என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
அழகுக் குறிப்புகள்
தயிர் பேஸ் பேக் முகத்தில் ஏற்படுத்தும் மாற்றங்கள்...
- முகம் மிகவும் களைப்பாக தெரிந்தால் தயிரை முகத்தில் அப்ளை செய்யலாம்.
- சருமத்தில் ஏற்படும் சுருக்கங்களைக் குறைக்கும்.
தயிர் ஆரோக்கியத்திற்கு மட்டுமல்ல வெளிப்புற தோலை பாதுகாக்கவும் துணை புரிகிறது. சிலருக்கு தயிரின் சுவை பிடிக்காமல் தயிர் சாப்பிடுவதையே தவிர்த்து விடுவார்கள்.
நியூட்ரிசியன்கள் நிறைந்த தயிரை நம் தோலில் அப்ளை செய்வதால் என்ன நடக்கும் என்பதை தெரிந்து கொள்ளலாம். தயிர் முகத்தில் கரும்புள்ளிகள், பருக்கள் வருவதை தடுக்கும். சருமத்தின் மேல் பகுதியில் உள்ள எபிடர்மிஸில் கால்சியம் சத்துக்களே நிறைய இருக்கும். அங்கு கால்சியம் சத்து நிறைந்த தயிரை தடவுவதால் ஆரோக்கியமான சருமத்தை பெற முடியும். அதே நேரத்தில் சரும வறட்சியிலிருந்து நாம் பாதுகாத்துக் கொள்ளலாம்.
தயிரில் உள்ள ரிபோஃப்லாவின்(riboflavin)எனப்படும் விட்டமின் பி2 சருமம் எப்போதும் ஈரப்பசையுடன் இருக்கச்செய்கிறது. அதோடு, நம் சருமத்தின் அடிப்படையான செல் வளர்ச்சிக்கும் முக்கிய பங்காற்றுகிறது.
சருமத்திற்கான அழகு சாதன பொருட்களில் இடம் பெறும் முக்கியப் பொருள் லேட்டிக் ஆசிட். இது மிகச்சிறந்த மாய்ஸ்சரைசராக செயல்படும். அதோடு சருமத்தில் ஏற்படும் சுருக்கங்களைக் குறைக்கும். முகம் மிகவும் களைப்பாக தெரிந்தால் தயிரை முகத்தில் அப்ளை செய்யலாம். இதிலிருக்கும் லாட்டிக் ஆசிட் சருமத்தில் உள்ள என்ஜைம்களை புத்துணர்சி பெறச் செய்யும்.
இதனால் பிரகாசமான சருமத்தை பெற முடியும். தயிரில் உள்ள ஹைட்ராக்ஸில் ஆசிட் நம் சருமத்தில் உள்ள டெட் ஸ்கின் செல்களை அப்புறப்படுத்த உதவுவதுடன் செல்களின் வளர்ச்சிக்கும் உதவுகிறது. தயிரை பேஸ் மாஸ்க்காக தினமும் அப்ளை செய்து வந்தால், அது முகத்தில் சேரும் பாக்டீரியாக்களை அழித்திடும்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்