என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
லைஃப்ஸ்டைல்
X
மொறுமொறுப்பான உருளைக்கிழங்கு வடை
Byமாலை மலர்24 Jun 2016 4:08 AM GMT (Updated: 24 Jun 2016 4:08 AM GMT)
அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடிய மொறுமொறுப்பான உருளைக்கிழங்கு வடை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
உருளைக்கிழங்கு - 4 (வேக வைத்து தோலுரித்தது)
கடலை மாவு - 1 கப்
அரிசி மாவு - அரை கப்
பச்சை மிளகாய் - 5
இஞ்சி - 1 துண்டு
பெருங்காயத் தூள் - 1 சிட்டிகை
கொத்தமல்லி - சிறிது
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - பொரிப்பதற்கு தேவையான அளவு
செய்முறை :
* உருளைக்கிழங்கை வேக வைத்து தோலை உரித்து கட்டியில்லாதவாறு மசித்துக் கொள்ள வேண்டும்.
* பச்சைமிளகாய், இஞ்சி, கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
* ஒரு பாத்திரத்தில் மசித்த உருளைக்கிழங்கை போட்டு கடலை மாவு, அரிசி மாவு மற்றும் உப்பு சேர்த்து நன்றாக பிசைந்து கொள்ள வேண்டும்.
* ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 2 டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், பச்சை மிளகாய், இஞ்சி, பெருங்காயத் தூள் சேர்த்து வதக்கி இறக்கி, உருளைக்கிழங்குடன் சேர்த்து, கொத்தமல்லியை போட்டு, நன்கு பிசைய வேண்டும். மாவு தளர்வாக இருந்தால் சிறிது அரிசி மாவு, கடலை மாவு சேர்த்து கொள்ளவும்.
* ஒரு அகன்ற வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், பிசைந்து வைத்துள்ள மாவை வடைகளாக தட்டிப் போட்டு, பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்.
* மொறுமொறுப்பான உருளைக்கிழங்கு வடை ரெடி!!!
- இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
உருளைக்கிழங்கு - 4 (வேக வைத்து தோலுரித்தது)
கடலை மாவு - 1 கப்
அரிசி மாவு - அரை கப்
பச்சை மிளகாய் - 5
இஞ்சி - 1 துண்டு
பெருங்காயத் தூள் - 1 சிட்டிகை
கொத்தமல்லி - சிறிது
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - பொரிப்பதற்கு தேவையான அளவு
செய்முறை :
* உருளைக்கிழங்கை வேக வைத்து தோலை உரித்து கட்டியில்லாதவாறு மசித்துக் கொள்ள வேண்டும்.
* பச்சைமிளகாய், இஞ்சி, கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
* ஒரு பாத்திரத்தில் மசித்த உருளைக்கிழங்கை போட்டு கடலை மாவு, அரிசி மாவு மற்றும் உப்பு சேர்த்து நன்றாக பிசைந்து கொள்ள வேண்டும்.
* ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 2 டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், பச்சை மிளகாய், இஞ்சி, பெருங்காயத் தூள் சேர்த்து வதக்கி இறக்கி, உருளைக்கிழங்குடன் சேர்த்து, கொத்தமல்லியை போட்டு, நன்கு பிசைய வேண்டும். மாவு தளர்வாக இருந்தால் சிறிது அரிசி மாவு, கடலை மாவு சேர்த்து கொள்ளவும்.
* ஒரு அகன்ற வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், பிசைந்து வைத்துள்ள மாவை வடைகளாக தட்டிப் போட்டு, பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்.
* மொறுமொறுப்பான உருளைக்கிழங்கு வடை ரெடி!!!
- இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X