என் மலர்tooltip icon

    சமையல்

    ஆந்திரா ஸ்பெஷல் சிட்லம் பொடி
    X

    ஆந்திரா ஸ்பெஷல் சிட்லம் பொடி

    • பொடி மேல் நெய் விட்டு சாப்பிட அவ்வளவு அருமையாக இருக்கும்.
    • எளிதாக செய்யலாம் ஆந்திரா ஸ்பெஷல் சிட்லம் பொடி.

    என்னதான் நம்முடைய வீட்டில் பருப்பு பொடி அரைத்தாலும் அந்த ஆந்திர ஹோட்டலில் சாப்பிட்ட பருப்பு பொடியின் சுவை நிச்சயம் வராது. அப்படி அந்த பருப்பு பொடியில் என்னதான் சேர்த்து அரைக்கிறார்கள். ஆந்திராவுக்கு போனாலே சுடச்சுட சாதத்தில் அந்த பருப்பு பொடி மேல் நெய் விட்டு சாப்பிட அவ்வளவு பிடிக்கிறது. இந்த ரெசிபி தெரிந்தால் நம்முடைய வீட்டிலும் அரைத்து வைத்துக்கொள்ளலாம் என்று யோசிப்பவர்கள் இந்த ரெசிபியை படிங்க.

    தேவையான பொருட்கள்:

    கடலைப்பருப்பு - கப்

    உளுந்தம்பருப்பு- கப்

    துவரம்பருப்பு - கப்

    காய்ந்த மிளகாய் 15

    மிளகு - 1 டேபிள் ஸ்பூன்

    சீரகம்-1 டேபிள் ஸ்பூன்

    புளி - நெல்லிக்காய் அளவு

    பெருங்காயம் - 1 டீஸ்பூன்

    உப்பு - தேவைக்கு

    செய்முறை:

    அடிகனமான வாணலியில் கடலைப்பருப்பு, உளுந்தம்பருப்பு, துவரம்பருப்பு ஆகியவற்றை மிதமான தீயில் தனித்தனியாக வறுத்து ஆற வைக்க வேண்டும். பின்னர் அதே வாணலியில் காய்ந்த மிளகாய், மிளகு, சீரகம் ஆகியவற்றையும் தனித்தனியாக வறுத்துக்கொள்ள வேண்டும். பின்னர் வாணலியில் புளியைப்போட்டு அதில் உள்ள ஈரப்பதம் முழுவதுமாக நீங்கும் வரை வறுக்க வேண்டும்.

    மிக்சி ஜாரீல் முதலில் காய்ந்த மிளகாய், உப்பு, புளி போட்டு பொடித்துக்கொள்ளவும். அதன்பிறகு மிளகு, சீரகம், பருப்பு ஆகியவற்றை போட்டு பொடியாக அரைக்கவும். கடைசியாக இந்த பொடியுடன் பெருங்காயத்தூள் கலந்து ஆற வைக்க வேண்டும். பின்னர் அதை உலர்ந்த சுத்தமான பாட்டிலில் நிரப்பி வைக்கலாம். இப்போது ருசியான சிட்லம் பொடி தயார். அதிககாரம் தேவைப்பட்டால். அதற்கு ஏற்றவாறு காய்ந்த மிளகாயின் அளவை அதிகரித்தும் தயாரிக்கலாம்.

    Next Story
    ×