search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    சுவையான பருப்பு ரசம் செய்வது எப்படி
    X

    சுவையான பருப்பு ரசம் செய்வது எப்படி

    பருப்பு ரசம் குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும். இதை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    தக்காளி - ஒன்று
    புளி - பெரிய நெல்லிக்காய் அளவு
    பூண்டு - 5 பல்
    சீரகம் - அரை டீஸ்பூன்
    கடுகு - அரை டீஸ்பூன்
    காய்ந்த மிளகாய் - 5
    பெருங்காயத்தூள் - 2 சிட்டிகை
    உப்பு - தேவையான அளவு
    எண்ணெய் - 2 டீஸ்பூன்
    கறிவேப்பிலை - சிறிதளவு
    கொத்தமல்லித்தழை - சிறிதளவு
    பருப்புத் தண்ணீர் - 100 மில்லி (துவரம் பருப்பு வேக வைத்து வடித்த தண்ணீர்)

    செய்முறை :

    * புளியை சிறிது நேரம் ஊற வைத்து, கரைத்து வடிகட்டி வைத்துக் கொள்ளவும்.

    * பூண்டு, சீரகம், காய்ந்த மிளகாயை கரகரப்பாக பொடித்து கொள்ளவும்.

    * கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    * தக்காளியை கையில் நன்றாக பிசைந்தோ அல்லது மிக்ஸியில் ஒரு சுழற்று சுழற்றியோ தனியே வைத்துக் கொள்ளவும்.

    * கடாயில் அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி கடுகு போட்டு தாளித்த பின் தட்டி வைத்துள்ள பூண்டு சீரகம் காய்ந்த மிளகாயை சேர்த்து வதக்கவும்.

    * பின்னர் அதனுடன் அரைத்து வைத்துள்ள தக்காளியுடன், கறிவேப்பிலை, கொத்தமல்லித்தழையை சிறிதளவு இதனுடன் சேர்த்துத் தாளிக்கவும்.

    * அடுத்து அதில் புளிக்கரைசலைச் சேர்த்து தேவையான அளவு உப்பு மற்றும் பெருங்காயத்தூள் சேர்த்து மிதமான சூட்டில் லேசாக கொதிக்க விடவும்.

    * பிறகு இதில் பருப்புத் தண்ணீரைச் சேர்க்கவும்.

    * கொதி வரும்போது அடுப்பை அணைத்து, இறுதியில் பொடியாக நறுக்கி வைத்துள்ள கறிவேப்பிலை, கொத்தமல்லித்தழையை ரசத்தின் மேலே தூவவும்.

    * சுவையான பருப்பு ரசம் தயார்.

    குறிப்பு:

    * பருப்பு ரசம் கொதிக்கக் கூடாது. ஆனால் புளி, தக்காளி ரசத்தைக் கொதிக்க விட்டால்தான் அதன் பச்சை வாசனை போகும்.

    - இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    Next Story
    ×