search icon
என் மலர்tooltip icon

    அழகுக் குறிப்புகள்

    தலைமுடி கொட்டாமல் இருக்க... புது ஐடியா எப்படி?
    X

    தலைமுடி கொட்டாமல் இருக்க... புது ஐடியா எப்படி?

    • தலைமுடி ஒழுங்காக இருக்க அவ்வப்போது சிலர் அதனை சீவி விடுவதும் உண்டு.
    • முடி கொட்டுவதற்கு பல்வேறு காரணிகள் கூறப்படுகின்றன.

    முடி அழகு முக்கால் அழகு என கிராமப்புறங்களில் கூற கேட்டிருப்போம். நம்மில் பலருக்கும் முடி கொட்டுவது, வழுக்கை ஏற்படுவது ஆகியவை தீராத பிரச்சனையாக இருக்கும்.

    இது பலரிடம் மனதளவில் பாதிப்பு கூட ஏற்படுத்தி விடும். இதற்காக, வழுக்கை உள்ளவர்கள் புத்திசாலி என கூறி தங்களை தாங்களே சமரசப்படுத்தி கொள்வதும் உண்டு. இதற்கு தீர்வு காண பல்வேறு சிகிச்சை முறைகளை தேடி போவதும் நடக்கும்.

    ஆனால், முடி கொட்டுவதற்கு பல்வேறு காரணிகள் கூறப்படுகின்றன. போதிய ஊட்டச்சத்து இன்மை, வைட்டமின் குறைவு உள்ளிட்டவை பொதுவான காரணிகளாக உள்ளன. இவற்றை நல்ல சத்துள்ள ஆகாரங்களை உண்டு தீர்வு காணலாம். சிலருக்கு முன்னோரின் மரபணு, சுற்றுச்சூழல் மாசு ஆகியவற்றாலும் பாதிப்பு ஏற்படுவதுண்டு.

    தலைமுடி ஒழுங்காக இருக்க அவ்வப்போது சிலர் அதனை சீவி விடுவதும் உண்டு. ஆனால், அதிக அழுத்தம் கொடுப்பது தேவையில்லை. நாளடைவில், முடியின் வேர்க்கால்களின் பலம் குறைந்து கொட்ட தொடங்கி விடும்.

    நம்மில் பலர் வாசனைக்காகவும், தலைமுடியின் பிசுபிசுப்பு தன்மை போக வேண்டும் என்பதற்காகவும் ஷாம்பூ, கண்டிசனர்கள் ஆகியவற்றை பயன்படுத்தி வருகிறோம். எனினும், இவற்றில் சேர்மபொருட்களாக கலக்கப்படும் ரசாயனங்கள் சிலருக்கு ஒவ்வாமையை கூட ஏற்படுத்தி விடும்.

    இது தெரியாமல், அவற்றை பயன்படுத்துவதும் காலப்போக்கில் முடியின் பலவீனத்திற்கு வழிவகுத்து விடும். சரி இது ஒருபுறம் இருக்கட்டும். முடி கொட்டுவதற்கு நிக் கோயெட்ஜீ என்ற நபர் அவருக்கு தெரிந்த தீர்வு ஒன்றை டிக்-டாக்கில் வெளியிட்டு உள்ளார்.

    அதற்கு முன் அவருக்கு உள்ள பிரச்சனை என்னவெனில், படிக்கும் காலத்தில் சக மாணவர்களுடன் வகுப்புக்கு போகும்போது, தன்னுடன் கூடுதலாக சட்டை ஒன்றை எடுத்து செல்வார்.

    ஏனெனில், முதல் பாடவேளை முடிந்தவுடன், அவரது உடைகள் முழுவதும் முடியால் நிரம்பி இருக்கும் என அவர் கூறுகிறார். அந்த அளவுக்கு அவருக்கு தலைமுடி கொட்டியுள்ளது.

    அவர் ஒவ்வொரு நாளும் ஷாம்பூ, கண்டிசனர் என மாறி, மாறி உபயோகித்து வந்துள்ளார். அவற்றில் உள்ள அனைத்து ரசாயன பொருட்களும் சேர்ந்து முடி உதிர்தலை ஏற்படுத்தி மோசமடைய செய்து உள்ளது என நினைத்துள்ளார்.

    அதனால், ஒரு முடிவுக்கு வந்துள்ளார். இனிமேல் தலைக்கு குளிக்க கூடாது என்பதே அந்த முடிவு. இதற்காக 6 ஆண்டுகளாக ஷாம்பூ, கண்டிசனர்கள் என எதனையும் அவர் பயன்படுத்தவில்லை. தலைமுடி பாதுகாப்பு பொருட்கள் எதனையும் அவர் உபயோகிக்கவில்லை.

    இதுபற்றி நிக் கூறும்போது, ஆச்சரியப்படும் வகையில் என்னுடைய முடி பலம் அடைந்து உள்ளது. நன்றாக தலை முழுவதும் முடி அடர்ந்து வளர்ந்து காணப்படுகிறது என கூறியுள்ளார்.

    இதற்கு பெயர் no poo movement என்றும் இதற்காக #nopoomovement என்ற ஹேஷ்டேக் சமூக வலைதளத்தில் பிரபலப்படுத்தப்பட்டு வருகிறது என்றும் அவர் கூறியுள்ளார்.

    இதனை பின்பற்றும் நபர்களும் பெருகி வருகின்றனர். அவர்கள் தலைமுடி பாதுகாப்பு பொருட்கள் அனைத்தும் போலியானவை என நம்புகின்றனர். சமீப காலங்களாக இந்த டிரெண்டானது பெருகி வருகிறது. ஷாம்பூ பாட்டில்கள் மற்றும் ரசாயன பொருட்களால் சுற்றுச்சூழல் பாதிப்பு எந்தளவுக்கு ஏற்படுகிறது என மக்கள் அறிய தொடங்கி உள்ளனர் என அவர் கூறுகிறார்.

    எனினும், மக்கள் தலைமுடியை அலசாமல் விட்டு விடுவதற்கு வேறு சில காரணங்களும் உள்ளன. நமது பணம் சேமிக்கப்படுகிறது. நம்முடைய தலைமுடி ஆரோக்கியமுடனேயே இருக்கிறது என்ற எண்ணம் ஆகியவையும் காரணங்களாக கூறப்படுகின்றன.

    நிக் அளித்துள்ள விளக்கத்தில், உங்களது தலைமுடியை அலசாமல் விட்டு விட்டால், அது எண்ணெய் வழிந்து பிசுபிசுப்பு ஏற்பட்டு விடும் என நீங்கள் நினைக்கலாம். ஆனால், அது 2 அல்லது 3 வாரங்களுக்கே நீடிக்கும்.

    அதற்கு பின்னர், உங்களுடைய இயற்கை எண்ணெய் வெளியே வர ஆரம்பிக்கும். இதனால், அனைத்து ரசாயனங்களும் வெளியேறி, உங்களுடைய தலைமுடி முற்றிலும் வளம்பெற்று விடும். அதற்கு பின்னர் அதனை அலச வேண்டிய அவசியமும் இல்லை. என்ன இந்த முயற்சியை நீங்களும் செய்து பார்க்க விரும்புகிறீர்களா? என அதில் அவர் கேட்டுள்ளார்.

    Next Story
    ×