என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
லைஃப்ஸ்டைல்
X
ஜீரண சக்தியை தூண்டும் இஞ்சித் துவையல்
Byமாலை மலர்23 May 2016 3:44 AM GMT (Updated: 23 May 2016 3:44 AM GMT)
உடல் நலன் காக்கும் சிறந்த மருந்தான இஞ்சியை துவையலாக செய்து உண்ணலாம்.
தேவையான பொருட்கள் :
மா இஞ்சி - 50 கிராம்,
சாதாரண இஞ்சி - 50 கிராம்,
புளி - பாதி எலுமிச்சை அளவு,
அச்சு வெல்லம் - 1,
உப்பு - தேவையான அளவு,
பச்சை மிளகாய் - 5,
கடுகு, கறிவேப்பிலை, எண்ணெய் - தாளிக்க
செய்முறை :
* இஞ்சியைத் தோல் எடுத்து பொடிபொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
* பச்சை மிளகாயையும் பொடிபொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
* வாணலியில் எண்ணெய் விட்டு, பச்சை மிளகாய், இஞ்சியை நன்கு வதக்கவும். இஞ்சியின் பச்சை வாசனை போய், நல்ல மனம் வரும். அப்போது இறக்கி ஆற விடவும்.
* பின்னர் இதனுடன், புளி, உப்பு, வெல்லம் சேர்த்து மிக்சியில் போட்டு சிறிது தண்ணீர் விட்டு மைய அரைக்கவும்
* வாணலியில் எண்ணெய் விட்டு சூடானதும் கடுகு, கறிவேப்பிலை தாளித்து அரைத்த துவையலில் கொட்டவும்.
* இதை தினமும் இரண்டு டீஸ்பூன் அளவு உணவில் சேர்த்து சாப்பிட்டால் உடல் ஆரோக்கியம் பெருகும். நோய்கள் அண்டாது. இனிப்பு சுவை பிடிக்காதவர்கள் வெல்லத்தை தவிர்த்து விடலாம், புளி கொஞ்சம் கூட சேர்க்கலாம்.
- இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
மா இஞ்சி - 50 கிராம்,
சாதாரண இஞ்சி - 50 கிராம்,
புளி - பாதி எலுமிச்சை அளவு,
அச்சு வெல்லம் - 1,
உப்பு - தேவையான அளவு,
பச்சை மிளகாய் - 5,
கடுகு, கறிவேப்பிலை, எண்ணெய் - தாளிக்க
செய்முறை :
* இஞ்சியைத் தோல் எடுத்து பொடிபொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
* பச்சை மிளகாயையும் பொடிபொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
* வாணலியில் எண்ணெய் விட்டு, பச்சை மிளகாய், இஞ்சியை நன்கு வதக்கவும். இஞ்சியின் பச்சை வாசனை போய், நல்ல மனம் வரும். அப்போது இறக்கி ஆற விடவும்.
* பின்னர் இதனுடன், புளி, உப்பு, வெல்லம் சேர்த்து மிக்சியில் போட்டு சிறிது தண்ணீர் விட்டு மைய அரைக்கவும்
* வாணலியில் எண்ணெய் விட்டு சூடானதும் கடுகு, கறிவேப்பிலை தாளித்து அரைத்த துவையலில் கொட்டவும்.
* இதை தினமும் இரண்டு டீஸ்பூன் அளவு உணவில் சேர்த்து சாப்பிட்டால் உடல் ஆரோக்கியம் பெருகும். நோய்கள் அண்டாது. இனிப்பு சுவை பிடிக்காதவர்கள் வெல்லத்தை தவிர்த்து விடலாம், புளி கொஞ்சம் கூட சேர்க்கலாம்.
- இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X