என் மலர்
ஆரோக்கியம்

காஞ்சிபுரம் இட்லி செய்முறை விளக்கம்
காஞ்சிபுரம் இட்லியை வீட்டிலேயே எளிய முறையில் செய்யலாம். எப்படி செய்வது என்று கீழே பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
புழுங்கலரிசி - ஒரு கப்,
பச்சரிசி - ஒரு கப்,
உளுத்தம் பருப்பு - ஒரு கப்,
நல்லெண்ணெய் - ஒரு டேபிள்ஸ்பூன்,
சுக்குத்தூள் - கால் ஸ்பூன்,
உப்பு - தேவையான அளவு,
ஆப்பசோடா - ஒரு சிட்டிகை.
தாளிக்க :
கடுகு - அரை ஸ்பூன்,
உளுத்தம்பருப்பு - ஒரு ஸ்பூன்,
கடலைப் பருப்பு - 2 ஸ்பூன்,
மிளகு - ஒரு ஸ்பூன்,
சீரகம் - ஒரு ஸ்பூன்
தேங்காய் துருவல் - 2 டேபிள்ஸ்பூன்,
கறிவேப்பிலை - சிறிது,
பெருங்காயம் - அரை ஸ்பூன்,
எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்,
இஞ்சி - ஒரு துண்டு.
செய்முறை :
* மிளகு, சீரகத்தை கரகரப்பாக பொடித்து கொள்ளவும்.
* இஞ்சியை தோல் சீவி துருவிக்கொள்ளவும்.
* அரிசி, பருப்பை ஒன்றாக 2 மணி நேரம் ஊறவையுங்கள். ஊறிய பின்னர், நன்கு கழுவி, சற்றுக் கரகரப்பாக அரைத்தெடுங்கள். தேவையான உப்பு சேர்த்துக் கரைத்துப் புளிக்க வையுங்கள். புளித்த மாவில் சுக்குத்தூள், ஆப்பசோடா சேர்த்துக் கலந்துகொள்ளுங்கள்.
நல்லெண்ணெயைக் காய்ச்சி அதில் ஊற்றுங்கள்.
* கடாயில் எண்ணெயைக் காயவைத்து, கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு தாளித்து பொன்னிறமானதும் மிளகு, சீரகம், இஞ்சி, கறிவேப்பிலை சேர்த்து வதக்கி மாவில் சேர்த்து நன்றாக கலக்க வேண்டும்.
* கலந்த மாவை சிறிய கிண்ணங்களில் நிரப்பி, இட்லி பாத்திரத்தில் வைத்து வேக வைத்து எடுக்கவும்.
* சுவையான சத்தான காஞ்சிபுரம் இட்லி ரெடி.
- இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
புழுங்கலரிசி - ஒரு கப்,
பச்சரிசி - ஒரு கப்,
உளுத்தம் பருப்பு - ஒரு கப்,
நல்லெண்ணெய் - ஒரு டேபிள்ஸ்பூன்,
சுக்குத்தூள் - கால் ஸ்பூன்,
உப்பு - தேவையான அளவு,
ஆப்பசோடா - ஒரு சிட்டிகை.
தாளிக்க :
கடுகு - அரை ஸ்பூன்,
உளுத்தம்பருப்பு - ஒரு ஸ்பூன்,
கடலைப் பருப்பு - 2 ஸ்பூன்,
மிளகு - ஒரு ஸ்பூன்,
சீரகம் - ஒரு ஸ்பூன்
தேங்காய் துருவல் - 2 டேபிள்ஸ்பூன்,
கறிவேப்பிலை - சிறிது,
பெருங்காயம் - அரை ஸ்பூன்,
எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்,
இஞ்சி - ஒரு துண்டு.
செய்முறை :
* மிளகு, சீரகத்தை கரகரப்பாக பொடித்து கொள்ளவும்.
* இஞ்சியை தோல் சீவி துருவிக்கொள்ளவும்.
* அரிசி, பருப்பை ஒன்றாக 2 மணி நேரம் ஊறவையுங்கள். ஊறிய பின்னர், நன்கு கழுவி, சற்றுக் கரகரப்பாக அரைத்தெடுங்கள். தேவையான உப்பு சேர்த்துக் கரைத்துப் புளிக்க வையுங்கள். புளித்த மாவில் சுக்குத்தூள், ஆப்பசோடா சேர்த்துக் கலந்துகொள்ளுங்கள்.
நல்லெண்ணெயைக் காய்ச்சி அதில் ஊற்றுங்கள்.
* கடாயில் எண்ணெயைக் காயவைத்து, கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு தாளித்து பொன்னிறமானதும் மிளகு, சீரகம், இஞ்சி, கறிவேப்பிலை சேர்த்து வதக்கி மாவில் சேர்த்து நன்றாக கலக்க வேண்டும்.
* கலந்த மாவை சிறிய கிண்ணங்களில் நிரப்பி, இட்லி பாத்திரத்தில் வைத்து வேக வைத்து எடுக்கவும்.
* சுவையான சத்தான காஞ்சிபுரம் இட்லி ரெடி.
- இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
Next Story