என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
லைஃப்ஸ்டைல்
X
மாலை நேர ஸ்நாக்ஸ் பன்னீர் உருளைக்கிழங்கு பால்ஸ்
Byமாலை மலர்24 Jun 2016 8:45 AM GMT (Updated: 24 Jun 2016 8:45 AM GMT)
விடுமுறை நாட்களில் குழந்தைகளுக்கு மாலையில் வித்தியாசமாக ஏதேனும் ஸ்நாக்ஸ் செய்து கொடுக்க நினைத்தால், பன்னீர் பிரட் பால்ஸ் செய்து கொடுக்கலாம்.
தேவையான பொருட்கள்:
பன்னீர் - 1 கப்
பிரட் - 3 துண்டுகள்
உருளைக்கிழங்கு - 1/2
வெங்காயம் - 1
கொத்தமல்லி - சிறிதளவு
தக்காளி சாஸ் - 1 டேபிள் ஸ்பூன்
ரவை - 1/2 டேபிள் ஸ்பூன்
மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்
மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை :
* பன்னீரை துருவி கொள்ளவும்.
* வெங்காயம், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
* உருளைக்கிழங்கை வேக வைத்து, தோலுரித்து பன்னீருடன் சேர்த்து, தேவையான அளவு உப்பு தூவி, நன்கு பிசைந்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு பிரட் துண்டுகளின் முனைகளை நீக்கிவிட்டு, அதனை நீரில் ஒருமுறை நனைத்து தண்ணீரை நன்றாக பிழிந்து விட்டு, பன்னீருடன் சேர்த்து பிசையவும்.
* அடுத்து அதில் வெங்காயம், கொத்தமல்லி, மஞ்சள் தூள், மிளகாய் தூள், ரவை, தக்காளி சாஸ் அனைத்து பொருட்களையும் ஒன்றாக சேர்த்து நன்கு மென்மையாகும் வரை பிசைந்து உருண்டைகளாக பிடித்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
* இறுதியில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், உருட்டி வைத்துள்ள உருண்டைகளைப் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுத்து பரிமாறவும்.
* சுவையான பன்னீர் பிரட் பால்ஸ் ரெடி!!!
- இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
பன்னீர் - 1 கப்
பிரட் - 3 துண்டுகள்
உருளைக்கிழங்கு - 1/2
வெங்காயம் - 1
கொத்தமல்லி - சிறிதளவு
தக்காளி சாஸ் - 1 டேபிள் ஸ்பூன்
ரவை - 1/2 டேபிள் ஸ்பூன்
மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்
மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை :
* பன்னீரை துருவி கொள்ளவும்.
* வெங்காயம், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
* உருளைக்கிழங்கை வேக வைத்து, தோலுரித்து பன்னீருடன் சேர்த்து, தேவையான அளவு உப்பு தூவி, நன்கு பிசைந்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு பிரட் துண்டுகளின் முனைகளை நீக்கிவிட்டு, அதனை நீரில் ஒருமுறை நனைத்து தண்ணீரை நன்றாக பிழிந்து விட்டு, பன்னீருடன் சேர்த்து பிசையவும்.
* அடுத்து அதில் வெங்காயம், கொத்தமல்லி, மஞ்சள் தூள், மிளகாய் தூள், ரவை, தக்காளி சாஸ் அனைத்து பொருட்களையும் ஒன்றாக சேர்த்து நன்கு மென்மையாகும் வரை பிசைந்து உருண்டைகளாக பிடித்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
* இறுதியில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், உருட்டி வைத்துள்ள உருண்டைகளைப் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுத்து பரிமாறவும்.
* சுவையான பன்னீர் பிரட் பால்ஸ் ரெடி!!!
- இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X