search icon
என் மலர்tooltip icon

    அழகுக் குறிப்புகள்

    முகப்பருவை போக்க உடனடி பலன் தரும் இயற்கை வைத்தியம்
    X

    முகப்பருவை போக்க உடனடி பலன் தரும் இயற்கை வைத்தியம்

    • பரு வந்தால் நம்முடைய முகத்தின் அழகே மறைந்துவிடும்.
    • பெண்களுக்கு இயற்கை முறையில் பருவை போக்க எளிய வழிகள் இருக்கிறது.

    இளமைப் பருவத்தில் ஆண்களுக்கும், பெண்களுக்கும் முகத்தில் பரு வருவது இயற்கை தான். ஆனால், பரு வந்தால் நம்முடைய முகத்தின் அழகே மறைந்துவிடும்.

    இதனை போக்க அதிரடியாக செயற்கை மருந்துகளை வாங்கி பயன்படுத்தும் பெண்களுக்கு இயற்கை முறையில் பருவை போக்க எளிய வழிகள் இருக்கிறது.

    தக்காளி சருமத்தை சுத்தப்படுத்தி அழகாக வைத்துக்கொள்ள உதவும் சிறப்பான மருந்து. தினமும் சிறு சிறு தக்காளி துண்டுகளைக் கொண்டு சிறிது நேரம் மசாஜ் செய்து கழுவினால் முகப்பருக்களும், அதனால் ஏற்பட்ட தழும்புகளில் இருந்தும் விடுபடலாம்.

    கிராம்பும், பருக்களை குணப்படுத்தும் ஒரு மருந்து தான். கிராம்பை நீரில் போட்டு கொதிக்க வைத்து பின்னர் குளிர வைக்க வேண்டும். குளிர வைத்த கிராம்பை அரைத்து பருக்கள் உள்ள இடங்களில் தடவி சிறிது நேரம் கழித்து கழுவிவர பருக்கள் குணமடையும்.

    இதேபோல் வாழைப்பழத்தின் தோலை அரைத்து அதனுடன் குறைந்தளவு தயிர் சேர்த்து முகத்திற்கு தடவி ஊற வைத்து பின்னர் கழுவினால் முகப்பரு மற்றும் கரும்புகளில் இருந்து விடுபடலாம்.

    சிறந்த மருந்தாக பயன்படும் தேனும் பருக்களுக்குரிய மருந்து தான். பருக்கள் உள்ள இடங்களில் தேனை தடவி சிறிது நேரம் ஊற வைத்த பிறகு பால் கொண்டு கழுவி, குளிர்ந்த நீரில் கழுவினால் பருக்களை போக்கலாம்.

    கடலை மாவு, சந்தனப் பொடி, தயிர் மற்றும் எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து முகத்திற்கு தடவி ஊற வைத்து கழுவினால் பருக்கள் நீங்கும்.

    தலைவலிக்கு நாம் செய்யும் பழக்கம் தான் ஆவிபிடிப்பது. இதனை பருக்களை போக்கவும் செய்யலாம். ஆம், நம் சருமத்தில் உள்ள இறந்த செல்கள் மற்றும் அழுக்களை போக்க ஆவிப்பிடிப்பதும் முக்கிய ஒன்று. ஆவிப்பிடித்தால் முகத்துவாரங்கள் திறந்து, அதிலுள்ள அழுக்குகள், இறந்த செல்கள் தளர்ந்துவிடும். இதன் மூலமாக மாசு நிறைந்த இறந்த செல்கள் முழுவதுமாக வெளியேறி பருக்களை குணப்படுத்தலாம்.

    Next Story
    ×