என் மலர்tooltip icon

    சமையல்

    இந்த வாரம் சமையல் டிப்ஸ் உங்களுக்காக...
    X

    இந்த வாரம் சமையல் டிப்ஸ் உங்களுக்காக...

    • தக்காளி சட்னி செய்யும் போது அதில் சிறிது எள்ளை வறுத்து பொடி செய்து தூவ மணமாக இருக்கும்.
    • பட்டாணியை வேக வைக்கும் போது ஒரு தேக்கரண்டி சர்க்கரை சேர்த்து வேக விட்டால் சுவையாக இருக்கும்.

    வாழைக்காயை ஈரமில்லாத பாலித்தீன் கவரில் போட்டு இறுக்கமாக கட்டி பிரிட்ஜில் வைத்து விட்டால் இரு வாரம் ஆனாலும் பழுக்காது.

    கடையில் விற்கும் தையல் இலை எனும் மந்தாரை இலையைப் பானையில் போட்டு அதன் மேல் புளியை வைத்தால் நீண்ட நாட்கள் புளி கெடாமல் இருக்கும்.

    கூடையில் வைத்திருக்கும் உருளைக்கிழங்கு முளைவிடாமல் இருக்க கூடவே ஆப்பிள் பழத்தை போட்டு வைக்க வேண்டும்.

    குளிர் காலத்தில் தேங்காய் எண்ணெய் உறைத்து விட்டால் ஒரு ஸ்பூனை நன்கு சூடாக்கி அப்பாட்டிலினுள் நுழைத்து விட்டால் எண்ணெய் உருகி வழக்கமான நிலைக்கு மாறிவிடும்.

    வெங்காயத்தை பிளாஸ்டிக் பையில் போட்டு பிரிட்ஜில் வைத்து மறுநாள் உரித்தால் தோல் எளிதாக உரிந்து வரும். கண்ணில் இருந்து நீரும் வராது.

    பிஸ்கெட் இருக்கும் டப்பாவின் அடியில் சிறிது சர்க்கரையைத் தூவி காற்று புகாமல் இறுக மூடி வைத்தால் பிஸ்கெட் நமத்துப் போகாமல் மொரமொரப்பாக இருக்கும்.

    மாதத்திற்கு ஒரு முறை உப்பை போட்டு மிக்ஸியை சுழலச் செய்தால் மிக்ஸியின் பிளேடுகள் கூர்மையாக இருக்கும்.

    பிரியாணி செய்யும்போது ஒரு எலுமிச்சம் பழத்தை அதில் பிழிந்தால் பிரியாணியின் அரிசிகள் தனித்தனியே பிரிந்து பிரியாணி பார்க்க அழகாக இருக்கும்.

    சர்க்கரைப் பாகில் கொஞ்சம் பாலை விட்டு விட்டால் எந்த இனிப்பு பண்டமும், கடினமாகாமல் மிருதுவாக, சாப்பிட நன்றாக இருக்கும்.

    மேஜை விரிப்பில் தேநீர் கொட்டி விட்டால் உடனே அந்த இடத்தில் சர்க்கரை சிறிது தூவினால் கறை படியாது.

    பழைய சாதம் மீந்து விட்டால் பெரிய கிண்ணத்தில் சாதத்தை நன்கு பிழிந்து வைத்து ஒரு கப் துருவிய தேங்காய் ஒரு டீ ஸ்பூன் சீரகம், சிறிது உப்பு கலந்து கூழாக பிசைந்து பிஸ்கெட் சைஸில் தட்டிப்போட்டு வெயிலில் காய வைத்து பொரித்து சாப்பிடலாம்.

    தக்காளி சட்னி செய்யும் போது அதில் சிறிது எள்ளை வறுத்து பொடி செய்து தூவ மணமாக இருக்கும்.

    பட்டாணியை வேக வைக்கும் போது ஒரு தேக்கரண்டி சர்க்கரை சேர்த்து வேக விட்டால் சுவையாக இருக்கும்.

    புளித்த தோசை மாவில் சுக்குப்பொடி கலந்து ஊத்தாப்பம் செய்தால் எளிதில் ஜீரணமாகும்.

    Next Story
    ×