என் மலர்tooltip icon

    பெண்கள் உலகம்

    எளிமையான முறையில் அப்பளக் குழம்பு செய்து எப்படி
    X

    எளிமையான முறையில் அப்பளக் குழம்பு செய்து எப்படி

    குழம்பு செய்ய காய்கறிகள் இல்லாத போது இந்த திடீர் அப்பள குழம்பை செய்து அசத்தலாம். இதை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    புளி - நெல்லிக்காய் அளவு,
    அப்பளம் - 5,
    கடுகு - ஒரு டீஸ்பூன்,
    வெந்தயம் - ஒரு டீஸ்பூன்,
    கடலைப்பருப்பு - ஒரு டீஸ்பூன்,
    காய்ந்த மிளகாய் - ஒன்று,
    சாம்பார் பொடி - 2 டீஸ்பூன்,
    மிளகாய் தூள் - அரை ஸ்பூன்
    எண்ணெய் - 4 டீஸ்பூன்,
    உப்பு - தேவையான அளவு
    சின்ன வெங்காயம் - 10
    தக்காளி - 1

    செய்முறை :

    * தக்காளி, வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    * அப்பளத்தை துண்டுகளாக வெட்டி வைக்கவும்.

    * புளியை நன்றாக கரைத்துகொள்ளவும்.

    * ஒரு கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் அதில் வெங்காயத்தை போட்டு நன்றாக வதங்கிய பின்னர் தக்காளியை போட்டு வதக்கவும்.

    * தக்காளி நன்றாக வதங்கிய பின்னர் சாம்பார் பொடி, மிளகாய் தூள் சேர்த்து வதக்கிய பின் புளி கரைசலை ஊற்றி நன்றாக கொதிக்க விடவும்.



    * நன்றாக கொதிக்கும் போது உப்பு சேர்க்கவும்.

    * மற்றொரு கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் வெந்தயம், காய்ந்த மிளகாய், கடலைப்பருப்பு தாளித்த பின் வெட்டி வைத்துள்ள அப்பளத்தை போட்டு சிறிது வதக்கி கொதித்து கொண்டிருக்கும் குழம்பில் சேர்த்து 5 நிமிடம் அடுப்பை மிதமான தீயில் வைத்து இறக்கவும்

    * சுவையான அப்பளக் குழம்பு ரெடி.

    * குழம்பு வைக்க காய்கறிகள் இல்லாத நேரத்தில் இந்த அப்பளக் குழம்பு பெரிதும் உதவும். செய்வதும் சுலபமானது.

    - இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    Next Story
    ×