search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    செட்டிநாட்டு மீன் குழம்பு
    X
    செட்டிநாட்டு மீன் குழம்பு

    சுவையான செட்டிநாட்டு மீன் குழம்பு

    சுவையான செட்டிநாட்டு மீன் குழம்பு தயாரிக்கும் முறை எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    மீன்   -  1/2 கிலோ
    வெங்காயம் - 200 கிராம்
    தக்காளி - 200 கிராம்
    பூண்டு(உரித்தது) - ஒரு கைப்பிடி அளவு
    மஞ்சள் தூள் –1/2 டீஸ்பூன்
    மிளகாய் தூள் - 2 டீஸ்பூன்
    தனியா தூள் - 2 டீஸ்பூன்
    புளி - ஒரு எலுமிச்சை அளவு
    உப்பு, எண்ணெய் -  தேவைக்கேற்ப

    தாளிக்க :

    கடுகு,
    கறிவேப்பிலை,
    காய்ந்தமிளகாய்

    அரைக்க :


    தேங்காய்துருவல் – 1/2 மூடி

    செய்முறை:

    * தக்காளி, வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    * முதலில் மீனை சுத்தம் செய்து தனியே எடுத்து கொள்ள வேண்டும்.

    * புளியை கரைத்து அதிலே மஞ்சள் தூள், மிளகாய்த்தூள், தனியாத்தூள், உப்பு போட்டு கலக்கவும்.

    * ஒரு கடாயை அடுப்பில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை, பூண்டு போட்டு தாளிக்கவும்.

    * தாளித்த பின் வெங்காயம், தக்காளியை போட்டு நன்றாக வதக்கவும்.

    * தக்காளி, வெங்காயம் நன்றாக வதங்கிய பின்னர் புளிதண்ணீரை ஊற்றி கொதிக்க வைக்க வேண்டும்.

    * அரைத்த தேங்காய் துருவலையும் அதனுடன் சேர்க்கவும்.

    * குழம்பு கொதிக்கும் போது மீனை போடவும்.

    * 10 நிமிடம் மீன் வெந்ததும் மேலே கொத்தமல்லி தூவி இறக்கவும்.

    * இப்போது சுவையான செட்டிநாட்டு மீன் குழம்பு தயார்.
    Next Story
    ×