என் மலர்tooltip icon

    பெண்கள் உலகம்

    சத்து நிறைந்த கேழ்வரகு சேமியா புட்டு
    X

    சத்து நிறைந்த கேழ்வரகு சேமியா புட்டு

    குழந்தைகளுக்கு காலையில் சத்தான டிபன் கொடுக்க விரும்பினால் கேழ்வரகு சேமியா புட்டு செய்து கொடுக்கலாம். இன்று இதன் செய்முறையை பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    கேழ்வரகு சேமியா - 1 பாக்கெட்
    உப்பு - தேவையான அளவு
    தேங்காய் - தேவையான அளவு
    ஏலக்காய் தூள் - கால் தேக்கரண்டி
    வெல்லம் அல்லது நாட்டு சர்க்கரை - தேவையான அளவு



    செய்முறை :

    தேங்காயை துருவிக்கொள்ளவும்.

    கால் கப் தண்ணீரில் உப்பு கலந்து அதை கேழ்வரகு சேமியாவில் தெளித்து 5 நிமிடம் ஊற விடவும்.

    பின்னர் ஊறிய கேழ்வரகு சேமியாவை இட்லி தட்டில் வேக வைத்து கொள்ளவும்.

    வெந்ததும் அதில் வெல்லம் அல்லது நாட்டுச்சர்க்கரை, ஏலக்காய் தூள், தேங்காய் துருவல் சேர்த்து கலந்து பரிமாறவும்.

    சத்தான கேழ்வரகு சேமியா புட்டு ரெடி.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    Next Story
    ×