என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
லைஃப்ஸ்டைல்
X
அரிசி ரவை கீரை கொழுக்கட்டை
Byமாலை மலர்24 Jun 2016 1:58 AM GMT (Updated: 24 Jun 2016 1:58 AM GMT)
குழந்தைகள் கீரை சாப்பிட அடம் பிடிப்பார்கள். அவர்களுக்கு இவ்வாறு கீரையை செய்து கொடுத்தால் விரும்பி சாப்பிடுவார்கள்.
தேவையான பொருட்கள் :
அரிசி - 250 கிராம்,
அரைக்கீரை - ஒரு கைப்பிடி அளவு,
மிளகு - ஒரு டீஸ்பூன்,
துவரம்பருப்பு - 2 டீஸ்பூன்,
கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு - தலா ஒரு டீஸ்பூன்,
காய்ந்த மிளகாய் - ஒன்று,
பெருங்காயத்தூள் - சிறிதளவு,
எண்ணெய் - தேவைக்கு,
உப்பு - தேவையான அளவு.
செய்முறை :
* கீரையை நன்றாக சுத்தம் செய்து பொடியாக நறுக்கி கொள்ளவும்.
* அரிசியுடன் துவரம்பருப்பு, மிளகு சேர்த்து ரவை போல உடைத்துக் கொள்ளவும்.
* வாணலியில் சிறிதளவு எண்ணெய் விட்டு, நறுக்கி வைத்துள்ள கீரையை வதக்கிக் கொள்ளவும்.
* கனமான பாத்திரத்தில் சிறிதளவு எண்ணெயை விட்டு, காய்ந்ததும் கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு, காய்ந்த மிளகாயை கிள்ளிப் போட்டு, பெருங்காயத்தூள் சேர்த்து தாளிக்கவும்.
* அடுத்து அதில் வதக்கிய கீரை சேர்க்கவும்.
* ஒரு பங்கு அரிசி ரவைக்கு நான்கு பங்கு என்ற அளவில் தண்ணீர் ஊற்றி கொதிக்கவிடவும்.
* தண்ணீர் நன்கு கொதித்த உடன் உடைத்த ரவையைத் தூவி, உப்பு சேர்த்துக் கிளறவும்.
* அடுப்பை மிதமான தீயில் வைத்து, பத்திரத்தை மூடி வைத்து, வெந்த உடன் இறக்கவும்.
* வெந்த கலவையை பிசைந்து, உருண்டைகளாக உருட்டி, ஆவியில் வேகவிட்டு எடுக்கவும்.
* இந்த அரிசி ரவை கீரை கொழுக்கட்டை மிகவும் சத்து நிறைந்தது.
- இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
அரிசி - 250 கிராம்,
அரைக்கீரை - ஒரு கைப்பிடி அளவு,
மிளகு - ஒரு டீஸ்பூன்,
துவரம்பருப்பு - 2 டீஸ்பூன்,
கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு - தலா ஒரு டீஸ்பூன்,
காய்ந்த மிளகாய் - ஒன்று,
பெருங்காயத்தூள் - சிறிதளவு,
எண்ணெய் - தேவைக்கு,
உப்பு - தேவையான அளவு.
செய்முறை :
* கீரையை நன்றாக சுத்தம் செய்து பொடியாக நறுக்கி கொள்ளவும்.
* அரிசியுடன் துவரம்பருப்பு, மிளகு சேர்த்து ரவை போல உடைத்துக் கொள்ளவும்.
* வாணலியில் சிறிதளவு எண்ணெய் விட்டு, நறுக்கி வைத்துள்ள கீரையை வதக்கிக் கொள்ளவும்.
* கனமான பாத்திரத்தில் சிறிதளவு எண்ணெயை விட்டு, காய்ந்ததும் கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு, காய்ந்த மிளகாயை கிள்ளிப் போட்டு, பெருங்காயத்தூள் சேர்த்து தாளிக்கவும்.
* அடுத்து அதில் வதக்கிய கீரை சேர்க்கவும்.
* ஒரு பங்கு அரிசி ரவைக்கு நான்கு பங்கு என்ற அளவில் தண்ணீர் ஊற்றி கொதிக்கவிடவும்.
* தண்ணீர் நன்கு கொதித்த உடன் உடைத்த ரவையைத் தூவி, உப்பு சேர்த்துக் கிளறவும்.
* அடுப்பை மிதமான தீயில் வைத்து, பத்திரத்தை மூடி வைத்து, வெந்த உடன் இறக்கவும்.
* வெந்த கலவையை பிசைந்து, உருண்டைகளாக உருட்டி, ஆவியில் வேகவிட்டு எடுக்கவும்.
* இந்த அரிசி ரவை கீரை கொழுக்கட்டை மிகவும் சத்து நிறைந்தது.
- இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X