என் மலர்
ஆரோக்கியம்

நவராத்திரி ஸ்பெஷல் தேங்காய் பாயாசம்
நவராத்திரிக்கு படைக்கும் நைவேத்தியங்களை பற்றி பார்க்கலாம். இன்று தேங்காய் பாயசம் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
பச்சரிசி - ஒரு கப்
வெல்லம் - முக்கால் கப்
ஏலக்காய் - 2
நெய், முந்திரி, திராட்சை - சிறிதளவு
தேங்காய்த் துருவல் - ஒரு கப்
செய்முறை :
* கடாயை அடுப்பில் வைத்து நெய் ஊற்றி சூடானதும் முந்திரி, திராட்சையை போட்டு வறுத்து வைக்கவும்.
* வெல்லத்தை துருவி வைக்கவும்.
* பச்சரிசியை 2 மணி நேரம் ஊறவையுங்கள்.
* ஊறவைத்த பச்சரியுடன் தேங்காய்த் துருவல், ஏலக்காய் சேர்த்து மிக்சியில் போட்டு நன்றாக அரைத்துக் கொள்ளவும்.
* ஒரு பாத்திரத்தில் சிறிதளவு தண்ணீர் ஊற்றிக் கொதிக்கவிடுங்கள். தண்ணீர் நன்றாகக் கொதிக்கும்போது அரைத்துவைத்திருக்கும் பச்சரிசி தேங்காய் கலவையை அதில் சேர்த்துக் கைவிடாமல் கட்டியில்லாமல் கிளறிக் கொண்டே இருக்கவும்.
* நன்றாக வெந்ததும் வறுத்த வைத்துள்ள முந்திரி, திராட்சையை சேருங்கள்.
* அடுத்து அதில் துருவிய வெல்லம் சேர்த்துக் கரைந்ததும் இறக்கிவையுங்கள்.
* விரும்பினால் ஆறியதும் சிறிதளவு பால் சேர்க்கலாம்.
* இனிப்பான தேங்காய் பாயாசம் ரெடி.
- இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
Next Story