என் மலர்
சமையல்

LPG Shortage| சிலிண்டர் தட்டுப்பாடு- விறகு அடுப்பில் சமைப்பதால் கிடைக்கும் நன்மைகள்
- மண் பானைகளில் சமைக்கும் போது இந்தச் சுவை இன்னும் அதிகமாகும்.
- விறகு அடுப்பில் சமைத்த உணவுகள் நீண்ட நேரம் கெடாமலும், சூடாகவும் இருக்கும்.
ஈரான் மீது அமெரிக்கா, இஸ்ரேல் நடத்தி வரும் போர் காரணமாக கியாஸ் வரத்து கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது. இதன் காரணமாக ஓட்டல்களுக்கு விநியோகிக்கப்படும் வணிக சிலிண்டர்கள் நிறுத்தப்பட்டுள்ளன. இதனால் ஓட்டல்கள், டீக்கடைகள் மற்றும் முக்கிய உணவு விடுதிகளில் இன்னும் ஓரிரு நாட்களுக்கு மட்டுமே கியாஸ் சிலிண்டர்கள் பயன்பாட்டில் இருப்பதாகவும் இதே நிலை நீடித்தால் ஓட்டல்கள் மூடப்படும் அபாயம் ஏற்படும் என்று கூறப்படுகிறது.
மேலும், கியாஸ் சிலிண்டர் சப்ளை நிறுத்தப்பட்டதால் பல ஓட்டல்கள் விறகு அடுப்புக்கு மாறி வருகிறது. கியால் சிலிண்டர் தட்டுப்பாட்டால் சமூக வலைத்தளங்களில் பல்வேறு பதிவுகள் வைரலாகி வருகிறது. அதன்படி, உலகின் பல பகுதிகளிலும் இயற்கை கழிவுகளில் இருந்து எரிவாயுவை இலவசமாக உற்பத்தி செய்து கொள்ள உதவும் 'ஹோம் பயோ கியாஸ்' அமைப்பை உருவாக்கி வருகின்றனர். இந்த ஹோம் பயோ கியாஸ் என்பது வீடுகளில் மீதமாகும் இயற்கை மற்றும் உணவுக் கழிவுகளில் இருந்து உயிரி எரிவாயுவை உருவாக்குவது ஆகும்.
காய்கறி தோல் உள்பட சமையலறை கழிவுகள் அனைத்தையும் சிறிய துண்டுகளாக வெட்டி, தண்ணீர் கலந்து போட்டால் 7 முதல் 10 நாட்களில் மக்கி மீத்தேன் வாயு வெளியாகும். இந்த வாயுவை குழாய் மூலம் அடுப்புக்கு இணைத்து, எரிவாயுவாக்கி சமைக்கலாம்.
இதனிடையே, விறகு அடுப்பில் சமைப்பது மற்றும் அதன் நன்மைகள் குறித்தும் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அது குறித்து பார்ப்போம்...
விறகு அடுப்பில் சமைத்து உண்பது, தற்கால நவீன அடுப்புகளை விட அதிக சுவையையும் ஆரோக்கியத்தையும் தரக்கூடியது.
கூடுதல் சுவை மற்றும் மணம்: விறகு எரியும் போது வெளியாகும் லேசான புகைக்கரி, உணவிற்கு ஒரு தனித்துவமான சுவையையும் வாசனையையும் (Smoky flavor) சேர்க்கிறது. குறிப்பாக மண் பானைகளில் சமைக்கும் போது இந்தச் சுவை இன்னும் அதிகமாகும்.
சத்துக்கள் பாதுகாப்பு: விறகு அடுப்பில் வெப்பம் சீராகவும் மெதுவாகவும் பரவுவதால், காய்கறிகள் மற்றும் பருப்பு வகைகளில் உள்ள வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் சிதையாமல் பாதுகாக்கப்படுகின்றன. குறிப்பாக அதிக வெப்பத்தில் அழியக்கூடிய வைட்டமின் C போன்ற சத்துக்கள் இதில் நன்றாகத் தக்கவைக்கப்படுகின்றன.
உடல் ஆரோக்கியம்: விறகு அடுப்பு சமையல் மெதுவாக (Slow cooking) நடப்பதால், உணவு எளிதில் செரிமானமாகும் தன்மையைப் பெறுகிறது. இது வயிற்று உபாதைகளைக் குறைக்க உதவுகிறது.
பொருளாதாரச் சிக்கனம்: எரிவாயு (Gas) அல்லது மின்சார அடுப்புகளை விட விறகு அடுப்பு செலவு குறைவானது. கிராமப்புறங்களில் எளிதாகக் கிடைக்கும் சுள்ளிகள் மற்றும் விறகுகளைக் கொண்டு சமைக்கலாம்.
சுற்றுச்சூழல் நட்பு: விறகு ஒரு புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மூலமாகும். முறையாக உலர்த்தப்பட்ட விறகுகளைப் பயன்படுத்துவது சுற்றுச்சூழலுக்குப் பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தாது.
நீண்ட நேரம் சூடாக இருத்தல்: விறகு அடுப்பில் சமைத்த உணவுகள் நீண்ட நேரம் கெடாமலும், சூடாகவும் இருக்கும். மேலும், அடுப்பு அணைந்த பிறகும் அதில் இருக்கும் தணல் உணவைச் சூடாக வைத்திருக்க உதவும்.
விறகு அடுப்பில் சமைப்பதால் ஏற்படும் தீமைகள்:
விறகு அடுப்பில் அடிக்கடி சமைப்பதால் ஆஸ்துமா வர வாய்ப்பு உள்ளது. மேலும், விறகு அடுப்பில் வரும் புகையை நீண்ட காலம் சுவாசித்தால் சுவாச கோளாறுகள், நுரையீரல் பிரச்சனைகள் ஏற்படும் என்பது குறிப்பிடத்தக்கது.






