என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
லைஃப்ஸ்டைல்
X
செரிமானக் கோளாறுகளை சீராக்கும் வரகரிசி மோர் கஞ்சி
Byமாலை மலர்9 Jun 2016 5:42 AM GMT (Updated: 9 Jun 2016 5:42 AM GMT)
வரகரிசி நுண் ஊட்டச்சத்துக்கள் நிறைந்தது. செரிமானக் கோளாறுகளை சீராக்கும் வரகரிசி மோர் கஞ்சியை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
வரகரிசி - கால் கப்,
ஓமம் - ஒரு டீஸ்பூன்,
உப்பு - தேவையான அளவு,
தண்ணீர் - அரை கப்,
மோர் - ஒரு கப்,
பச்சை மிளகாய் - 2,
மாங்காய், கேரட் - தலா 100 கிராம்,
பெரிய வெங்காயம் - 1,
எண்ணெய், பெருங்காயத்தூள் - தேவைக்கு.
செய்முறை:
* கேரட், மாங்காய், ப.மிளகாயை வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
* வரகரிசியை சுத்தம் செய்து, சிறிது ஓமம், தண்ணீர் சேர்த்து குக்கரில் வைத்து வேகவைக்க வேண்டும்.
* மோரை நன்றாக கடைந்து வைக்கவும்.
* கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் மீதம் உள்ள ஓமம் போட்டு தாளித்த பின், பச்சை மிளகாய், வெங்காயம், மாங்காய், கேரட், பெருங்காயத் தூள் ஆகியவற்றை சேர்த்து பாதி வேகும் வரை வதக்கிய பின் கடைந்து வைத்துள்ள மோரில் சேர்த்து நன்றாக கலக்கவும்.
* வரகரிசியை வேகவைத்து இறக்கியவுடன் அதில் கலந்து வைத்துள்ள மோர், உப்பு சேர்த்து நன்றாகக் கலந்து கஞ்சியாகப் பருகலாம்.
பலன்கள் :
வரகரிசி நுண் ஊட்டச்சத்துக்கள் நிறைந்தது. மோர் கஞ்சியாகச் சாப்பிடும்போது, செரிமானக் கோளாறுகள் சீராகும். நோய்வாய்ப்பட்டவர்கள் மட்டுமின்றி அனைவருமே இந்தக் கஞ்சியைச் சாப்பிடலாம். ஓமம், மாங்காய், கேரட், பெருங்காயம் போன்றவற்றை இந்தக் கஞ்சியுடன் சேர்ப்பதால், தாதுஉப்புகள், வைட்டமின்கள் சத்தும் கிடைக்கும்.
- இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
வரகரிசி - கால் கப்,
ஓமம் - ஒரு டீஸ்பூன்,
உப்பு - தேவையான அளவு,
தண்ணீர் - அரை கப்,
மோர் - ஒரு கப்,
பச்சை மிளகாய் - 2,
மாங்காய், கேரட் - தலா 100 கிராம்,
பெரிய வெங்காயம் - 1,
எண்ணெய், பெருங்காயத்தூள் - தேவைக்கு.
செய்முறை:
* கேரட், மாங்காய், ப.மிளகாயை வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
* வரகரிசியை சுத்தம் செய்து, சிறிது ஓமம், தண்ணீர் சேர்த்து குக்கரில் வைத்து வேகவைக்க வேண்டும்.
* மோரை நன்றாக கடைந்து வைக்கவும்.
* கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் மீதம் உள்ள ஓமம் போட்டு தாளித்த பின், பச்சை மிளகாய், வெங்காயம், மாங்காய், கேரட், பெருங்காயத் தூள் ஆகியவற்றை சேர்த்து பாதி வேகும் வரை வதக்கிய பின் கடைந்து வைத்துள்ள மோரில் சேர்த்து நன்றாக கலக்கவும்.
* வரகரிசியை வேகவைத்து இறக்கியவுடன் அதில் கலந்து வைத்துள்ள மோர், உப்பு சேர்த்து நன்றாகக் கலந்து கஞ்சியாகப் பருகலாம்.
பலன்கள் :
வரகரிசி நுண் ஊட்டச்சத்துக்கள் நிறைந்தது. மோர் கஞ்சியாகச் சாப்பிடும்போது, செரிமானக் கோளாறுகள் சீராகும். நோய்வாய்ப்பட்டவர்கள் மட்டுமின்றி அனைவருமே இந்தக் கஞ்சியைச் சாப்பிடலாம். ஓமம், மாங்காய், கேரட், பெருங்காயம் போன்றவற்றை இந்தக் கஞ்சியுடன் சேர்ப்பதால், தாதுஉப்புகள், வைட்டமின்கள் சத்தும் கிடைக்கும்.
- இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X