என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
அழகுக் குறிப்புகள்
முட்டையின் வெள்ளைக்கருவும்.. முகப்பொலிவும்..
- சிலருடைய சருமத்தில் கருப்பு திட்டு போன்ற புள்ளிகள் தென்படும்.
- முட்டையின் வெள்ளைக்கரு சரும பொலிவை தக்க வைத்துக்கொள்ள துணை புரியும்.
முட்டையின் வெள்ளை கரு, சரும ஆரோக்கியத்தை பாதுகாக்கும் தன்மை கொண்டது. அதில் புரதம் மற்றும் அல்புமின் உள்ளிட்ட வைட்டமின்கள், தாதுக்கள் நிறைந்துள்ளன. அவை சரும சுருக்கம், எண்ணெய் பிசுபிசுப்புதன்மை, முகப்பரு போன்ற பிரச்சினைகளுக்கு நிவாரணம் அளிக்கும். சரும பொலிவை தக்க வைத்துக்கொள்ளவும் துணை புரியும்.
* சருமம் எண்ணெய் பிசுபிசுப்பு தன்மை கொண்டிருந்தால் முகப்பரு, கரும்புள்ளி பிரச்சினைகள் எட்டிப்பார்க்கும். முட்டையின் வெள்ளைக்கருவிற்கு எண்ணெய் பிசுபிசுப்பை நீக்கும் ஆற்றல் இருக்கிறது. முதலில் வெது வெதுப்பான நீரில் முகத்தை நன்கு கழுவ வேண்டும். அதன் பிறகு முட்டையின் வெள்ளைக்கருவை தடவி மசாஜ் செய்ய வேண்டும். நன்கு உலந்த பிறகு குளிர்ந்த நீரில் முகத்தை கழுவ வேண்டும். பின்பு மென்மையான துண்டு கொண்டு முகத்தை துடைக்க வேண்டும். இவ்வாறு அடிக்கடி செய்துவந்தால் முகத்தில் எண்ணெய் பிசுபிசுப்பு தன்மை நீங்கிவிடும்.
* சிலருடைய முகத்தில் தேவையற்ற ரோமங்கள் முளைத்து சரும அழகை குலைக்கும். அதனை அவ்வப்போது அப்புறப்படுத்துவது சிரமமாக இருக்கும். அத்தகைய சிரமத்திற்கு ஆளாகுபவர்கள் முட்டையின் வெள்ளைக்கருவை பயன்படுத்தலாம். முட்டையின் வெள்ளைக்கருவை நெற்றி, கன்னம், உதட்டின் மேல் பகுதி என முகம் முழுவதும் நன்றாக 'பிரஷ்' மூலம் தடவ வேண்டும். முட்டைக்கரு நன்கு உலர்ந்ததும் முகத்தை கழுவ வேண்டும். தொடர்ந்து செய்துவந்தால் தேவையற்ற ரோமங்கள் முளைக்காது.
* சிலருடைய சருமத்தில் கருப்பு திட்டு போன்ற புள்ளிகள் தென்படும். அதனால் சரும அழகு பாதிப்புக்குள்ளாகும். முட்டையின் வெள்ளைக்கருவுடன் எலுமிச்சை சாறு கலந்து முகத்தில் தடவ வேண்டும். பின்னர் கால் மணி நேரம் கழித்து வெதுவெதுப்பான நீரில் முகத்தை கழுவ வேண்டும். வாரம் இருமுறை இவ்வாறு செய்துவந்தால் அந்த பாதிப்பு நீங்கி விடும்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்