என் மலர்
பெண்கள் மருத்துவம்
கர்ப்ப காலத்தில் உணவுக் கட்டுப்பாடு, உடற்பயிற்சி அவசியம் தேவை என்பதை பெண்கள் உணர வேண்டும்.
கர்ப்ப காலத்தில் உணவுக் கட்டுப்பாடு, உடற்பயிற்சி அவசியம் தேவை என்பதை பெண்கள் உணர வேண்டும்.
கர்ப்பிணிகள் ‘எந்த வேலையும் செய்யக் கூடாது’ என்றும், அவர்கள் ஆசைப்பட்டதை எல்லாம் சாப்பிட வேண்டும் என்றும் கருதுகிறார்கள். இது தவறு. குழந்தை 3 கிலோ அளவில்தான் பிறக்கும்.
எனவே, கர்ப்ப காலத்தில் பெண்கள் 6 முதல் 10 கிலோ மட்டும் எடை கூடினால் போதுமானது. தற்போது, பல கர்ப்பிணிகள் 10 மாத காலத்துக்குள் 20 கிலோவுக்கும் அதிகமாக எடை அதிகரித்துவிடுகின்றனர். சிலர் பி.எம்.ஐ அளவு 32 ஐ தாண்டிவிடுகிறார்கள். இதற்கு, உடற்பயிற்சி இன்மை மற்றும் உணவுக்கட்டுப்பாடு இன்மையே காரணம்.
கர்ப்ப காலத்தில் முதல் மூன்று மாதங்களுக்குப் பிறகு, அதிக அளவு உடற்பயிற்சி செய்வதோடு, ஊட்டச்சத்துக்கள் நிறைந்த உணவுகள் அதிக அளவு எடுத்துக்கொள்ள வேண்டும். அப்போதுதான், குழந்தை ஆரோக்கியமாகப் பிறக்கும். கர்ப்ப காலத்தில் அதிக அளவில் உடல் எடை கூடவில்லை என்றால், நார்மல் டெலிவரிக்கான வாய்ப்பு அதிகரிக்கிறது.
மேலும், அறுவைசிகிச்சை செய்வதாலும், ஹார்மோன்கள் கோளாறு காரணமாகவும் குழந்தை பெற்ற பிறகு, அதிக அளவு உடல் எடை அதிகரித்துவிடுகிறது. எனவே, கர்ப்ப காலத்தில் உணவுக் கட்டுப்பாடு, உடற்பயிற்சி அவசியம் தேவை.
கர்ப்பிணிகள் ‘எந்த வேலையும் செய்யக் கூடாது’ என்றும், அவர்கள் ஆசைப்பட்டதை எல்லாம் சாப்பிட வேண்டும் என்றும் கருதுகிறார்கள். இது தவறு. குழந்தை 3 கிலோ அளவில்தான் பிறக்கும்.
எனவே, கர்ப்ப காலத்தில் பெண்கள் 6 முதல் 10 கிலோ மட்டும் எடை கூடினால் போதுமானது. தற்போது, பல கர்ப்பிணிகள் 10 மாத காலத்துக்குள் 20 கிலோவுக்கும் அதிகமாக எடை அதிகரித்துவிடுகின்றனர். சிலர் பி.எம்.ஐ அளவு 32 ஐ தாண்டிவிடுகிறார்கள். இதற்கு, உடற்பயிற்சி இன்மை மற்றும் உணவுக்கட்டுப்பாடு இன்மையே காரணம்.
கர்ப்ப காலத்தில் முதல் மூன்று மாதங்களுக்குப் பிறகு, அதிக அளவு உடற்பயிற்சி செய்வதோடு, ஊட்டச்சத்துக்கள் நிறைந்த உணவுகள் அதிக அளவு எடுத்துக்கொள்ள வேண்டும். அப்போதுதான், குழந்தை ஆரோக்கியமாகப் பிறக்கும். கர்ப்ப காலத்தில் அதிக அளவில் உடல் எடை கூடவில்லை என்றால், நார்மல் டெலிவரிக்கான வாய்ப்பு அதிகரிக்கிறது.
மேலும், அறுவைசிகிச்சை செய்வதாலும், ஹார்மோன்கள் கோளாறு காரணமாகவும் குழந்தை பெற்ற பிறகு, அதிக அளவு உடல் எடை அதிகரித்துவிடுகிறது. எனவே, கர்ப்ப காலத்தில் உணவுக் கட்டுப்பாடு, உடற்பயிற்சி அவசியம் தேவை.
கிராமப் புறத்தை சேர்ந்த பெண் குழந்தைகள் மற்றும் இளம்பெண்கள் ஆகியோரின் மேம்பாட்டிற்காக உலகத்தரத்திற்கு நிகரான கல்வி, தொழில் பயிற்சி வாய்ப்புகளை ஏற்படுத்த வேண்டும்.
கிராமப்புற பெண்களுக்கு சமூக நியாயம் மற்றும் ஆண்களுக்கு இணையான சமன்பாட்டினை உருவாக்க வேண்டுமென்பது, மத்திய, மாநில அரசுகளின் சமூக நலத்திட்டங்களின் அடிப்படைக் குறிக்கோள்களுள் ஒன்றாக இருக்கிறது. இதனை நடைமுறைப்படுத்தும் விதமாக, சமூக பொருளாதார ரீதியான முன்னேற்றத்தினை ஏற்படுத்தும் நடவடிக்கைகளும், விழிப்புணர்வு மற்றும் சுயசார்பினை அதிகரிக்கும் வழிமுறைகளும், இத்திட்ட செயலாக்கத்தின் அனைத்து மட்டங்களிலும், முறையாக தேவைப்படுகிறது.
குறிப்பாக கிராமப் புறத்தை சேர்ந்த பெண் குழந்தைகள் மற்றும் இளம்பெண்கள் ஆகியோரின் மேம்பாட்டிற்காக உலகத்தரத்திற்கு நிகரான கல்வி, தொழில் பயிற்சி, கணினிக்கல்வி, அறிவுசார்ந்த பயிற்சிகள், தகவல் பரிமாறுதலுக்கான வாய்ப்பு மற்றும் அது தொடர்பான வலைத்தளம், மேலும் ஆளுமை வளர்ச்சியுடன் இணைந்த தனிப்பட்ட முறையிலான முன்னேற்றம் ஆகியவை தொடர்பான இலவச கல்வி முகாம்களை ஏற்படுத்த வேண்டும்.
சுகாதாரப்பணி :
நடமாடும் மருத்துவமனைகள், நவீன ஆரம்ப சுகாதார மருத்துவ சாதனங்களைக் கொண்டு செயல்படவேண்டும். அப்போதுதான் கிராம சமுதாயத்தின் குறிப்பாக பெண்கள் மற்றும் குழந்தைகளின் ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வு பெருமளவு மேம்பாடு அடையும்.
பொருளாதார மேம்பாடு :
கைவினை பொருட்கள் தயாரிப்பு வர்த்தகம் ஆகியவையும் பொருளாதார ரீதியாக மிகவும் பாதிக் கப்பட்ட கிராமப் புறப்பெண்களுக்கு தொழில்முறைக்கல்வி வழங்குவதனால் அவர்களின் இயல்பான தனித் துவம் வாய்ந்த படைப்புத்திறன் அழிந்துவிடாமல் ஊட்டி வளர்க்கப்படும். மேலும் அவர்கள் பொருளாதார சுதந்திரத்தை அடைய வகை செய்கிறது. மேலும் கிராமப்புற இந்தியாவின் வளமான பாரம்பரியம் பாதுகாக்கப்படுகிறது.
சுற்றுச்சூழல் :
சுற்றுச்சூழல் பாதுகாப்பு செயல்பாடுகளில் இளம்பெண்கள் மற்றும் மகளிருக்கு முக்கியப் பங்கு அளிக்கப்பட்டு சுற்றுச்சூழல் சீர்கேட்டிற்கான பதில் நடவடிக்கைகளில், அவர்களை முழு வீச்சில் ஈடுபடச்செய்யவேண்டும். எனவே நம் பூமியின் வளங்கள் பாதுகாக்கப்படுவதில் அவர்களுக்கு இருக்கும் முக்கியப்பங்கு குறித்த விழிப்புணர்வை உண்டாக்குவதில் வெற்றி பெறலாம்.
குறிப்பாக கிராமப் புறத்தை சேர்ந்த பெண் குழந்தைகள் மற்றும் இளம்பெண்கள் ஆகியோரின் மேம்பாட்டிற்காக உலகத்தரத்திற்கு நிகரான கல்வி, தொழில் பயிற்சி, கணினிக்கல்வி, அறிவுசார்ந்த பயிற்சிகள், தகவல் பரிமாறுதலுக்கான வாய்ப்பு மற்றும் அது தொடர்பான வலைத்தளம், மேலும் ஆளுமை வளர்ச்சியுடன் இணைந்த தனிப்பட்ட முறையிலான முன்னேற்றம் ஆகியவை தொடர்பான இலவச கல்வி முகாம்களை ஏற்படுத்த வேண்டும்.
சுகாதாரப்பணி :
நடமாடும் மருத்துவமனைகள், நவீன ஆரம்ப சுகாதார மருத்துவ சாதனங்களைக் கொண்டு செயல்படவேண்டும். அப்போதுதான் கிராம சமுதாயத்தின் குறிப்பாக பெண்கள் மற்றும் குழந்தைகளின் ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வு பெருமளவு மேம்பாடு அடையும்.
பொருளாதார மேம்பாடு :
கைவினை பொருட்கள் தயாரிப்பு வர்த்தகம் ஆகியவையும் பொருளாதார ரீதியாக மிகவும் பாதிக் கப்பட்ட கிராமப் புறப்பெண்களுக்கு தொழில்முறைக்கல்வி வழங்குவதனால் அவர்களின் இயல்பான தனித் துவம் வாய்ந்த படைப்புத்திறன் அழிந்துவிடாமல் ஊட்டி வளர்க்கப்படும். மேலும் அவர்கள் பொருளாதார சுதந்திரத்தை அடைய வகை செய்கிறது. மேலும் கிராமப்புற இந்தியாவின் வளமான பாரம்பரியம் பாதுகாக்கப்படுகிறது.
சுற்றுச்சூழல் :
சுற்றுச்சூழல் பாதுகாப்பு செயல்பாடுகளில் இளம்பெண்கள் மற்றும் மகளிருக்கு முக்கியப் பங்கு அளிக்கப்பட்டு சுற்றுச்சூழல் சீர்கேட்டிற்கான பதில் நடவடிக்கைகளில், அவர்களை முழு வீச்சில் ஈடுபடச்செய்யவேண்டும். எனவே நம் பூமியின் வளங்கள் பாதுகாக்கப்படுவதில் அவர்களுக்கு இருக்கும் முக்கியப்பங்கு குறித்த விழிப்புணர்வை உண்டாக்குவதில் வெற்றி பெறலாம்.
ஒரு பெண்ணின் எடை திருமணத்திற்கு பிறகு தான் கூடுகிறது என்பதற்கான காரணங்களை கீழே பார்க்கலாம்.
ஒரு பெண்ணின் உடல் எடை அதிகரிப்பு, அவள் திருமணம் செய்து கொண்ட பின்னர்தான் ஆரம்பமாகிறது. முதல் குழந்தை பிறந்த பிறகு அவளது உடல் எடை இன்னும் அதிகமாகிறது.
அதே பெண் இரண்டாவது குழந்தை பெற்றுக்கொள்ளும்போதும் அவளது உடல் எடை அதிகரிக்கிறது. ஆனால், இந்த உடல் எடை முதல் குழந்தை பெற்றபோது அதிகரித்த உடல் எடையைவிட சற்று குறைந்ததாகும். இந்த உடல் எடை அதிகரிப்பு, அந்த பெண்களுக்கு எதிர்கால வாழ்க்கையில் பல பிரச்சினைகளை கொண்டு வந்துவிடுகிறது.
அதை தவிர்க்க வேண்டும் என்றால் அவர்களது உணவு பழக்க வழக்கத்தில் மாற்றங்கள் கொண்டுவர வேண்டும். இப்போதெல்லாம், பக்கெட்டுகளில் அடைத்து விற்கப்படும் உணவுப் பொருட்கள் மற்றும் பாஸ்ட் புட் வகைகளைத்தான் பெண்கள் விரும்பி சாப்பிடுகிறார்கள். இதனால் அவர்களது உடல் எடை அதிகப்படியாக கூடுதலாகிறது.
இன்றைய பெண்களுக்கு உடல் உழைப்பும் குறைந்து விட்டது. அதிக நேரம் தூங்குகிறார்கள். இதுவும் அவர்களது உடல் எடை அதிகரிக்க மற்றொரு முக்கிய காரணம். அதனால், தினமும் மூன்று வேளை உட்கொள்ளும் உணவின் அளவை குறைப்பதோடு, தேவையான உடற்பயிற்சிகளையும் தினமும் செய்து வந்தால், அதிகப்படியான உடல் எடையை குறைக்கலாம்.
பெண்களுக்கு ஏற்படும் மெனோபாஸும் அதற்கான தீர்வாகும். பெண்களுக்கு மட்டுமல்ல ஆண்களுக்கும் மெனோபாஸ் பற்றி தெரிந்திருக்க வேண்டும். ஒரு பெண் தன்னுடைய நிலையிலிருந்து தடுமாறும் கால கட்டம் இது.
கோபம், சோகம் என பல மனமாற்றங்களுக்கு ஆட்பட்டு திணறும் போது கணவனோ, மகனோ அவளின் நிலையை அறிந்து செயல்படுதல் முக்கியம். மெனோபாஸ் 45 வயதிற்கு மேல் பெண்ணின் சினைப் பையின் செயல்பாடு குறைந்து மாதவிலக்கு முறையற்றதாகி இறுதியில் நின்றுவிடும் நிலைக்கு மெனோபாஸ் என்று பெயர்.
பொதுவாக 45 வயதிற்கு மேல் 52 வயதுக்குள் ஏற்படும் இது, தற்போது 30 வயதிற்கும் மேல் உள்ள பெண்களுக்கே ஏற்படுகிறது.
அதே பெண் இரண்டாவது குழந்தை பெற்றுக்கொள்ளும்போதும் அவளது உடல் எடை அதிகரிக்கிறது. ஆனால், இந்த உடல் எடை முதல் குழந்தை பெற்றபோது அதிகரித்த உடல் எடையைவிட சற்று குறைந்ததாகும். இந்த உடல் எடை அதிகரிப்பு, அந்த பெண்களுக்கு எதிர்கால வாழ்க்கையில் பல பிரச்சினைகளை கொண்டு வந்துவிடுகிறது.
அதை தவிர்க்க வேண்டும் என்றால் அவர்களது உணவு பழக்க வழக்கத்தில் மாற்றங்கள் கொண்டுவர வேண்டும். இப்போதெல்லாம், பக்கெட்டுகளில் அடைத்து விற்கப்படும் உணவுப் பொருட்கள் மற்றும் பாஸ்ட் புட் வகைகளைத்தான் பெண்கள் விரும்பி சாப்பிடுகிறார்கள். இதனால் அவர்களது உடல் எடை அதிகப்படியாக கூடுதலாகிறது.
இன்றைய பெண்களுக்கு உடல் உழைப்பும் குறைந்து விட்டது. அதிக நேரம் தூங்குகிறார்கள். இதுவும் அவர்களது உடல் எடை அதிகரிக்க மற்றொரு முக்கிய காரணம். அதனால், தினமும் மூன்று வேளை உட்கொள்ளும் உணவின் அளவை குறைப்பதோடு, தேவையான உடற்பயிற்சிகளையும் தினமும் செய்து வந்தால், அதிகப்படியான உடல் எடையை குறைக்கலாம்.
பெண்களுக்கு ஏற்படும் மெனோபாஸும் அதற்கான தீர்வாகும். பெண்களுக்கு மட்டுமல்ல ஆண்களுக்கும் மெனோபாஸ் பற்றி தெரிந்திருக்க வேண்டும். ஒரு பெண் தன்னுடைய நிலையிலிருந்து தடுமாறும் கால கட்டம் இது.
கோபம், சோகம் என பல மனமாற்றங்களுக்கு ஆட்பட்டு திணறும் போது கணவனோ, மகனோ அவளின் நிலையை அறிந்து செயல்படுதல் முக்கியம். மெனோபாஸ் 45 வயதிற்கு மேல் பெண்ணின் சினைப் பையின் செயல்பாடு குறைந்து மாதவிலக்கு முறையற்றதாகி இறுதியில் நின்றுவிடும் நிலைக்கு மெனோபாஸ் என்று பெயர்.
பொதுவாக 45 வயதிற்கு மேல் 52 வயதுக்குள் ஏற்படும் இது, தற்போது 30 வயதிற்கும் மேல் உள்ள பெண்களுக்கே ஏற்படுகிறது.
15- 49 வயதுவரையுள்ள பெண்களுக்கான சுகாதார குறிப்புகளை கீழே படித்து தெரிந்து கொள்ளலாம்.
15- 49 வயது வரை, கருத்தரிக்கக் கூடிய வயது என்று கூறப்படுகிறது. பெரும்பாலும், பெண்களுக்குக் கர்ப்பமாக இருக்கும் போதும் பிரசவமான பிறகும் தான் கவனிப்பு அளிக்கபடுகிறது. ஒரு பெண் தன் பிள்ளைகளைப் பெற்றெடுத்தப்பின், அவளுடைய நலனைக் குறித்து தானோ அல்லது மற்றவர்களோ போதுமான கவனம் செலுத்துவதில்லை. ஆனால் இந்த வயதில் தான், பெரும்பாலும் பிறப்புறுப்பு மற்றும் சிறுநீர் சம்பந்தமான பிரச்சனைகள், இரத்த சோகை போன்ற நோய்கள் ஏற்படுகின்றன.
பொதுவாக பெண்கள் தங்கள் உடல் நலனைக் குறித்து போதுமான கவனம் செலுத்தமால் இருப்பதற்கு பல காரணங்கள் உண்டு.
என்ன தனக்கு நேர்த்தாலும் பேசாமல் அமைதியாக இருந்து, சகித்துக் கொள்ள வேண்டும் என்கிற எண்ணம்.
தன் உடல் நலக்குறைவுகளைப் பற்றி மற்றவர்களிடம் கூற தயக்கம், மற்றும் கூச்சம்.
பெண்களுக்கு வரக்கூடிய நோய்கள் பற்றியும் அதனை கவனிக்காமல் விட்டுவிட்டால் நேரிடக்கூடிய விளைவுகள் பற்றிய போதிய விழிப்புணர்வு/ அறிவு இல்லாமை.
சிகிச்சை எடுத்துக் கொள்ள போதிய பணவசதி இல்லாமை. கணவனிடம் கேட்டுப் பெற்றுக் கொள்ள முன்னுரிமை இல்லாமை.
குடும்பத்திலுள்ள மற்றவர்களைப் பற்றி அக்கரை காட்டி, தன்னுடைய பிரச்சனைகளைக் குறித்து கவனம் செலுத்தாமல் இருப்பது ஒரு ” தியாகச் செயல்” என்று நினைப்பது.
பொதுவாக பெண்களுக்கு வெள்ளைப்படுதல், அசாதாரணமாக குறைவாகவோ, அதிகமாகவோ மாதவிடாயின் போது அல்லது இடையில் உதிரம் போகுதல், சிறு நீர் கழிக்கும் போது எரிச்சல், அடி வயிற்று வலி, இடுப்பு வலி போன்ற உபாதைகள் ஏற்படக்கூடும். இவைகள் தொடர்ந்து காணப்பட்டால் அருகிலுள்ள மருத்துவரை அணுகி சிகிச்சை பெற வெண்டும்.
கர்ப்ப காலத்தில் பெண்கள் யோகா பயிற்சியை செய்யலாமா? வேண்டாமா? என்பதை பார்க்கலாம்.
மூலை முடுக்கெல்லாம் யோகா பயற்சியாளர்கள். யோகாசனம் செய்தால் என்றும் இளமையாக இருக்கலாம். எந்த நோயும் நம்மை நெருங்காது என்று பலரும் பலவிதமாக சொல்லி வருகிறார்கள்.
கர்ப்பமாக உள்ளவர்கள் யோகா பயிற்சியை மேற்கொள்ளலாமா? அப்படி செய்வதானால் என்னென்ன பலன்கள் ஏற்படும்? என்ற பல சந்தேகங்கள் பெண்களுக்கு ஏற்படும். இதற்கு விடை இதோ….
கர்ப்பமாக உள்ளவர்கள் யோகா பயிற்சியை மேற்கொள்வதால் மூச்சு விடுவதில் சிரமம் ஏற்படாமலிருக்க உதவும். புத்துணர்ச்சியுடன் இருக்கவும் செய்யும்.
உடலில் இரத்த ஓட்டம் சீராக இருப்பதற்கும், பிரசவ வலி வரும் போது அதை எதிர்கொள்ளவும் உதவும். பிரசவம் வரை மன அழுத்தம் இல்லாமலிருப்பதற்கு யோகா பயன்படும்.
மேலும் சுகப்பிரசவம் ஏற்பட உதவும். கர்ப்ப காலத்தில் பயிற்சியாளரின் துணையுடன் எளிமையான, வயிற்று பகுதிக்கு அழுத்தம் கொடுக்காத ஆசனங்களை செய்ய வேண்டும்.
இக்காலகட்டத்தில் எல்லாவித பயிற்சிகளும் கர்ப்பமாக உள்ளவர்களுக்கு ஏற்றதில்லை என்பதால், யோகா பயிற்சியாளர் மேற்பார்வையி்ல் செய்வது நன்மை பயக்கும்.
பெற்றோரின் இரத்த வகை குழந்தை பிறப்பில் ஏற்படுத்தும் பாதிப்புகளை கீழே பார்க்கலாம்.
இரத்தில் பல வகை உண்டு. அதில் Rh பாஸிடிவ் மற்றும் Rh நெகடிவ் என்று இரண்டு வகை.
ஒரு வகை குரங்கின் மூலம் கண்டுபிடிக்கப்பட்டதே Rhesus என்பதாகும். இதனால் நாம் அதை Rh என்று கூறுகிறோம்.
கர்ப்பமாக இருப்பவர்கள் Rh பாஸிட்டிவாக இருக்கும் வரை பிரச்சனை இல்லை. உலகில் மிக குறைந்த பேர் தான் Rh நெகடிவ்வாக இருப்பார்கள். மனைவியின் இரத்தம் Rh நெகட்டிவ்வாக இருந்து, கணவனின் இரத்தம் Rh பாஸிட்டிவாக அமைந்துவிட்டால் பிரச்சனை.
டெலிவரி நேரத்தில் தாயின் Rh நெகட்டிவ் ரத்தத்தில் குழந்தையின் Rh பாஸிட்டிவ் ரத்தம் கலக்கும்போது எதிர்வினையை உருவாக்குகிறது.
இதனால் முதல் குழந்தைக்கு எந்த வித பாதிப்பும் ஏற்படுவது இல்லை மற்றும் தாயின் உடலில் எதிர்ப்பு சக்திக் குறைந்து விடுகிறது.
இதனால் இரண்டாவது குழந்தை வயிற்றில் இருக்கும்போதோ, அல்லது பிறந்த பின்போ குழந்தைக்கு மஞ்சள்காமாலை, இரத்தச்சோகை என்று கடுமையான நோய்கள் உண்டாகி பாதிப்பை ஏற்படுத்தலாம்.
இதைத் தடுக்க Rh நெகட்டிவ் இரத்தம் உள்ள கர்ப்பிணிப் பெண்களுக்கு ஏழாவது மாதத்தில் கண்டிப்பாக தடுப்பூசிப் போட வேண்டும்.
தற்போது நவீன டெக்னாலஜி மூலம் கருப்பையில் உள்ளக் குழந்தையின் இரத்தத்தை மாற்றுமளவுக்கு நாம் முன்னேறி விட்டோம்.
இந்த ஊசியைப் முதல் குழந்தை பிறந்த 24 மணி நேரத்துக்குள்ளும் போடலாம். இருந்தாலும் முன்பே போட்டுக் கொள்வது மிகவும் நல்லது.
நீங்கள் விரைவில் கருத்தரிக்க விரும்பினால் என்னென்ன வழிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்பதை கீழே பார்க்கலாம்.
இன்றைய காலத்தில் கருத்தரிப்பது என்பது கடினமான ஒன்றாகிவிட்டது. இதற்கு தற்போதைய வாழ்க்கை முறை மற்றும் பழக்கவழக்கங்கள் தான் முக்கிய காரணம். நீங்கள் விரைவில் கருத்தரிக்க விரும்பினால் சரியான காலத்தில் உடலுறவு கொள்ள வேண்டும். இங்கு எந்த காலத்தில் உடலுறவில் ஈடுபட்டால், வேகமாக கருத்தரிக்க முடியும் என்பதை கீழே பார்க்கலாம்.
* கருவளமிக்க நாட்களில் உடலுறவு கொண்டால், கருத்தரிக்கும் வாய்ப்பு அதிகமாக இருக்கும். ஒரு பெண்ணிற்கு கருவளமிக்க நாட்கள் என்பது மாதவிடாய் சுழற்சியின் 8 ஆம் நாளில் இருந்து, 19 ஆவது நாள் வரை ஆகும்.
* அதிகாலையில் 5.48 மணிக்கு உடலுறவில் ஈடுபடுவது சிறந்தது. ஏனெனில் இந்த நேரத்தில் டெஸ்டோஸ்டிரோன் அளவு அதிகமாக இருப்பதாவும், உடலில் ஆற்றல் அதிகமாக இருப்பதாகவும், ரிலாக்ஸான மனநிலையுடனும் இருப்பதால், இக்காலத்தில் உடலுறவு கொள்ளும் போது வேகமாக கருத்தரிக்க முடியும்.
* அதிகாலையில் உடலுறவு கொள்வது எப்படி சிறந்ததோ, அதேப்போல் இரவில் படுக்கும் முன் உடலுறவு கொள்வதும் கருத்தரிக்கும் வாய்ப்பை அதிகரிக்கும். வேண்டுமானால் முயற்சித்துப் பாருங்கள்.
* தற்போதைய வேலைப்பளுமிக்க டென்சன் நிறைந்த வாழ்க்கை முறையால், தம்பதிகள் குறைவான அளவில் உடலுறவு கொள்கின்றனர். இதன் காரணமாக, ஆண்களின் விந்தணுவின் இயக்கம் பாதிக்கப்பட்டு, கருப்பையை அடைய முடியாமல் போய், கருத்தரிக்கும் வாய்ப்பும் குறைகிறது. எனவே குறைந்தது வாரத்திற்கு 2 முறையாவது உடலுறவு கொள்ள வேண்டும். இதனால் கருத்தரிக்கும் வாய்ப்பு அதிகரிக்கும்.
* மன அழுத்தம் உடலில் ஹார்மோன் மாற்றங்களை ஏற்படுத்தி, உடலின் சாதாரண இயக்கங்களான தூக்கம், செரிமானம், உடல் எடை போன்றவற்றில் இடையூறை ஏற்படுத்தி, உடல் சோர்வை அதிகரித்து, மறைமுகமாக பெண்களின் இனப்பெருக்க சுழற்சியையும், ஆண்களின் விந்தணுவின் எண்ணிக்கையையும் பாதிக்கும். எனவே மனதை ரிலாக்ஸாக வைத்துக் கொள்ள தம்பதிகள் அடிக்கடி ஹனிமூன்/சுற்றுலா செல்ல வேண்டும்.
பெண்களுக்கு ஏற்படும் நோய்களில் ஒன்று வெள்ளைப்படுதல், இதனை வெட்டை என்றும் சொல்வார்கள்.
பெண்களுக்கு ஏற்படும் நோய்களில் ஒன்று வெள்ளைப்படுதல், இதனை வெட்டை என்றும் சொல்வார்கள். குறிப்பாக 15 வயது முதல் 45 வயது வரையிலான பெண்களுக்கு இந்த நோய் ஏற்படுகிறது.
வெள்ளைப்படுதல் என்பது என்ன?
நமது உடலில் பல பகுதிகளில் பிசுபிசுப்புத் தன்மை தேவைப்படுகிறது. பெண்களின் பிறப்புறுப்பு எப்போதும் ஈரப்பசை மற்றும் வழவழப்புடன் இருக்க வேண்டியதிருக்கிறது. அதற்காக இந்த பிசுபிசுப்பான வெள்ளைத் திரவம் சுரக்கிறது.
இது பிறப்புறுப்பின் தசைப் பகுதியில் இருந்தும், கருப்பையின் வாய் மற்றும் அதன் உட்சுவர்களில் இருந்தும் சிறிதளவு சுரந்து வருகிறது. இதன் சுரப்பு அதிகமாகி விடும் போது அதனை வெள்ளைப்படுதல் என்று கூறுகிறோம்.
இதன் அறிகுறிகள் :
பிறப்புறுப்பில் அதிகளவு வெள்ளைப்படுதல்
வெள்ளை மற்றும் மஞ்சள் நிறத்தில் நாற்றத்துடன் சளிபோல் வெளியேறுதல்
வெள்ளைப்படும் இடங்களில் அரிப்பு, எரிச்சல் உண்டாதல்
சிறுநீர் மிகுந்த எரிச்சலுடன் வெளியேறுதல்
வெள்ளைப்படும் காலங்களில் உடல் சோர்வு, அடிவயிறு வலி, கை கால் வலி, இடுப்பு வலி, முதுகு வலி உண்டாகுதல்
நோய்க்கான காரணங்கள் :
பொதுவாக ஒரு சில பெண்களுக்கு பூப்பெய்திய காலம் தொட்டே வெள்ளைப்படுதல் இருக்கும்.
ரத்த சோகையால் பாதிக்கப்பட்ட பெண்கள்
அதிக உஷ்ணம், அதீத சிந்தனை, காரம், உப்பு மிகுந்த உணவு
தூக்கமின்மை, மனக்கவலை, கல்லீரல் பாதிப்பு
சுகாதாரமற்ற இடங்களில் சிறுநீர் கழித்தல்
அதிக மன உளைச்சல், மனபயம், சத்து இல்லாத உணவு
இதனை ஆரம்பத்தில் இருந்தே கவனித்து மருத்துவரிடம் தகுந்த சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டும்.
வெள்ளை நோயைத் தவிர்க்க :
உடலை நன்கு சுகாதாரமாக வைத்துக் கொள்ள வேண்டும்.
பயம், மன உளைச்சல் போன்றவற்றை குறைத்துக் கொள்ள வேண்டும்.
உடலுக்கு வெப்பத்தை உண்டாக்கும் உணவுகளை அறவே தவிர்ப்பது நல்லது.
நோய் எதிர்ப்பு சக்தியை உண்டாக்கும் உணவுகளை அதிகம் சாப்பிட வேண்டும்.
நோயை குணப்படுத்தும் மூலிகை மருந்து :
* கறிவேப்பிலை, கொத்தமல்லி தேவையான அளவு எடுத்து சூப் செய்து இரண்டு வாரம் தொடர்ந்து அருந்தி வந்தால், வெள்ளைப்படுதல் குணமாகும்.
* வல்லாரையை ஒரு கைப்பிடி அளவு எடுத்து அரைத்து ஆட்டுப்பாலில் கலந்து சாப்பிடலாம்.
* அருகம்புல்லை எடுத்து சிறு சிறுதுண்டுகளாக நறுக்கி 4 குவளை நீரில் கொதிக்க வைத்து அது நன்கு வற்றி 1 குவளை ஆனவுடன் எடுத்து அதனுடன் மிளகுத்தூள் தேவையான அளவு பனங்கற்கண்டு கலந்து காலை, மாலை இருவேளையும் 15 நாட்கள் அருந்தி வந்தால் வெள்ளைப்படுதல் குணமாகும்.
* ஓரிதழ் தாமரை இலைகளை நன்கு நீர்விட்டு அலசி அரைத்து எலுமிச்சம் பழம் அளவு உருண்டை எடுத்து காய்ச்சாத பசும் பால் அல்லது வெள்ளாட்டுப்பாலில் கலந்து காலையில் அருந்தி வந்தால் வெள்ளைப்படுதல் எளிதில் குணமாகும்.
பெண்களின் அந்தரங்க இடத்தில் வரும் புண், எரிச்சல், அரிப்பு போன்ற பிரச்சனைகளை அலட்சியம் செய்யக்கூடாது.
பொதுவாக பெண்கள் அந்தரங்கம், பாலியல் பற்றி பேசுவதற்கு கூச்சப்படுவதுண்டு, ஆனால் இது சரியானதல்ல.
தங்களுக்கு இருக்கும் பிரச்சனை பற்றி அம்மாகளிடம், தோழிகளிடம் அல்லது தேவையிருப்பின் மருத்துவர்களிடம் பேசி சரிசெய்து கொள்ள வேண்டியது அவசியம்.
பெண்களின் பிறப்புறுப்பில் புண் வருவதற்கு ஏராளமான காரணங்கள் உள்ளன, ஏதேனும் சிறு பிரச்சனை இருந்தால் உடனடியாக சரிசெய்ய வேண்டும்.
இல்லாவிட்டால், நிலைமை மோசமாகி பின் பயங்கர விளைவை சந்திக்க வேண்டியிருக்கும்.
சோப்பு மற்றும் டிடர்ஜெண்ட்டுகளில் உள்ள கெமிக்கல்கள் சில நேரங்களில் சருமத்தில் எரிச்சலையும், அரிப்பையும் ஏற்படுத்தும். எனவே அதிகமாக சோப்புக்களைப் பயன்படுத்துவதைத் தவிர்த்திடுங்கள்.
அதிக வறட்சியும் புண்களை உண்டாக்கும், ஹார்மோன் மாற்றங்கள், பிறப்புக் கட்டுப்பாட்டு மாத்திரைகள் மற்றும் இதர மருந்துகளாலும் வறட்சி ஏற்படலாம்.
ஒரு பெண்ணின் கருப்பைக்கு வெளியே திசு வளர்ச்சி அடைந்திருந்தால், அதன் காரணமாகவும் யோனியில் காயங்களையும், வலியையும் சந்திக்க வேண்டியிருக்கும்.
இதுதவிர பால்வினை நோய் இருந்தாலும் புண்கள் ஏற்படும், இதற்கு மருத்துவரை அணுகி ஆலோசனை பெறுவது அவசியம்.
இன்றைய காலக்கட்டத்தில் ஆங்காங்கே சில பெண் குழந்தைகள் 8-9 வயதில் எல்லாம் பருவமடைவதை நாமே கண்கூட பார்க்க முடியும்.
முன்பெல்லாம் பெண்கள் பருவமடைதல் என்பது 13-16 வயதுக்குள் நடந்து வந்தது. இது தான் இயல்பும் கூட. ஆனால், இன்றைய காலக்கட்டத்தில் ஆங்காங்கே சில பெண் குழந்தைகள் 8-9 வயதில் எல்லாம் பருவமடைவதை நாமே கண்கூட பார்க்க முடியும். இதற்கு ஒருவகையில் நமது வாழ்வியல், உணவுக் பழக்கங்களும் காரணம் என நிபுணர்கள் கூறுகின்றனர்.
மிக விரைவாக பருவமடைதல் என்பது நகர்ப்புற பகுதியில் வசிக்கும் பெண்கள் மத்தியில் அதிகப்படியாக காணப்படுகிறது. நகர்ப்புறங்களில் வசிக்கும் பெண் குழந்தைகள் மத்தியில் தான் 8 வயதில் பருவமடையும் நிகழ்வுகள் பரவலாக காணப்படுகிறது.
ஆனால், இன்றளவிலும் கிராமப்புற பகுதிகளில் வசிக்கும் பெண்கள் மத்தியில் பருவமடைதல் என்பது 15-16 வயதில் தான் ஏற்படுகிறது. நகர்ப்புற, கிராமப்புற பகுதிகளுக்கு மத்தியில் இம்மாற்றம் பெரிதளவில் காணப்படுவது ஆச்சரியத்தை அளிக்கிறது.
பெண் குழந்தைகள் வேகமாக பருவமடைதலை Precocious Puberty என கூறுகின்றனர். ஓர் பெண் குழந்தை வேகமாக பருவமடைய போகிறாள் என்பதை, அக்குழந்தையின் மார்பக வளர்ச்சி மற்றும் உடல் பகுதிகளில் வளரும் முடி வளர்ச்சியை வைத்து கண்டறிய முடியும் என நிபுணர்கள் கூறுகின்றனர்.
வேகமாக பருவமடைவது மனரீதியாகவும், உடல் ரீதியாகவும் பெண்களுக்கு நிறைய பாதிப்புகளை உண்டாக்குகிறது. இதனால் அடிக்கடி மனநிலை மாற்றங்கள் (Mood Swings), மாதவிடாய் கோளாறுகள் போன்றவை உண்டாகும் என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.
மேலும், வேகமாக பருவமடைதல் பெண் குழந்தைகள் மத்தியில் பாலிய எண்ணங்கள் அதிகரிக்க பெரும் காரணியாக இருக்கிறது எனவும், இதனால் பெண்கள் மத்தியில் மனநிலை மாற்றங்கள் பரவலாக நிகழலாம் என்றும் கூறுகின்றனர்.
வாழ்வியல் முறை, சுற்றுப்புற தூய்மை கேடு, உணவு முறைகளில் மாற்றம் போன்றவை இதற்கான முக்கிய காரணிகள் என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.
காரணங்கள்
- சிறுவயதில் உடல்பருமன்
- கோழி இறைச்சி அதிகம் உண்பது
- மரபணு மாற்றப்பட்ட காய்கறி, பழங்கள்
- உணவுகளில் Bisphenol A (BPA) கலப்பு
- பூச்சிக்கொல்லி
- சிறுவயதில் அதிக மன அழுத்தம்
பெண் குழந்தைகள் சிறு வயதிலேயே பருவமடைதலை தடுக்க என்ன செய்ய வேண்டும்?
- தாய்ப்பால் தர வேண்டும்
- சோயா உணவுகளை தவிர்த்தல்
- இயற்கையாக விளைவிக்கப்பட்ட உணவுகள் உண்ண வேண்டும்
- பதப்படுத்தப்பட்ட உணவுகளை தவிர்க்க வேண்டும்
- பிளாஸ்டிக் பெட்டி, பாட்டிலில் அடைக்கப்பட்ட நீர், உணவு, ஜூஸ் போன்றவற்றை தவிர்க்க வேண்டும்.
- மரபணு மாற்றப்பட்டம், செயற்கை பால் உணவுகள் முற்றிலுமாக தவிர்க்க வேண்டும்.
- செயற்கை சோப்பு கட்டிகளை தவிர்க்க வேண்டும்
மாதவிடாய் காலங்களில் பெண்கள் பயன்படுத்தும் சில தரமற்ற நாப்கின்களால், உடல் ஆரோக்கியம் பாதிக்கப்படுவதாக, மகளிர் மருத்துவர்கள் எச்சரிக்கை மணி அடிக்கின்றனர்.
மாதவிடாய் காலங்களில் பெண்கள் பயன்படுத்தும் சில தரமற்ற நாப்கின்களால், உடல் ஆரோக்கியம் பாதிக்கப்படுவதாக, மகளிர் மருத்துவர்கள் எச்சரிக்கை மணி அடிக்கின்றனர். சந்தையில் கிடைக்கும் நாப்கின்களை ஆய்வு செய்தபோது, சில நாப்கின்களில் மறுசுழற்சி செய்யப்பட்ட பஞ்சு பயன்படுத்தப்பட்டிருப்பது தெரிய வந்துள்ளதாக கூறுகின்றனர் இவர்கள். மறுசுழற்சிக்கு அவர்கள் பயன்படுத்துவது, பிளாஸ்டிக் வகை பொருட்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
பொதுவாக, நான்கு லேயர்களைக் கொண்ட நாப்கினில், முதல் லேயர் சுத்திகரிப்பு செய்யப்படாத பிளாஸ்டிக் பொருளாலானது; இரண்டாவது லேயர், மறு சுழற்சி செய்யப்பட்ட, அச்சடிக்கப்பட்ட டிஷ்யூ பேப்பர்; மூன்றாவது லேயர், ஜெல் (பெட்ரோலிய பொருளால் தயாரானது); கீழ் லேயர் பாலித்தீன். நாப்கினை உள்ளாடையுடன் ஒட்ட வைப்பது, தொழிற்சாலைகளில் பயன்படுத்தும் பசை வகை.
இரண்டாம் லேயரில் உள்ள அச்சடிக்கப்பட்ட டிஷ்யூ பேப்பரில் டையிங் ரசாயனம் இருப்பதுடன், ஹைப்போ குளோரைட் என்ற வேதிப்பொருளாலும் அந்த பேப்பர் பிளீச்சிங் செய்யப்படுகிறது. பெண்கள் இதைப் பயன்படுத்தும்போது, நுண்ணிய துகள்களாகப் படிந்திருக்கும் இந்த ரசாயனங்கள், ஈரப்பதத்தின் காரணமாக டை யாக்ஸேன் ஆக மாறுகிறது. கேன்சர் நோய்க்கான மூலக்காரணிகளில் இந்த டையாக்ஸேனும் ஒன்று.
இத்தனை ரசாயனங்களால் ஆன இந்த நாப்கின்களைப் பயன்படுத்துவதால் பிறப்பு உறுப்பில் அலர்ஜி, சிறுநீர் பாதையில் பிரச்சனை, வெள்ளைப்படுதல், அதிகமான உதிரப்போக்கு, கர்ப்பவாய் கேன்சர் என்று பல பிரச்சனைகள் வரிசை கட்ட நேரிடுகிறது. அதிக விலை கொடுத்து வாங்கும் நாப்கின்களில் கூட, தயாரிக்கப்படும் தேதிதான் இருக்குமே தவிர, காலாவதி நாள் குறிப்பிடப்படுவதில்லை. சில கம்பெனி தயாரிப்புகளில், மட்டுமே மூன்று மாதங்களுக்குள் பயன்படுத்தினால் நல்லது என்ற வரிகளை காண முடிகிறது.
இன்று பெண்களின் பூப்படையும் வயது, 13 என்றாகிவிட்ட நிலையில், அதிலிருந்து மெனோபாஸ் ஏற்படும், 45 வயது வரை, மாதத்தில் மூன்று, நான்கு நாட்கள் என கிட்டத்தட்ட, 30 வருடங்களுக்கு மேலாக, அவர்கள் நாப்கின் உபயோகிக்கின்றனர். ரசாயனக் கலவைகளால் உருவான நாப்கினை, தொடர்ந்து உபயோகிக்கும்போது, அதன் பக்கவிளைவுகள் தவிர்க்க முடியாததாகிறது. வெளிநாட்டில் நாப்கின் என்பது, பெண்களின் ஆரோக்கியம் சம்பந்தப்பட்ட பொருள் என்று அக்கறைப்படுவதால், அதன் தரக்கட்டுப்பாட்டு சோதனையை வலுவாக்கி இருக்கிறார்கள்.
மாதவிடாய் காலங்களில் தரமான நாப்கின் உபயோகிக்க வேண்டும். அல்லது இரண்டு மணி நேரத்துக்கு ஒரு முறை கட்டாயம் நாப்கினை மாற்றிக் கொள்ள வேண்டும். இதுதான் பெண்களை பல சுகாதார பிரச்சனைகளில் இருந்தும் பாதுகாக்கும்.
மார்பக புற்றுநோய் வருவதற்கான காரணங்களையும் அதை தடுப்பதற்கான வழிமுறைகளையும் கீழே பார்க்கலாம்.
மார்பகப் புற்றுநோய் வருவதற்னு எச்.ஈ.ஆர்.2 என்ற ஜீனும் ஒரு காரணமாகிறது. தாய்மை அடையாத பெண்கள், பரம்பரைக் காரணங்கள், சிறு வயதில் பூப்பு அடைவது மற்றும் நீண்ட நாட்கள் கழித்து மெனோபாஸ் அடைவது, அதிக உடல் எடை, மதுப்பழக்கம் மற்றும் புகைப்பழக்கம் ஆகியவை மார்பகப் புற்றுநோய் ஏற்பட முக்கிய காரணங்களாகும். ஈஸ்ட்ரோஜென் சுரப்பு அதிகரிக்கும் போதும் கேன்சர் வளர்ச்சி அதிகரிக்கிறது.
மார்பகப் புற்றுநோய் வராமல் தடுக்க என்ன சாப்பிடலாம்?
ஈஸ்ட்ரோஜென் சுரப்பை கட்டுப்படுத்துவதன் மூலம் மார்பகப் புற்றுநோய்க்கான வாய்ப்புகளைக் குறைக்கலாம்.
பழங்கள், காய்கறிகள், புரோட்டீன் உள்ள உணவுகளை அதிகம் எடுத்துக் கொள்ள வேண்டும். அசைவத்தில் ஆட்டுக்கறி, மீன், மாட்டுக்கறி மற்றும் பன்றிக் கறி ஆகியவற்றை கண்டிப்பாக தவிர்க்கவும். இதே போல் பால் மற்றும் பால் பொருட்கள், நெய், வெண்ணெய், டீ, காபி, கொட்டை வகைகளான பாதாம், முந்திரி, பிஸ்தா தவிர்க்கவும். பழ வகையில் பப்பாளி தவிர்க்கவும். காய்களில் உருளைக்கிழங்கு, பீன்ஸ், பதப்படுத்தப்பட்ட உணவுகள் ஆகிவற்றை கண்டிப்பாக தவிர்க்கவும்.
முட்டைக்கோஸ், கேரட், பூசணி, சர்க்கரைப் பூசணி, காளான், பூண்டு, மிளகு, பாலக்கீரை ஆகியவற்றை அதிகளவில் சேர்த்துக் கொள்ளவும். ஆப்பிள், செர்ரி, மாதுளை, திராட்சை மற்றும் தர்பூசணிப் பழங்கள் சேர்த்துக் கொள்ளலாம். பருப்பு வகைகளில் சோயாபீன்ஸ், கிட்னி பீன்ஸ், கருப்பு பீன்ஸ் சேர்த்துக் கொள்ளவும். அசைவ வகையில் கொழுப்பு இல்லாத எலும்பு உள்ள சிக்கன் மற்றும் முட்டை மட்டும் எடுத்துக் கொள்ளலாம்.
தடுக்கும் வழிமுறைகள் :
குழந்தை பிறந்தவுடன் பெண்கள் கண்டிப்பாக ஆறு மாதங்களாவது குழந்தைகளுக்கு தாய்ப்பால் தர வேண்டும்.
மாதவிலக்கு நேரங்களில் ஏற்படும் மார்பக வலியைக் குறைக்க சுடுதண்ணீர் ஒத்தடம் கொடுக்கலாம்.
மார்பக வலியைக் குறைக்க உளுந்தை அரைத்து பற்றுப் போட்டு அதன் மீது வெந்நீர் ஒத்தடம் கொடுக்கலாம்.
வைட்டமின் ஏ சத்துள்ள கீரை வகைகளை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்ளலாம். அகத்திக் கீரை மற்றும் முருங்கைக் கீரையை அடிக்கடி சாப்பிடுவதன் மூலம் புற்றுநோய் வாய்ப்புகளை குறைக்க முடியும்.
இரவு நேரத்தில் பப்பாளிப் பழம் ஒரு துண்டு சாப்பிடுவதன் மூலம் மாதவிலக்கு பிரச்சனைகள் வருவதைத் தடுக்கலாம். ரத்தம் சுத்தம் அடையும். புற்றுநோயையும் தவிர்க்கலாம்.
அதிகாலை வெறும் வயிற்றில் சின்ன வெங்காயத்தை பச்சையாக சாப்பிடுவது நல்லது.
கொதிக்கும் பாலில் பூண்டைப் போட்டு வெந்த பின்னர் அதனை குழைத்து காலையில் வெறும் வயிற்றில் சாப்பிடுவதன் மூலம் ரத்தத்தில் உள்ள கொழுப்பு கரையும், புற்றுநோய்க்கான வாய்ப்பும் குறையும்.






