என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
லைஃப்ஸ்டைல்
X
சத்தான சுவையான ராஜ்மா அடை
Byமாலை மலர்19 Sep 2016 2:37 AM GMT (Updated: 19 Sep 2016 2:37 AM GMT)
ராஜ்மாவில் அதிகளவு சத்துக்கள் நிறைந்துள்ளது. சத்தான சுவையான ராஜ்மா அடை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
புழுங்கல் அரிசி - ஒரு கப்,
ராஜ்மா - அரை கப்,
இஞ்சி - சிறு துண்டு,
பாசிப்பருப்பு - ஒரு கப்,
உளுத்தம்பருப்பு - 2 டீஸ்பூன்,
பச்சை வேர்க்கடலை - ஒரு கப்,
மிளகு - 2 டேபிஸ்பூன்,
நறுக்கிய வெங்காயம் - ஒரு கிண்ணம்,
எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை :
* அரிசியுடன் ராஜ்மா சேர்த்து 2 மணி நேரம் ஊற வைக்கவும்.
* நன்றாக ஊறியதும், தண்ணீர் வடித்து இஞ்சி, மிளகு சேர்த்து அரைக்கவும்.
* பாசிப்பருப்பு, வேர்க்கடலை, உளுத்தம்பருப்பையும் ஊறவைத்து தனியாக அரைத்து எல்லா மாவையும் சேர்க்கவும்.
* அடுத்து அதில் உப்பு, நறுக்கிய வெங்காயம் சேர்த்து நன்றாக கலந்து வைக்கவும்.
* தோசை கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் அடுப்பை மிதமான தீயில் வைத்து மாவை அடை தட்டி,
சுற்றி சிறிது எண்ணெய் ஊற்றி வெந்ததும் திருப்பி போட்டு எடுக்கவும்.
* மிகவும் சத்து நிறைந்தது இந்த ராஜ்மா அடை.
- இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X