார் என்ற சப்தமிட்டு சலனப்படுத்தும். எப்படி இருப்பினும் குழந்தைக்கு தாய்பால் தருவதும் அதனை நிறுத்துவதும் தாயிடம் தான் உள்ளது.
தாய்பால் நிறுத்தவேண்டிய காலம் :
குழந்தை ஆறு மாதத்திற்கு பின் சிறுசிறு உணவுகள் எடுத்து கொண்டாலும் உடனே தாய்பாலை நிறுத்த வேண்டிய அவசியமில்லை. ஏனெனில் இதர உணவுடன் தாய்பாலும் ஓர் அவசியமான உணவே. மேலும் உலக சுகாதார நிறுவனம் இரண்டு வயது வரை கூட குழந்தைக்கு தாய்பால் தரலாம் என ஆலோசனை கூறியுள்ளது.
சில தாய்மார்கள் குழந்தை தான் நடக்க ஆரம்பித்துவிட்டதே ஏன் இன்னும் தாய்பால் தரவேண்டும் என்று நினைப்பார்கள். அது தவறு.
குழந்தை விருப்பத்திற்கு ஏற்ப அது மறக்கும் நிலை ஏற்படும் வரை தாய்பால் தரலாம். அதனால் தாய்க்கும் குழந்தைக்கும் ஏதும் பிரச்சனை இல்லை என்றால் போதும். குழந்தையை வெறுப்பேற்றும் வகையில் தாய்பாலை சட்டென நிறுத்திவிட்டு வேறு உணவுகளை ஊட்டுவதற்கு மிகவும் சிரமப்பட வேண்டியிருக்கும். மேலும் குழந்தை அதனை மனதில் வைத்து வேறு உணவுகளை உண்பதை தவிர்ப்பது, அதனை தள்ளுவது போன்ற விஷயங்களை மேற்கொள்ளும்.
எனவே தாய்பால் குடிப்பதை படிப்படியாக குறைக்க பார்க்க வேண்டும். குழந்தைக்கு பிடித்த வேறு ஆகாரங்களை அதிகப்படுத்திய பிறகே பால் கொடுப்பதை அதற்கேற்ப குறைத்திட வேண்டும். பால் தரும் நேர இடைவெளியை அதிகரித்திட வேண்டும். பிறகு பகல் நேரத்தில் பால் கொடுப்பதை பெரும்பாலும் குறைத்திட வேண்டும். குழந்தையின் மனநிலைக்கு ஏற்றபடி இதனை படிப்படியாக செய்திடல் வேண்டும்.
தாய்பால் தந்து கொண்டிருந்தால் எப்படி பணிக்கு செல்வது?
குழந்தைக்கு பிடித்தமான பாட்டிலில் தாய்பாலை சேகரித்து வைத்து தரலாம். மேலும் பொதுஇடத்தில் தாய்பால் தருவது கடினமாக உள்ளது என்று நினைத்தால் பகல் நேரத்தில் பால் தருவதை படிப்படியாக குறைத்து இரவு நேரங்களில் தாய்பால் கொடுக்கலாம்.
குழந்தை ஓரளவிற்கு தாய்பால் இன்றி தன் பணிகளை மேற்கொள்கிறது என நினைக்கும் போது தாய்பால் கொடுப்பதை நிறுத்திவிடலாம்.
உடனே மாத்திரை ஏதும் எடுத்திட வேண்டாம். இயற்கையாகவே சில உணவுகளை உண்ணும்போது பால்சுரப்பது குறைத்து விடும்.
புரோட்டின் சார்ந்த உணவுகளை குறைப்பதன் மூலம் பால் சுரப்பது குறைந்து விடும். திடீரென பால் தருவதை நிறுத்தும் போது தாய்மார்களுக்கு சில ஹார்மோன் பிரச்சனைகள் கூட ஏற்படலாம். எனவே உடல் நலத்திற்கு பாதிப்பு ஏற்படாத வண்ணம் குழந்தையின் மனநிலைக்கு ஏற்ப யோசித்து செயல்பட வேண்டும்.
குழந்தையின் வளர்ச்சிக்கும் மனநிலைக்கும் பாதிப்பு ஏற்படாதவாறு தாய்பால் நிறுத்துவது அமைவது அவசியம்.
ஆணோ பெண்ணோ, அவர்கள் செக்ஸ் வாழ்க்கையில் திருப்தி அடைந்தால் தான் அவர்கள் திருமண வாழ்வு மட்டுமின்றி மொத்த வாழ்வும் மகிழ்வுடன் சிறப்பாக அமைகிறது.
இன்று நமது சமூகத்தில் "செக்ஸ்" பிரச்சினைகளை வெளிப்படையாக பேச இயலாத நிலையில் மறைக்கக் கூடிய ஒரு பிரச்சனையாக, ஆண்களுக்கும் பெண்களுக்கும் உள்ளது, ஆணோ பெண்ணோ, அவர்கள் செக்ஸ் வாழ்க்கையில் திருப்தி அடைந்தால் தான் அவர்கள் திருமண வாழ்வு மட்டுமின்றி மொத்த வாழ்வும் மகிழ்வுடன் சிறப்பாக அமைகிறது.
பல செக்ஸ் பிரச்சினைகளை கண்டறிந்து முறையான மருத்துவம் மேற்கொண்டாலே போதுமானது. செக்ஸில் ஆண் பெண் இருவருக்கும் பொதுவான பிரச்சினைகள் உள்ளன. அவை என்னவென்று பார்க்கலாம்.
செக்ஸில் ஏற்படும் முழு திருப்தியின்மையினால் கூட மனநோய்கள் உண்டாகின்றன. மனநோயும் செக்ஸ் குறைபாடும் ஒன்றுக்கொன்று நெருங்கிய தொடர்புடையது.
உடல் உறுப்புகளில் ஏற்படும் மாற்றங்கள் கூட செக்ஸ் குறைபாடுகளை உண்டாக்குகின்றன. இரத்தகுழாய் சம்பந்தப்பட்ட நோய்கள், நாளமில்லா சுரப்பிகளின் குறைபாடுகளினால் உண்டாகும் குறைகள், தைராய்டு சுரப்பு குறைவதால் வரும் பாதிப்புகள், ஆண், பெண் ஹார்மோன் சுரப்பிகளின் குறைபாடுகள் முதலியன முக்கிய காரணங்கள். சிறுநீரக கோளாறுகள் மற்றும் இரத்தசோகை போன்ற வியாதிகளினால் செக்ஸ் குறைபாடுகள் ஏற்படுகிறது.
சர்க்கரை நோய் செக்ஸ் குறைபாட்டிற்க்கு முக்கிய காரணம். சர்க்கரை நோயாளிகள் சர்க்கரை அளவை கட்டுப்பாட்டிற்க்குள் வைத்திருக்க வேண்டும்.
செக்ஸ் பிரச்சினைகள் என்றாலே ஆண்களுக்கு மட்டும் தான்; அதுவும் ஆண்மைக் குறைவு மட்டும்தான் என நம்பப்படுகிறது. ஆனால் ஆண்மைக்குறைவு என்பது ஆணுக்கு செக்ஸில் உண்டாகும் குறைபாடுதான். இதில் உண்டாகும் குறைகள் 3 வகையாக உள்ளன.
குடிபோதை மயக்கம் மீளமுடியாமை போல் இது ஒரு செக்ஸ் அடிமைத்தனம், எந்நேரமும் அதைப்பற்றியே சிந்தித்தல். சொந்த வேலைகளைக் கூட அன்றாடம் செய்ய முடியாமல் சிரமப்படுதல். இது இருபாலருக்கும் பொதுவானது.
பொதுவாக செக்ஸ் உணர்வு சிலருக்கு மிகக் குறைவாகவும், இல்லாத நிலையும் இருக்கும். சிலருக்கு மிக அதிகமாக இருக்கும். ஆணுக்கு செக்ஸ் உணர்வு அதிகமாக உள்ள நிலை Satyriasis - சட்டைரியாஸிஸ் எனப்படும். பெண்ணுக்கு அதிகமாகயிருத்தல் : "Nymphomania" - நிம்போ மேனியா, எனப்படும்.
பொதுவாக ஆண்மைக்குறைவைப் போலவே பெண்மைக்குறைவு ஏற்படுகிறது. ஆனால் பெண்கள் அதனை வெளிப்படுத்துவதில்லை, பெரிதுபடுத்துவதில்லை. இதனால் பெண்மையில் ஏற்படும் பிரச்சனைகளை சமூகமும் பெண்களும் பெரிதுபடுத்துவதில்லை.
பொதுவாக பெண்களையும் Inhibites Orgasm (செக்ஸ் உணர்வு உன்னத நிலை, இல்லாதிருத்தல்), Sexual Addiction, Sex Arousal Disorder, Dyspareunia போன்ற பிரச்சனைகள் பாதிக்கலாம்,
நிறைய விவாகரத்துகளுக்கு (Divorce) காரணம் செக்ஸ் பிரச்சனை தான், முதலில் தங்களுக்கு செக்ஸ் பிரச்சினை உள்ளது என்பதை அறிந்து கொள்ள வேண்டும், பின் இந்த பிரச்சினைகளுக்கு தகுந்த மருத்துவர்களை அணுகி மருத்துவம் செய்தால் பிரச்சினைகள் தீரும்.
பல செக்ஸ் பிரச்சினைகளை கண்டறிந்து முறையான மருத்துவம் மேற்கொண்டாலே போதுமானது. செக்ஸில் ஆண் பெண் இருவருக்கும் பொதுவான பிரச்சினைகள் உள்ளன. அவை என்னவென்று பார்க்கலாம்.
செக்ஸில் ஏற்படும் முழு திருப்தியின்மையினால் கூட மனநோய்கள் உண்டாகின்றன. மனநோயும் செக்ஸ் குறைபாடும் ஒன்றுக்கொன்று நெருங்கிய தொடர்புடையது.
உடல் உறுப்புகளில் ஏற்படும் மாற்றங்கள் கூட செக்ஸ் குறைபாடுகளை உண்டாக்குகின்றன. இரத்தகுழாய் சம்பந்தப்பட்ட நோய்கள், நாளமில்லா சுரப்பிகளின் குறைபாடுகளினால் உண்டாகும் குறைகள், தைராய்டு சுரப்பு குறைவதால் வரும் பாதிப்புகள், ஆண், பெண் ஹார்மோன் சுரப்பிகளின் குறைபாடுகள் முதலியன முக்கிய காரணங்கள். சிறுநீரக கோளாறுகள் மற்றும் இரத்தசோகை போன்ற வியாதிகளினால் செக்ஸ் குறைபாடுகள் ஏற்படுகிறது.
சர்க்கரை நோய் செக்ஸ் குறைபாட்டிற்க்கு முக்கிய காரணம். சர்க்கரை நோயாளிகள் சர்க்கரை அளவை கட்டுப்பாட்டிற்க்குள் வைத்திருக்க வேண்டும்.
செக்ஸ் பிரச்சினைகள் என்றாலே ஆண்களுக்கு மட்டும் தான்; அதுவும் ஆண்மைக் குறைவு மட்டும்தான் என நம்பப்படுகிறது. ஆனால் ஆண்மைக்குறைவு என்பது ஆணுக்கு செக்ஸில் உண்டாகும் குறைபாடுதான். இதில் உண்டாகும் குறைகள் 3 வகையாக உள்ளன.
குடிபோதை மயக்கம் மீளமுடியாமை போல் இது ஒரு செக்ஸ் அடிமைத்தனம், எந்நேரமும் அதைப்பற்றியே சிந்தித்தல். சொந்த வேலைகளைக் கூட அன்றாடம் செய்ய முடியாமல் சிரமப்படுதல். இது இருபாலருக்கும் பொதுவானது.
பொதுவாக செக்ஸ் உணர்வு சிலருக்கு மிகக் குறைவாகவும், இல்லாத நிலையும் இருக்கும். சிலருக்கு மிக அதிகமாக இருக்கும். ஆணுக்கு செக்ஸ் உணர்வு அதிகமாக உள்ள நிலை Satyriasis - சட்டைரியாஸிஸ் எனப்படும். பெண்ணுக்கு அதிகமாகயிருத்தல் : "Nymphomania" - நிம்போ மேனியா, எனப்படும்.
பொதுவாக ஆண்மைக்குறைவைப் போலவே பெண்மைக்குறைவு ஏற்படுகிறது. ஆனால் பெண்கள் அதனை வெளிப்படுத்துவதில்லை, பெரிதுபடுத்துவதில்லை. இதனால் பெண்மையில் ஏற்படும் பிரச்சனைகளை சமூகமும் பெண்களும் பெரிதுபடுத்துவதில்லை.
பொதுவாக பெண்களையும் Inhibites Orgasm (செக்ஸ் உணர்வு உன்னத நிலை, இல்லாதிருத்தல்), Sexual Addiction, Sex Arousal Disorder, Dyspareunia போன்ற பிரச்சனைகள் பாதிக்கலாம்,
நிறைய விவாகரத்துகளுக்கு (Divorce) காரணம் செக்ஸ் பிரச்சனை தான், முதலில் தங்களுக்கு செக்ஸ் பிரச்சினை உள்ளது என்பதை அறிந்து கொள்ள வேண்டும், பின் இந்த பிரச்சினைகளுக்கு தகுந்த மருத்துவர்களை அணுகி மருத்துவம் செய்தால் பிரச்சினைகள் தீரும்.
இரத்தத்தில் கால்சியம் அதிகளவு கலந்திருந்தாலும் கூட பெண்களுக்கு அடிக்கடி சிறுநீர் கழியும்.
ஓர் நாளுக்கு சராசரியாக 4 முதல் 8 முறை சிறுநீர் கழிப்பது இயல்பானது. ஆனால், இந்த எண்ணிக்கைக்கு அதிகமாக அடிக்கடி சிறுநீர் கழித்துக்கொண்டே இருப்பது உடலில் ஏதோ தாக்கம் ஏற்பட்டிருக்கிறது என்பதை வெளிக்காட்டும் அறிகுறியாக தான் எடுத்துக் கொள்ள வேண்டும்.
நிறைய பேர் இதை மிக சாதாரணமாக எடுத்துக் கொள்கின்றனர். ஆனால், அடிக்கடி சிறுநீர் கழிப்பது அபாயகரமான உடல்நலத்தின் அறிகுறியாக கூட இருக்கலாம். இதை உதாசீனப்படுத்துவது பின்னாளில் எதிர்மறை விளைவுகளை சந்திக்க காரணியாக அமையலாம்.
நீரிழிவு, சிறுநீர் பாதை தொற்று, கர்பிணிப் பெண்களுக்கு கர்ப்ப காலத்தில், புரோஸ்டேட் பிரச்சனைகள் போன்றவற்றின் காரணமாக அடிக்கடி சிறுநீர் கழிக்க நேரிடலாம். மேலும், சிறுநீரக தொற்று, சிறுநீர்ப்பை கற்கள் போன்றவற்றின் கூட இவ்வாறு நிகழலாம் என மருத்துவர்கள் கூறுகின்றனர்.
பெண்கள்! கர்ப்ப காலத்தின் போது பெண்களுக்கு கருப்பை பெரிதாகிவிடும். மேலும், சிறுநீர் பையில் அழுத்தம் அதிகரித்து காணப்படும். இதனால், அடிக்கடி சிறுநீர் கழிக்க நேரிடும். இதிலும், இரு வகை இருக்கிறது, சிலருக்கு சிறிதளவு சிறுநீர் கழியும், சிலருக்கு பெருமளவு சிறுநீர் கழியும் எனப்படுகிறது.
சிறுநீர் பாதை தொற்று, சிறுநீரகத்தில் தொற்று, சிறுநீர் பை அல்லது இடுப்பு பகுதியில் தாக்கங்கள் ஏற்பட்டிருந்தாலும் கூட அடிக்கடி சிறுநீர் வெளியேற்றப்படும். மேலும், இரத்தத்தில் கால்சியம் அதிகளவு கலந்திருந்தாலும் கூட பெண்களுக்கு அடிக்கடி சிறுநீர் கழியும்.
அடிக்கடி சிறுநீர் கழிக்கும் பிரச்சனை இருந்தால் மருத்துவரிடம் பரிசோதனை செய்துக் கொள்வது அவசியம். ஒருவேளை பயப்படும் அளவிற்கு எந்த பிரச்சனையும் இல்லையெனில், நீங்கள் இயற்கை உணவுகளை உண்டே இதற்கு நல்ல தீர்வுக் காணலாம்.
மாதுளையின் தோலை நன்கு பேஸ்ட் போல அரைத்து கொள்ளுங்கள். சிட்டிகை அளவு பேஸ்ட்டை சில துளி நீர் கலந்து பருகுங்கள். ஒருநாளுக்கு இருமுறை என ஐந்து நாட்கள் தொடர்ந்து இதை பருகிவந்தால், சிறுநீர் பையின் வெப்பம் குறையும், அடிக்கடி சிறுநீர் கழியும் பிரச்சனைக்கு நல்ல தீர்வளிக்கும்.
நூறு கிராம் அளவு கொள்ளை வறுத்துக்கொள்ளவும். அதை வெல்லத்துடன் சேர்த்து கலந்து உட்கொள்ளுங்கள். சிறுநீர் பாதை தொற்றுக்கு இது சிறந்த நிவாரணியாக விளங்குகிறது. கொள்ளில் இருக்கும் ஆண்டி-ஆக்ஸிடன்ட்ஸ் சிறந்த மருத்துவ குணம் வாய்ந்தது ஆகும்.
இந்த இரண்டு வீட்டு மருத்துவ முறையும் பக்கவிளைவுகள் அற்றவை. மேலும், இதை நீங்கள் மிக சுலபமாக வீட்டிலேயே தயாரிக்கலாம்.
நிறைய பேர் இதை மிக சாதாரணமாக எடுத்துக் கொள்கின்றனர். ஆனால், அடிக்கடி சிறுநீர் கழிப்பது அபாயகரமான உடல்நலத்தின் அறிகுறியாக கூட இருக்கலாம். இதை உதாசீனப்படுத்துவது பின்னாளில் எதிர்மறை விளைவுகளை சந்திக்க காரணியாக அமையலாம்.
நீரிழிவு, சிறுநீர் பாதை தொற்று, கர்பிணிப் பெண்களுக்கு கர்ப்ப காலத்தில், புரோஸ்டேட் பிரச்சனைகள் போன்றவற்றின் காரணமாக அடிக்கடி சிறுநீர் கழிக்க நேரிடலாம். மேலும், சிறுநீரக தொற்று, சிறுநீர்ப்பை கற்கள் போன்றவற்றின் கூட இவ்வாறு நிகழலாம் என மருத்துவர்கள் கூறுகின்றனர்.
பெண்கள்! கர்ப்ப காலத்தின் போது பெண்களுக்கு கருப்பை பெரிதாகிவிடும். மேலும், சிறுநீர் பையில் அழுத்தம் அதிகரித்து காணப்படும். இதனால், அடிக்கடி சிறுநீர் கழிக்க நேரிடும். இதிலும், இரு வகை இருக்கிறது, சிலருக்கு சிறிதளவு சிறுநீர் கழியும், சிலருக்கு பெருமளவு சிறுநீர் கழியும் எனப்படுகிறது.
சிறுநீர் பாதை தொற்று, சிறுநீரகத்தில் தொற்று, சிறுநீர் பை அல்லது இடுப்பு பகுதியில் தாக்கங்கள் ஏற்பட்டிருந்தாலும் கூட அடிக்கடி சிறுநீர் வெளியேற்றப்படும். மேலும், இரத்தத்தில் கால்சியம் அதிகளவு கலந்திருந்தாலும் கூட பெண்களுக்கு அடிக்கடி சிறுநீர் கழியும்.
அடிக்கடி சிறுநீர் கழிக்கும் பிரச்சனை இருந்தால் மருத்துவரிடம் பரிசோதனை செய்துக் கொள்வது அவசியம். ஒருவேளை பயப்படும் அளவிற்கு எந்த பிரச்சனையும் இல்லையெனில், நீங்கள் இயற்கை உணவுகளை உண்டே இதற்கு நல்ல தீர்வுக் காணலாம்.
மாதுளையின் தோலை நன்கு பேஸ்ட் போல அரைத்து கொள்ளுங்கள். சிட்டிகை அளவு பேஸ்ட்டை சில துளி நீர் கலந்து பருகுங்கள். ஒருநாளுக்கு இருமுறை என ஐந்து நாட்கள் தொடர்ந்து இதை பருகிவந்தால், சிறுநீர் பையின் வெப்பம் குறையும், அடிக்கடி சிறுநீர் கழியும் பிரச்சனைக்கு நல்ல தீர்வளிக்கும்.
நூறு கிராம் அளவு கொள்ளை வறுத்துக்கொள்ளவும். அதை வெல்லத்துடன் சேர்த்து கலந்து உட்கொள்ளுங்கள். சிறுநீர் பாதை தொற்றுக்கு இது சிறந்த நிவாரணியாக விளங்குகிறது. கொள்ளில் இருக்கும் ஆண்டி-ஆக்ஸிடன்ட்ஸ் சிறந்த மருத்துவ குணம் வாய்ந்தது ஆகும்.
இந்த இரண்டு வீட்டு மருத்துவ முறையும் பக்கவிளைவுகள் அற்றவை. மேலும், இதை நீங்கள் மிக சுலபமாக வீட்டிலேயே தயாரிக்கலாம்.






