search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    சாமை சாம்பார் சாதம் செய்வது எப்படி
    X

    சாமை சாம்பார் சாதம் செய்வது எப்படி

    சிறுதானியங்களை தினமும் உணவில் சேர்த்து வந்தால் நோய் நொடி இன்றி ஆரோக்கியமாக வாழலாம்.
    தேவையான பொருட்கள் :

    சாமை அரிசி - 4 கப்,
    பீன்ஸ், கேரட் - 250 கிராம்,
    கத்திரிக்காய், தக்காளி  - தலா 50 கிராம்,
    காய்ந்த மிளகாய்  - 8,
    துவரம் பருப்பு, உளுந்தம் பருப்பு தலா -  ஒரு கப்,
    சின்ன வெங்காயம்  - 10,
    முருங்கைக்காய்  -  2,
    புளி - நெல்லிக்காய் அளவு,
    உப்பு, கடுகு, மஞ்சள்தூள், கொத்தமல்லித்தழை, கறிவேப்பிலை  - தேவையான அளவு,
    சாம்பார் பொடி, நெய், சீரகத்தூள், பெருங்காயத்தூள், நல்லெண்ணெய்  - சிறிதளவு.

    செய்முறை:

    * சாமை அரிசியை தண்ணீரில் கழுவி ஊறவைக்கவும்.

    * புளியை நன்றாக கரைத்து கொள்ளவும்.

    * காய்கறிகள், தக்காளி, வெங்காயம், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    * துவரம் பருப்பை மஞ்சள்தூள் சேர்த்துக் குழைய வேகவிடவும்.

    * அடிகனமான பாத்திரத்தை அடுப்பில் வைத்து எண்ணெய் விட்டு சூடானதும் கடுகு, உளுந்தம் பருப்பு, காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை சேர்த்துப் தாளித்த பின், சின்ன வெங்காயம் சேர்த்து வதக்கி, காய்கறிகளை சேர்த்து வதக்கவும்.

    * காய்கள் நன்கு வெந்ததும், வேகவைத்த பருப்பைச் சேர்த்து, சிறிது புளிக்கரைசலை விட்டுக் கொதிக்கவிடவும்.

    * அடுத்து அதில் ஊறவைத்த சாமை அரிசியைக் கொட்டி உப்பு சேர்த்துக் கிளறவும்.

    * ஏழரை கப் தண்ணீர் சேர்த்து பெருங்காயத்தூள், சாம்பார் பொடி சேர்த்து நன்கு கிளறவும்.

    * அரிசி வெந்தது குழைந்ததும், நெய் ஊற்றிக் கிளறிவிடவும்.

    * கடைசியாக கொத்தமல்லித்தழை, சீரகத்தூள் தூவிப் பரிமாறவும்.

    - இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    Next Story
    ×