என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
லைஃப்ஸ்டைல்
X
கறிவேப்பிலை குழம்பு செய்முறை விளக்கம்
Byமாலை மலர்2 Jun 2016 4:46 AM GMT (Updated: 2 Jun 2016 4:47 AM GMT)
சுவையான சத்தான கறிவேப்பிலைக் குழம்பு செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருள்கள் :
கறிவேப்பிலை - 1 கப்
மிளகு - 1 தேக்கரண்டி
மணத்தக்காளி வற்றல் - 2 தேக்கரண்டி
உளுத்தம் பருப்பு - 2 தேக்கரண்டி
கடலைபருப்பு - 2 தேக்கரண்டி
சாம்பார் பொடி - 1 தேக்கரண்டி
மஞ்சள்பொடி - தேவையான அளவு
புளி - பெரிய எலுமிச்சம்பழம் அளவு
உப்பு - தேவையான அளவு
நல்லெண்ணெய் - 1 மேசைக்கரண்டி
கடுகு, கறிவேப்பிலை - தாளிக்க
செய்முறை :
* புளியைக் கரைத்து வடிகட்டிக் கொள்ளவும்.
* மிளகு, உளூத்தம்பருப்பு, கறிவேப்பிலை, கடலைப்பருப்பை சிறிது எண்ணெய்யில் வறுத்து ஆற வைத்து மிக்சியில் போட்டு நைசாக அரைத்துக் கொள்ளவும்.
* ஒரு பாத்திரத்தில் புளி கரைசலுடன் அரைத்த விழுது, மஞ்சள் தேவையான தண்ணீர் சேர்த்து கலந்து வைக்கவும்.
* கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, கறிவேப்பிலை, மணத்தக்காளி வற்றலை போட்டு தாளித்த பின் கரைத்து வைத்துள்ள புளிக்கரைசலை சேர்த்து நன்றாகக் கொதிக்க வைக்கவும்.
* குழம்பு நன்றாக கொதித்து எண்ணெய் ஓரங்களில் வந்து பக்குவம் வந்ததும் இறக்கி பரிமாறவும்.
* மணத்தக்காளிக்குப் பதில் சுண்டைக்காய் வற்றலும் போடலாம்.
- இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
கறிவேப்பிலை - 1 கப்
மிளகு - 1 தேக்கரண்டி
மணத்தக்காளி வற்றல் - 2 தேக்கரண்டி
உளுத்தம் பருப்பு - 2 தேக்கரண்டி
கடலைபருப்பு - 2 தேக்கரண்டி
சாம்பார் பொடி - 1 தேக்கரண்டி
மஞ்சள்பொடி - தேவையான அளவு
புளி - பெரிய எலுமிச்சம்பழம் அளவு
உப்பு - தேவையான அளவு
நல்லெண்ணெய் - 1 மேசைக்கரண்டி
கடுகு, கறிவேப்பிலை - தாளிக்க
செய்முறை :
* புளியைக் கரைத்து வடிகட்டிக் கொள்ளவும்.
* மிளகு, உளூத்தம்பருப்பு, கறிவேப்பிலை, கடலைப்பருப்பை சிறிது எண்ணெய்யில் வறுத்து ஆற வைத்து மிக்சியில் போட்டு நைசாக அரைத்துக் கொள்ளவும்.
* ஒரு பாத்திரத்தில் புளி கரைசலுடன் அரைத்த விழுது, மஞ்சள் தேவையான தண்ணீர் சேர்த்து கலந்து வைக்கவும்.
* கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, கறிவேப்பிலை, மணத்தக்காளி வற்றலை போட்டு தாளித்த பின் கரைத்து வைத்துள்ள புளிக்கரைசலை சேர்த்து நன்றாகக் கொதிக்க வைக்கவும்.
* குழம்பு நன்றாக கொதித்து எண்ணெய் ஓரங்களில் வந்து பக்குவம் வந்ததும் இறக்கி பரிமாறவும்.
* மணத்தக்காளிக்குப் பதில் சுண்டைக்காய் வற்றலும் போடலாம்.
- இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X