search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    செட்டிநாடு பால் பணியாரம் செய்முறை விளக்கம்
    X

    செட்டிநாடு பால் பணியாரம் செய்முறை விளக்கம்

    பால் பணியாரம் குழந்தைகள் விரும்பி சாப்பிடும் ஒரு அருமையான ரெசிபி. இங்கு செட்டிநாடு பால் பணியாரத்தின் ஈஸியான செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது.
    தேவையான பொருட்கள் :

    பச்சரிசி, உளுந்து - தலா ஒரு கப்,
    பால் - அரை லிட்டர்,
    திக்கான தேங்காய் பால் - ஒரு டம்ளர்
    சர்க்கரை - ஒரு கப்,
    ஏலக்காய்த்தூள் - ஒரு டீஸ்பூன்,
    எண்ணெய் - பொரிப்பதற்கு
    உப்பு - ஒரு சிட்டிகை.

    செய்முறை:

    * பச்சிரிசி, உளுந்து இரண்டையும் சேர்த்து 2 மணி நேரம் ஊறவிட்டு, நைஸாக அரைத்து, உப்பு சேர்த்து அரைத்து கொள்ளவும். மாவு கெட்டியாக இருக்க வேண்டும்.

    * பாலைக் காய்ச்சி இறக்கி சிறிது ஆறியதும் தேங்காய் பால், சர்க்கரை, ஏலக்காய்த்தூள் சேர்த்துக் கலந்து வைக்கவும்.

    * வாணலியில் எண்ணெயைச் சூடாக்கி, அடுப்பை மிதமாக எரியவிடவும்.

    * மாவை சிறுசிறு உருண்டைகளாக உருட்டிப் போட்டு பொரித்தெடுத்து, இதை குளிர்ந்த நீரில் போட்டு எடுக்கவும்.

    * பொரித்து வைத்த பணியாரங்களை பாலில் போட்டு 10 நிமிடம் கழித்து பரிமாறவும்.

    குறிப்பு:

    மாவு புளிக்கக் கூடாது. அரைத்த சிறிது நேரத்திலேயே செய்துவிடவும். பணியாரத்தை பாலில் அதிக நேரம் ஊறவிடக் கூடாது.

    பரிமாறுவதற்கு 10 நிமிடம் முன்பு பாலில் சேர்க்கவும்.

    விருப்பப்பட்டவர்கள் முந்திரி, பாதாம் சேர்த்துக்கொள்ளலாம்.

    - இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    Next Story
    ×