என் மலர்
ஆரோக்கியம்

மாலைநேர ஸ்நாக்ஸ் மட்டன் போண்டா
மாலை நேரத்தில் குழந்தைகளுக்கு சுவையான, வித்தியாசமான மட்டன் போண்டாவை செய்து கொடுத்தால் விரும்பி சாப்பிடுவார்கள்.
தேவையான பொருட்கள் :
உளுந்துமாவு - 100 கிராம்
அரிசி மாவு - 2 மேஜைக்கரண்டி
பச்சை மிளகாய் - 4
மட்டன் கொத்துக்கறி - 300 கிராம்
எண்ணெய் - தேவைக்கேற்ப
வெங்காயம் - 2
இஞ்சி விழுது - 1 தேக்கரண்டி
கொத்தமல்லி - 1 மேஜைக்கரண்டி
உப்பு - தேவைக்கேற்ப
செய்முறை :
* உளுந்தை 1 மணி நேரம் ஊற வைத்து மிருதுவான மாவாக அரைத்து கொள்ளவும்.
* மட்டன் கொத்துக்கறியை நன்றாக கழுவி சிறிது உப்பு சேர்த்து வேகவைத்து மிக்சியில் அரைத்து கொள்ள வேண்டும்.
* கொத்தமல்லி, ப.மிளகாய், வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
* கெட்டியாக அரைத்த உளுந்து மாவுடன் அரிசி மாவு, அரைத்த கறி, இஞ்சி விழுது, பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய், வெங்காயம், கொத்துமல்லி, உப்பு எல்லாவற்றையும் ஒன்றாக கலந்து பிசையவும்.
* அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் மிதமான தீயில் வைத்து பிசைந்த மட்டன் கலவையை உருண்டையாக எடுத்து எண்ணெயில் பொரித்து எடுக்கவும். கிளறி விட்டு பொன்னிறமாக பொரிக்கவும்.
* ருசியான மட்டன் போண்டாவை தேனீருடனும் உணவுடனும் ரசித்து உண்ணலாம்.
* கொத்துக்கறிக்கு பதிலாக எலும்பில்லாத மட்டனை வாங்கி அதை வேகவைத்து மிக்சியில் அரைத்தும் செய்யலாம்.
- இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
Next Story