என் மலர்
ஆரோக்கியம்

சளி தொல்லையை போக்கும் தூதுவளை துவையல்
சளி பிடித்தவர்களுக்கு தூதுவளையை உளுத்தம் பருப்பு, புளி வைத்து துவையல் செய்து கொடுத்தால் எந்த மருந்துக்கும் அசராத சளியும் கரைந்து காணாமல் போய் விடும்.
தேவையான பொருள்கள் :
தூதுவளை இலை - 2 கப்
புதினா - 1 கப்
பூண்டு - 4 பல்
இஞ்சி - 1/2 துண்டு
சிறிய வெங்காயம் - 10
சிவப்பு மிளகாய் - 6
எண்ணெய் - 2 டீஸ்பூன்
புளி - கோலிக்குண்டு அளவு
துருவிய தேங்காய் - 2 ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு.
தாளிக்க :
கடுகு, உளுத்தம் பருப்பு, பெருங்காயம், கறிவேப்பிலை.
செய்முறை :
* பூண்டு, சின்ன வெங்காயத்தை தோல் உரித்து வைக்கவும்.
* கடாயில் எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும் அதில் காய்ந்த மிளகாய், சிறிய வெங்காயம், பூண்டு, இஞ்சி போட்டு வதக்கி பின் தேங்காய் பூவையும் போட்டு வதக்கவும்.
* கடைசியாக தூதுவளை இலை, புதினா இலை போட்டு வதக்கி ஆற வைக்கவும்.
* ஆறிய பின் மிக்ஸியில் போட்டு கெட்டியாக அரைக்கவும்.
* மற்றொரு கடாயில் சிறிது எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, உளுத்தம்பருப்பு, பெருங்காயத்தூள், கறிவேப்பிலை போட்டு தாளித்து அரைத்த துவையலில் கொட்டவும்.
* சுவையான சத்தான தூதுவளை துவையல் ரெடி.
* புதினா, தூதுவளை இலையை சிறிது வதக்கினால் மட்டும் போதும்.
- இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
Next Story