என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
லைஃப்ஸ்டைல்
X
விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல்: கடலைபருப்பு பூர்ண கொழுக்கட்டை
Byமாலை மலர்3 Sep 2016 7:32 AM GMT (Updated: 3 Sep 2016 7:32 AM GMT)
கொழுக்கட்டையில் பல வெரைட்டிகள் உள்ளன. விநாயகர் சதுர்த்தியன்று விநாயகருக்கு படைக்க பல வகையான கொழுக்கட்டைகளை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
வெல்லம் - கால் கிலோ
பச்சரிசி மாவு - கால் கிலோ
கடலைபருப்பு - ஒரு டம்ளர்
உப்பு - தேவையான அளவு
தேங்காய் துருவல் - மூன்று தேக்கரண்டி
செய்முறை :
* வாணலியில் வெல்லத்தை போட்டு சிறிது தண்ணீர் சேர்த்து பாகு காய்ச்சவும்.
* கடலை பருப்பை 30 நிமிடம் ஊற விட்டு ஒன்றிரண்டாக மிக்ஸியில் பொடித்துக் கொள்ளவும். அதை பாகுடன் சேர்த்து ஒரு சிட்டிகை உப்பு சேர்த்து கிளறவும்.
* பாகுடன் நன்றாக மிக்ஸ் ஆனதும் அதனுடன் தேங்காய் துருவலை சேர்த்து கிளறவும். தண்ணீர் இல்லாமல் வற்றி வாணலியில் ஒட்டாமல் வரும். அப்போது தனியே எடுத்து ஆற வைக்கவும்.
* பச்சரிசி மாவுடன் கொஞ்சம் உப்பு சேர்த்து கொதித்த தண்ணீரை சிறிது சிறிதாக சேர்த்து கரண்டியின் காம்பால் கிளறி பின் பொறுக்கும் சூட்டில் கையால் பிசைந்து வைக்கவும்.
* மாவை கையில் வைத்து விருப்பத்திற்கு ஏற்ப தட்டி அதன் உள்ளே பூரணம் சேர்த்து மூடி வைக்கவும். முழு மாவிலும் இப்படி செய்து வைக்கவும்.
* அதனை இட்லி பாத்திரத்தில் 10 நிமிடம் வேக வைத்து எடுக்கவும்.
* சூடான சுவையான கடலைபருப்பு பூர்ண கொழுக்கட்டை ரெடி.
- இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
வெல்லம் - கால் கிலோ
பச்சரிசி மாவு - கால் கிலோ
கடலைபருப்பு - ஒரு டம்ளர்
உப்பு - தேவையான அளவு
தேங்காய் துருவல் - மூன்று தேக்கரண்டி
செய்முறை :
* வாணலியில் வெல்லத்தை போட்டு சிறிது தண்ணீர் சேர்த்து பாகு காய்ச்சவும்.
* கடலை பருப்பை 30 நிமிடம் ஊற விட்டு ஒன்றிரண்டாக மிக்ஸியில் பொடித்துக் கொள்ளவும். அதை பாகுடன் சேர்த்து ஒரு சிட்டிகை உப்பு சேர்த்து கிளறவும்.
* பாகுடன் நன்றாக மிக்ஸ் ஆனதும் அதனுடன் தேங்காய் துருவலை சேர்த்து கிளறவும். தண்ணீர் இல்லாமல் வற்றி வாணலியில் ஒட்டாமல் வரும். அப்போது தனியே எடுத்து ஆற வைக்கவும்.
* பச்சரிசி மாவுடன் கொஞ்சம் உப்பு சேர்த்து கொதித்த தண்ணீரை சிறிது சிறிதாக சேர்த்து கரண்டியின் காம்பால் கிளறி பின் பொறுக்கும் சூட்டில் கையால் பிசைந்து வைக்கவும்.
* மாவை கையில் வைத்து விருப்பத்திற்கு ஏற்ப தட்டி அதன் உள்ளே பூரணம் சேர்த்து மூடி வைக்கவும். முழு மாவிலும் இப்படி செய்து வைக்கவும்.
* அதனை இட்லி பாத்திரத்தில் 10 நிமிடம் வேக வைத்து எடுக்கவும்.
* சூடான சுவையான கடலைபருப்பு பூர்ண கொழுக்கட்டை ரெடி.
- இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X