என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
லைஃப்ஸ்டைல்
X
மொச்சை பொரியல் செய்வது எப்படி
Byமாலை மலர்27 Dec 2016 7:27 AM GMT (Updated: 27 Dec 2016 7:27 AM GMT)
மொச்சையில் பொரியல் செய்து சாப்பிட்டால் சூப்பராக இருக்கும். இப்போது மொச்சை பொரியல் செய்வது எப்படி என்று விரிவாக கீழே பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
மொச்சை - 3 கைப்பிடி
சின்ன வெங்காயம் - 50 கிராம்
தக்காளி - 1
பூண்டு - 3 பற்கள்
மிளகாய்த் தூள் - 1 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
கொத்தமல்லி - சிறிதளவு
தாளிக்க :
நல்லெண்ணெய் - 1 டீஸ்பூன்
சீரகம்
பெருஞ்சீரகம்
பெருங்காயம்
கறிவேப்பிலை
செய்முறை :
* வெங்காயம், கொத்தமல்லி, தக்காளியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
* பூண்டை தட்டி வைக்கவும்.
* மொச்சையை முதல் நாளே ஊற வைத்து காலையில் சிறிது உப்பு போட்டு வேக வைத்து நீரை வடித்து விடவும்.
* ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் தாளிக்க கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை போட்டு தாளித்த பின் தட்டி வைத்த பூண்டை போட்டு வதக்கவும்.
* பூண்டை போட்டு வதக்கிய பின்னர் வெங்காயத்தை போட்டு வதக்கவும்.
* அடுத்து தக்காளியை போட்டு வதக்கவும்.
* தக்காளி நன்றாக வதங்கிய பின்னர் மொச்சையை சேர்த்து வதக்கி மிளகாய்த் தூள், மஞ்சள் தூள், உப்பு சேர்த்துக் கிளறி சிறிது தண்ணீர் தெளித்து மிதமானத் தீயில் சிறிது நேரம் மூடி வைக்கவும்.
* கடைசியாக கொத்தமல்லி தழை தூவி கிளறி இறக்கவும்.
* மொச்சை பொரியல் ரெடி.
* இது எல்லா வகையான சாதத்திற்கும் பொருத்தமாக இருக்கும்.
- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
மொச்சை - 3 கைப்பிடி
சின்ன வெங்காயம் - 50 கிராம்
தக்காளி - 1
பூண்டு - 3 பற்கள்
மிளகாய்த் தூள் - 1 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
கொத்தமல்லி - சிறிதளவு
தாளிக்க :
நல்லெண்ணெய் - 1 டீஸ்பூன்
சீரகம்
பெருஞ்சீரகம்
பெருங்காயம்
கறிவேப்பிலை
செய்முறை :
* வெங்காயம், கொத்தமல்லி, தக்காளியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
* பூண்டை தட்டி வைக்கவும்.
* மொச்சையை முதல் நாளே ஊற வைத்து காலையில் சிறிது உப்பு போட்டு வேக வைத்து நீரை வடித்து விடவும்.
* ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் தாளிக்க கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை போட்டு தாளித்த பின் தட்டி வைத்த பூண்டை போட்டு வதக்கவும்.
* பூண்டை போட்டு வதக்கிய பின்னர் வெங்காயத்தை போட்டு வதக்கவும்.
* அடுத்து தக்காளியை போட்டு வதக்கவும்.
* தக்காளி நன்றாக வதங்கிய பின்னர் மொச்சையை சேர்த்து வதக்கி மிளகாய்த் தூள், மஞ்சள் தூள், உப்பு சேர்த்துக் கிளறி சிறிது தண்ணீர் தெளித்து மிதமானத் தீயில் சிறிது நேரம் மூடி வைக்கவும்.
* கடைசியாக கொத்தமல்லி தழை தூவி கிளறி இறக்கவும்.
* மொச்சை பொரியல் ரெடி.
* இது எல்லா வகையான சாதத்திற்கும் பொருத்தமாக இருக்கும்.
- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X