search icon
என் மலர்tooltip icon

    அழகுக் குறிப்புகள்

    அக்குள் கருமை சங்கடத்தை உண்டாக்குகிறதா? எளிதில் அகற்றும் இயற்கை வழிமுறைகள்...
    X

    அக்குள் கருமை சங்கடத்தை உண்டாக்குகிறதா? எளிதில் அகற்றும் இயற்கை வழிமுறைகள்...

    • அக்குளை நன்கு சுத்தமாகவும், அழகாகவும் வைத்துக் கொள்ள வேண்டியுள்ளது.
    • வீட்டில் இருக்கும் சில இயற்கை பொருட்களை பயன்படுத்தியே நாம் அக்குள் கருமையை நீக்க முடியும்.

    பெண்கள் பெரும்பாலும் வெளிப்புற அழகிற்கு கவனம் செலுத்தும் அளவிற்கு புறஅழகில் கவனம் செல்லுவதில்லை. குறிப்பாக அக்குள்களில் படிந்திருக்கும் கருமையை நீக்குவது அவசியம். அக்குளை நன்கு சுத்தமாகவும், அழகாகவும் வைத்துக் கொள்ள வேண்டியுள்ளது. இல்லை என்றால் மிகவும் கருப்பாக மாறிவிடும். வீட்டில் இருக்கும் சில இயற்கை பொருட்களை பயன்படுத்தியே நாம் அக்குள் கருமையை நீக்க முடியும். அவை என்னென்ன என்பது குறித்து இங்கு தெரிந்து கொள்வோம்.

    பேக்கிங் சோடா : உங்கள் கைகளின் அக்குள்களில் உள்ள கருமையை நீக்க பேக்கிங் சோடா உதவும். இதற்கு நீங்கள் பேக்கிங் சோடாவுடன், தண்ணீர் சேர்த்து பேஸ்ட் செய்து அதனை அக்குள்களில் தடவி உலர விட்டு, ஸ்க்ரப் செய்து கழுவுங்கள். இதனை வாரம் இரண்டு முறை செய்து வந்தால் விரைவில் நல்ல பலன் கிடைக்கும்.

    எலுமிச்சை சாறு : எலுமிச்சையில் இயற்கையாகவே ப்ளீச்சிங் தன்மை அதிகம் உள்ளது. ஆனால் இதனை அளவுக்கு அதிகமாக பயன்படுத்தினால், அது சருமத்தில் அரிப்பு மற்றும் எரிச்சலை ஏற்படுத்தும். எனவே வாரம் 4 நாட்கள் அரை எலுமிச்சை பழத்தை எடுத்து அதனை கடலை மாவில் தொட்டு நன்கு ஸ்க்ரப் செய்யவும். இதனை தொடர்ந்து செய்து வந்தால் கருமை மறைந்துவிடும்.

    உருளைக்கிழங்கு சாறு : உருளைக்கிழங்கிலும் ப்ளீச்சிங் தன்மை உள்ளது. உருளைக்கிழங்கை வெட்டி சாறு எடுத்து அதனை அக்குள் கருமை பகுதியில் தடவி 5-10 நிமிடம் மசாஜ் செய்து, பின் வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும். தினமும் இரண்டு முறை செய்து வந்தால், கருமையானது விரைவில் நீங்குவதை கண்கூட காண்பீர்கள்.

    கற்றாழை : கற்றாலையின் ஜெல்லை எடுத்து அக்குளில் தடவி மசாஜ் செய்யுங்கள். தினமும் 15 நிமிடங்கள் இதனை செய்து வந்தால் கருமை மறையும்.

    தயிர் : தயிர் அக்குள் கருமையை நீக்க உதவும் முதன்மையான பொருளாகும். தயிருடன் மஞ்சள் தூள், எலுமிச்சை சாறு, சிறிது கடலை மாவு சேர்த்து நன்கு பேஸ்ட் செய்து அக்குளில் தடவி 20 நிமிடம் ஊற வைத்து கழுவ வேண்டும். இப்படி தினமும் செய்து வந்தால், விரைவில் நல்ல பலன் கிடைக்கும்.

    Next Story
    ×