search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    சரும சுருக்கத்திற்கு மாதுளையை எப்படி பயன்டுத்தலாம்
    X
    சரும சுருக்கத்திற்கு மாதுளையை எப்படி பயன்டுத்தலாம்

    சரும சுருக்கத்திற்கு மாதுளையை எப்படி பயன்டுத்தலாம்

    சருமத்தில் ஏற்படும் அனைத்து விதமான பிரச்சனைகளையும், சரும சுருக்கத்தையும் போக்கும் தன்மை கொண்டது, மாதுளை. மாதுளையை எப்படி பயன்படுத்தி சரும பிரச்சனைகளை தீர்க்கலாம் என்று பார்க்கலாம்.
    மாதுளம்பழத்தின் தோல் பகுதியை நன்றாகக் காயவைத்து பவுடராக்க வேண்டும். இதனுடன் பயத்தம்பருப்பு பவுடரை சம அளவு கலந்து வைத்துக் கொள்ளவேண்டும். தினமும் குளித்த பிறகு, உடலில் இந்த பவுடரை பூசி கழுவ வேண்டும். துர்நாற்றம் நீங்குவதுடன் உடலும் குளிர்ச்சியாகி விடும்.
     
    ஒரு டீஸ்பூன் மாதுளை ஜூஸ், அரை டீஸ்பூன் சந்தனம் இரண்டையும் கலந்து முகத்தில் பூசி, 10 நிமிடம் கழித்து கழுவினால் முகத்தில் பளபளப்பு கூடும்.
     
    சருமத்தின் சுருக்கத்தைப் போக்குவதிலும் மாதுளைக்கு முக்கிய பங்குண்டு. மாதுளம்பழ விழுதையும் வெண்ணெய்யையும் தலா ஒரு டீஸ்பூன் எடுத்து நன்றாகக் குழைக்க வேண்டும். தோலில் தொய்வு ஏற்பட்டிருக்கும் இடத்தில் இந்த பேஸ்ட்டைத் தடவி, பத்து நிமிடம் கழித்து கழுவ வேண்டும். தினமும் இப்படிச் செய்தால்  தோல் சுருக்கம் நீங்கும்.
     
    பருக்களை மறைய வைப்பதில் மாதுளைக்கு நிகர் மாதுளையேதான். மாதுளம்பழத்தை உதிர்த்து ப்ரீசரில் வைத்துவிடுங்கள். பத்து நாட்கள் கழித்து அதை எடுத்தால் நன்றாக விறைத்துப்போய் உடைக்க சுலபமாக இருக்கும். இதை பவுடராக்க வேண்டும்.
     
    ஒரு டீஸ்பூன் இந்த பவுடருடன் ஒரு டீஸ்பூன் பயத்தம் பருப்பு மாவு, அரை டீஸ்பூன் எலுமிச்சைச் சாறு சேர்த்து கலக்க வேண்டும். குளிப்பதற்கு முன் இதை முகத்தில் பூசி, காய்ந்த பிறகு கழுவ வேண்டும். வாரம் இரண்டு அல்லது மூன்று முறை இப்படி செய்து வந்தால், பருக்கள் இருந்த இடம் தெரியாமல் மறைந்து விடும்.
    Next Story
    ×