search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    தித்திப்பான ரசகுல்லா செய்வது எப்படி
    X

    தித்திப்பான ரசகுல்லா செய்வது எப்படி

    குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தமானது ரசகுல்லா. இதை வீட்டிலேயே எளிய முறையில் செய்யலாம்.
    தேவையான பொருட்கள் :

    பால் - 1/2 லிட்டர்
    எலுமிச்சை சாறு - 1 1/2 டேபிள் ஸ்பூன்
    தண்ணீர் - 1 மற்றும் 3/4 கப்
    ஐஸ் கட்டிகள் - 4-5
    சர்க்கரை - 3/4 கப்
    ஏலக்காய் பொடி - 1
    சிட்டிகை பிஸ்தா - 4

    செய்முறை :

    * முதலில் பாலை ஒரு பாத்திரத்தில் ஊற்றி கொதிக்க விட வேண்டும். பாலானது கொதிக்க ஆரம்பித்ததும், அதில் எலுமிச்சை சாறு சேர்த்து பால் நன்கு திரியும் வரை தொடர்ந்து கிளறி விட வேண்டும்.

    * பாலில் இருந்து தண்ணீர் முற்றிலும் பிரிந்ததும், அடுப்பை அணைத்து, பின் பாலில் ஐஸ் கட்டிகளை சேர்த்து, ஐஸ் கட்டிகளை உருக வைக்கவும்.

    * ஐஸ் கட்டிகள் முற்றிலும் உருகியதும், அதனை மெல்லிய துணியில் ஊற்றி அதில் உள்ள நீரை முற்றிலும் வடிகட்டி, நீரில் துணியில் உள்ள திரிந்த பாலை எலுமிச்சை வாசனை முற்றிலும் போகும் வரை நன்கு கழுவ வேண்டும்.

    * பின் அதில் உள்ள நீர் முற்றிலும் வடியும் வரை தனியாக கட்டி தொங்க விட வேண்டும். பின்னர் துணியில் உள்ள அந்த திரிந்த பாலை ஒரு தட்டில் போட்டு, அதனை மென்மையாக பிசைய வேண்டும்.

    * பிசைந்த மாவை சிறு உருண்டைகளாக பிடித்து வைக்க வேண்டும்.

    * அடிகனமான பாத்திரத்தை அடுப்பில் வைத்து அதில் சர்க்கரை, சிறிது தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும். சர்க்கரை நீரானது ஓரளவு கெட்டியான பின் அதில் உருட்டி வைத்துள்ளதை உருண்டைகளை போட்டு, குறைவான தீயில் 5 நிமிடம் வேக வைக்கவும்.

    * பின் மிதமான தீயில் 10 நிமிடம் மூடி வைத்து வேக வைக்க வேண்டும். முக்கியமாக இந்நேரத்தில் 3 நிமிடத்திற்கு ஒருமுறை மூடியை திறந்து பார்க்க வேண்டும்

    * இறுதியில் அதனை இறக்கி, குளிர வைத்து, அதன் மேல் பிஸ்தாவை தூவினால், ரசகுல்லா ரெடி!!!

    - இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    Next Story
    ×