search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    தேங்காய் சேர்க்காத செட்டிநாடு மீன் குழம்பு
    X

    தேங்காய் சேர்க்காத செட்டிநாடு மீன் குழம்பு

    டயட்டில் இருப்பவர்கள் தேங்காய் சேர்க்காமல் மீன் குழம்பு செய்து சாப்பிடலாம். இப்போது தேங்காய் சேர்க்காமல் மீன் குழம்பு எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    வஞ்சிர‌ மீன் - 250 கிராம்
    வெந்தயம் - 1 ஸ்பூன்
    பச்சை மிளகாய் - 2
    சின்னவெங்காயம் - 100  கிராம்
    தக்காளி - 150 கிராம்
    இஞ்சி, பூண்டு  விழுது - 1 டேபிள்ஸ்பூன்
    கடுகு - 1 டீஸ்பூன்
    கறிவேப்பிலை - சிறிதளவு
    மிளகாய்த்தூள் - 1 டீஸ்பூன்
    புளி - பெரிய நெல்லிக்காய் அளவு
    தண்ணீர் - தேவையான அளவு
    உப்பு - தேவையான அளவு

    குழம்பு மசாலா செய்ய‌ :

    மல்லி (தனியா) - 2  டீஸ்பூன்
    காய்ந்த மிளகாய் - 4 (குண்டு)
    சீரகம் - அரை டீஸ்பூன்
    சோம்பு - அரை டீஸ்பூன்
    மிளகு - கால் டீஸ்பூன்
    கறிவேப்பிலை - சிறிதளவு
    நல்லெண்ணெய் - 1 டேபிள்ஸ்பூன்

    செய்முறை :

    * சின்ன வெங்காயம், தக்காளி பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    * ப.மிளகாயை நீளவாக்கில் நறுக்கிகொள்ளவும்.

    * மீனை நன்றாக கழுவி வைக்கவும்.

    * புளியை நன்றாக கரைத்து வடிகட்டி வைக்கவும்.

    * கடாயை அடுப்பில் வைத்து நல்லெண்ணெய் ஊற்றி சூடானதும் குழம்பு மசாலா செய்ய கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை நன்றாக வறுத்து ஆற வைத்து மிக்சியில்போட்டு நைசாக அரைத்து கொள்ளவும்.

    * மற்றொரு கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, வெந்தயம், கறிவேப்பிலை போட்டு தாளித்த பின் வெங்காயம், ப.மிளகாயை போட்டு நன்றாக வதக்கவும்.

    * வெங்காயம் நன்றாக வதங்கியதும் அடுத்து அதில் தக்காளியை போட்டு வதக்கவும்.

    * தக்காளி நன்றாக மசிந்ததும் இஞ்சி, பூண்டு விழுது, அரைத்த மசாலா, மிளகாய் தூள் போட்டு பச்சை வாசனை போக வதக்கவும்.

    * அடுத்து அதில் தேவையான அளவு தண்ணீர், உப்பு, புளி கரைசல் ஊற்றி பச்சை வாசனை போக கொதிக்க விடவும்.

    * கடைசியாக மீனை போட்டு அடுப்பை குறைந்த தீயில் 15 நிமிடம் கொதிக்க வைத்து ஓரங்களில் எண்ணெய் பிரிந்து வரும் போது குழம்பை இறக்கி பரிமாறவும்.

    * மீன் சேர்த்த பிறகு அதிக நேரம் கொதிக்க விட கூடாது. இதை தோசை, இட்லி, சப்பாத்தி, சாதத்துடன் சாப்பிட சுவையாக இருக்கும்.

    - இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள். 
    Next Story
    ×