search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    சத்தான கறிவேப்பிலை அடை செய்வது எப்படி
    X

    சத்தான கறிவேப்பிலை அடை செய்வது எப்படி

    சத்தான கறிவேப்பிலை அடை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    பச்சரிசி - அரை கப்
    துவரம்பருப்பு - அரை கப்
    பாசிப்பருப்பு - அரை கப்
    கடலைப்பருப்பு - அரை கப்
    உளுந்து - கால் கப்
    காய்ந்த மிளகாய் - 6
    கறிவேப்பிலை - 2 கைப்பிடியளவு
    சின்ன வெங்காயம் - 50 கிராம்
    பூண்டு - 10 பல்
    பெருங்காயத்தூள் - கால் டீஸ்பூன்
    மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன்
    உப்பு, எண்ணெய் - தேவையான அளவு

    செய்முறை :

    * வெங்காயம், பூண்டு, கறிவேப்பிலையை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    * பச்சரிசி, துவரம்பருப்பு, பாசிப்பருப்பு, கடலைப்பருப்பு மற்றும் உளுந்தை ஆகியவற்றை 1 மணிநேரம் ஊறவைத்து அதனுடன் கறிவேப்பிலை, காய்ந்த மிளகாய் சேர்த்து அடை மாவு பதத்துக்கு கொரகொப்பாக அரைத்துக்கொள்ளவும்.

    * அரைத்த மாவில் வெங்காயம், உப்பு, பெருங்காயத்தூள், மஞ்சள்தூள், பூண்டுப்பல் சேர்த்து நன்றாக கலந்து அரை மணி நேரம் அப்படியே வைக்கவும்.

    * அடுப்பில் தோசைக்கல்லை வைத்து சூடானதும் மாவை அடைகளாக ஊற்றி சுற்றி சிறிது எண்ணெய் ஊற்றி வெந்ததும் திருப்பி போட்டு எடுத்துப் பரிமாறவும்.

    * சுவையான சத்தான கறிவேப்பிலை அடை ரெடி.

    - இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    Next Story
    ×