என் மலர்tooltip icon

    பெண்கள் உலகம்

    நவராத்திரி ஸ்பெஷல் நெய் அப்பம்
    X

    நவராத்திரி ஸ்பெஷல் நெய் அப்பம்

    நவராத்திரி கொலு பார்க்க வரும் உறவினர்களுக்கும் நண்பர்களுக்கும் வித்தியாசமான நெய் அப்பம் செய்து கொடுத்து அசத்தலாம்.
    தேவையான பொருட்கள் :

    அரிசி - 2 கப்
    வெல்லம் - 2 கப்
    தேங்காய்த் துருவல் - அரை கப்
    வாழைப்பழம் - 2
    ஏலக்காய் - 4
    சோடா உப்பு - ஒரு சிட்டிகை
    நெய் - அரை கப்

    செய்முறை :

    * அரிசியைச் சுத்தம் செய்து ஊறவைத்து, கெட்டியாக அரைத்துக்கொள்ளுங்கள்.

    * வெல்லத்தைக் கரைத்து, கெட்டிப் பாகாக உருக்கி, அதை அரிசிமாவில் விட்டுக் கலந்துகொள்ளுங்கள்.

    * இந்தக் கலவையுடன் தேங்காய்த் துருவல், ஏலக்காய்ப் பொடி, சோடா உப்பு, வாழைப்பழத் துண்டுகளைச் சேர்த்து நன்றாகக் கலந்துகொள்ளுங்கள்.

    * பணியாரச் சட்டியை அடுப்பில் வைத்து, குழிகளில் ஒரு டீஸ்பூன் நெய் விட்டு உருகியதும், பாதி அளவுக்கு மாவு விடுங்கள். ஒருபுறம் வெந்ததும் திருப்பிவிட்டு, பொன்னிறமானதும் எடுத்துப் பரிமாறுங்கள்.

    * நவராத்திரியில் அம்மனுக்கு இந்த நெய் அப்பத்தைப் படையலிடுவார்கள்.

    - இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    Next Story
    ×