என் மலர்
ஆரோக்கியம்

நவராத்திரி ஸ்பெஷல் காராமணி - கேரட் சுண்டல்
நவராத்திரிக்கு நைவேத்தியம் படைக்கும் போது காராமணி - கேரட் சுண்டல் வைத்து படைக்கலாம். அசத்தலாக இருக்கும்.
karamani sundal
தேவையான பொருட்கள் :
காராமணி - 250 கிராம்
கேரட் - 2 (துருவிக் கொள்ளவும்)
பெரிய வெங்காயம் - ஒன்று
பச்சைமிளகாய் - 2
மிளகாய்த்தூள் - அரை டீஸ்பூன்
மஞ்சள் தூள் - கால் டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
கொத்தமல்லித்தழை - சிறிதளவு
எண்ணெய் - 4 டீஸ்பூன்
கடுகு - ஒரு டீஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிதளவு
தேங்காய்த் துருவல் - 5 டீஸ்பூன்
செய்முறை :
* கேரட்டை துருவிக் கொள்ளவும்.
* வெங்காயம், ப.மிளகாய், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
* காராமணியை எண்ணெய் விடாமல் லேசாக வறுத்து, 1 மணி நேரம் ஊற வைத்து குக்கரில் போட்டு வேகவைத்து கொள்ளவும்.
* வாணலியில் எண்ணெய் விட்டு சூடானதும் கடுகு, கறிவேப்பிலை சேர்த்து தாளித்து நீளமாக நறுக்கிய வெங்காயம், பச்சைமிளகாய் சேர்த்து 2 நிமிடம் வதக்கவும்.
* இத்துடன் பாதியளவு கேரட் துருவல், மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், உப்பு சேர்த்து 2 நிமிடம் வதக்கவும்.
* இத்துடன் வேக வைத்த காராமணி சேர்த்து கலந்து, 5 நிமிடம் தீயைக் குறைத்து வைக்கவும்.
* இறுதியாக தேங்காய்த்துருவல் சேர்த்து இறக்கி, மீதியுள்ள கேரட் துருவல், கொத்தமல்லித்தழை தூவிப் பரிமாறவும்.
* சுவையான சத்தான காராமணி - கேரட் சுண்டல் ரெடி.
- இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
Next Story