search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    உளுந்து பாயாசம் செய்வது எப்படி
    X

    உளுந்து பாயாசம் செய்வது எப்படி

    உளுந்து மிகவும் சத்து நிறைந்தது. மேலும் உளுந்தை உணவில் அடிக்கடி சேர்த்து கொள்வது மிகவும் நல்லது. இப்போது உளுந்து பாயாசம் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    உளுந்து - 150 கிராம்
    பச்சரிசி - 2 டேபிள் ஸ்பூன்
    தேங்காய் பால் - 1 லிட்டர்
    சீனி - 400 கிராம்
    உப்பு - 1 டீஸ்பூன்
    ஏலக்காய் தூள் - சிறிதளவு
    முந்திரி, திராட்சை, பாதாம் - தேவைக்கு

    செய்முறை :

    * முந்திரி, பாதாமை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    * உளுந்தையும், அரிசியை 2 மணி நேரம் ஊறவைத்து சிறிதளவு தண்ணீர் விட்டு கெட்டியாக அரைத்து வைத்துக்கொள்ளவும்.

    * பின்பு அதில் உப்பு, தேங்காய் பால் சேர்க்கவும்.

    * அடுப்பில் அடிகனமான பாத்திரத்தை வைத்து அதில் அரைத்த உளுந்து, உப்பு, தேங்காய் பால் கலவையை ஊற்றவும்.

    * கெட்டியாக இருக்கும் அந்த கலவையில் 300 மில்லி தண்ணீர் ஊற்றி நன்கு கலக்கி 20 நிமிடம் அடுப்பில் வைக்கவும். அடிபிடிக்காதவாறு கலவையை அடிக்கடி கிளறி விட்டுக்கொண்டே இருக்கவும்.

    * சிறிது நேரம் கழித்து கெட்டியாகி உளுந்து வாசம் வீசும் போது சீனி, ஏலக்காய் தூளை சேர்த்து கிளறவும்.

    * மற்றொரு கடாயை அடுப்பில் வைத்து அதில் சிறிது நெய் ஊற்றி முந்திரி, திராட்சை, பாதாமை போட்டு வறுத்து உளுந்து பாயசத்தில் சேர்க்கவும்.

    * சுவையான உளுந்து பாயாசம் தயார்…!

    - இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    Next Story
    ×