search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    சுவையான மைசூர் பருப்பு தால் செய்வது எப்படி
    X

    சுவையான மைசூர் பருப்பு தால் செய்வது எப்படி

    பருப்புக்களில் எண்ணற்ற சத்துக்கள் நிறைந்துள்ளன. பருப்பைக் கொண்டு சாம்பார் செய்வதற்கு பதிலாக தால் செய்து சாப்பிடுங்கள். நீங்கள் அந்த தால் ரெசிபிக்கே அடிமையாகிவிடுவீர்கள்.
    தேவையான பொருட்கள் :

    மைசூர் பருப்பு - 1 கப்
    மஞ்சள் தூள் - சிறிதளவு
    எண்ணெய் - 1 டீஸ்பூன்

    தாளிப்பதற்கு...

    தேங்காய் எண்ணெய் - 2 டீஸ்பூன்
    கடுகு - 1/2 டீஸ்பூன் உளுத்தம்
    பருப்பு - 1 டீஸ்பூன்
    சீரகம் - 1 டீஸ்பூன்
    வெங்காயம் - 1
    பூண்டு - 7 பல்
    கறிவேப்பிலை - சிறிது
    நெய் - 4 டீஸ்பூன்
    உப்பு - தேவையான அளவு

    செய்முறை :

    * வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    * பூண்டை தட்டி வைக்கவும்.

    * மைசூர் பருப்பை நன்றாக கழுவி, குக்கரில் போட்டு மஞ்சள் தூள், 3 கப் தண்ணீர் ஊற்றி அடுப்பில் வைத்து, குக்கரை மூடி 3 விசில் விட்டு இறக்க வேண்டும். விசில் போனதும் பருப்பை கடைந்து வைக்கவும்

    * ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் தேங்காய் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு, உளுத்தம் பருப்பு, சீரகம், கறிவேப்பிலை சேர்த்து தாளித்த பின் வெங்காயம், கறிவேப்பிலை, பூண்டு சேர்த்து சிறிது நேரம் நன்கு வதக்க வேண்டும்.

    * அடுத்து மசித்த பருப்பை வாணலியில் ஊற்றி, தேவையான அளவு உப்பு சேர்த்து, 10 நிமிடம் மிதமான தீயில் கொதிக்க விட்டு இறக்கினால், சுவையான பருப்பு தால் ரெடி!

    * இதனை சாதத்துடன் சேர்த்து, சிறிது நெய் ஊற்றி சாப்பிட்டால், அதன் சுவையே தனி தான். குழந்தைகளும் விரும்பி சாப்பிடுவார்கள். சப்பாத்திக்கு இந்த பருப்பு தால் சுவையாக இருக்கும்.

    - இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    Next Story
    ×