search icon
என் மலர்tooltip icon

    அழகுக் குறிப்புகள்

    கூந்தல் பிரச்சனைகளை தீர்க்க நெல்லிக்காயை எப்படி பயன்படுத்தலாம்...
    X

    கூந்தல் பிரச்சனைகளை தீர்க்க நெல்லிக்காயை எப்படி பயன்படுத்தலாம்...

    • நெல்லிக்காய் கூந்தலுக்கு ஊட்டமளிக்கும் பண்புகளை கொண்டுள்ளது.
    • நெல்லிக்காய் கூந்தல் வளர்ச்சியை அதிகரிக்கும்.

    நெல்லிக்காய் உடலுக்கு மிகவும் ஆரோக்கியமானது. அதிலும் சருமம் மற்றும் கூந்தல் ஆரோக்கியமாக இருப்பதற்கும் பெரிதும் உதவியாக உள்ளது. நெல்லிக்காயில் உடல் நன்மைகள் மட்டுமின்றி, அழகு நன்மைகளும் அதிகம் நிறைந்துள்ளது.

    தற்போது நிறைய மக்கள் ஆம்லா/நெல்லிக்காய் எண்ணெய், நெல்லிக்காய் இருக்கும் ஹென்னா போன்றவற்றை அதிகம் பயன்படுத்துகின்றனர். ஏனெனில் நெல்லிக்காய் கூந்தல் வளர்ச்சியை அதிகரிப்பது, கூந்தல் உதிர்தலை தடுப்பது, அடர்த்தியான கூந்தலை வளரச் செய்வது என்ற பலனைத் தருகின்றன.

    நெல்லிக்காய் கூந்தலுக்கு ஊட்டமளிக்கும் பண்புகளையும் கொண்டுள்ளது. ஒரு நெல்லிக்காயில் 80% ஈரப்பதம் உள்ளது இது ஒரு சிறந்த இயற்கை கண்டிஷனராகும். எனவே இதனை தலைக்கு போட்டுக் குளித்தால், தலைக்கு கண்டிஷனர் போட்டது போன்று இருக்கும்.

    நெல்லிக்காய் முடி உதிர்தலை கட்டுப்படுத்தும் மற்றும் இயற்கையான கண்டிஷனராகும். நெல்லிக்காயில் ஆன்ட்டி ஆக்ஸிடண்ட்கள் அதிகம் உள்ளது. இது உச்சந்தலை ஆரோக்கியத்தை பராமரிக்க உதவுகிறது.

    நெல்லிக்காயை தலைக்கு பயன்படுத்தும் போது, அது மயிர்துளைகளை நன்கு ஆரோக்கியமாக வைத்திருப்பதோடு, கூந்தல் வளர்ச்சியையும் அதிகரிக்கும்.

    நெல்லிக்காய் பொடியை, சீகைக்காய் பொடி மற்றும் ஹென்னாவுடன் சேர்த்து கலந்து, தலைக்கு போட்டு குளித்து வந்தால், கூந்தல் அடர்த்தியாகும்.

    தினமும் நெல்லிக்காய் எண்ணெய் கொண்டு, தலைக்கு 45 நிமிடம் மசாஜ் செய்து, பின் தலைக்கு குளித்தால், கூந்தல் உதிர்தலைத் தடுக்கலாம்.

    ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறையால் கூந்தல் வறட்சி, நிறம் மாறுதல் போன்றவை ஏற்படுகிறது. அவ்வாறு முடியின் நிறம் இளமையிலேயே மாறாமல் இருக்க, நெல்லிக்காய் எண்ணெயை தினமும் தடவி கூந்தலை பராமரித்து வர வேண்டும்.

    நெல்லிக்காய் பொடியை தண்ணீரில் கலந்து ஒரு மெல்லிய பேஸ்ட் செய்யலாம். கூந்தலுக்கு ஊட்டச்சத்தை வழங்க முடியின் வேர்கள் மற்றும் உச்சந்தலையில் பேஸ்ட்டை பயன்படுத்துங்கள். பிறகு 15- 20 நிமிடங்கள் கழித்து கூந்தலை அலசி விடுங்கள்.

    பச்சை நெல்லிக்காயை துண்டுகளாக நறுக்கி தண்ணீரில் கொதிக்க வைத்து சுமார் 30 நிமிடங்கள் அப்படியே வைத்திருந்து அந்த தண்ணீரை கொண்டு கூந்தலை அலசுவது கூந்தலுக்கு நன்மை பயக்கும்.

    நெல்லிக்காய் தினமும் சாப்பிடுவது முன் கூட்டிய நரைப்பதை தடுக்கவும், முடி வளர்ச்சியை ஊக்குவிக்கவும் உதவுகிறது. இது உச்சந்தலையின் ஆரோக்கியத்தை பராமரிக்கவும் உதவுகிறது.

    Next Story
    ×