search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    சத்தான அரிசி கஞ்சி செய்வது எப்படி
    X

    சத்தான அரிசி கஞ்சி செய்வது எப்படி

    சத்தான அரிசி கஞ்சி செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    அரிசி குருணை - 250 கிராம்
    வெந்தயம் - 1 டீஸ்பூன்
    பூண்டு -  3 பற்கள்
    தேங்காய் பால் - 3 டேபிள்ஸ்பூன்
    தண்ணீர் - தேவையான அளவு

    செய்முறை :

    * அரிசி குருணையை நன்றாக கழுவி வைக்கவும்.

    * குக்கரில் 750 மில்லி தண்ணீரை விடவும்.

    * அதில் அரிசி குருணை, வெந்தயம், பூண்டு மற்றும் உப்பை போட்டு குக்கரை மூடி வைத்து அடுப்பில் கொதிக்க வைக்கவும்.

    * முதல் விசில் வந்தவுடன் அடுப்பின் வேகத்தை குறைத்து 7 - 8 நிமிடங்களுக்கு பிறகு அடுப்பை அணைக்கவும்.

    * பின்னர் பிரஷர் அடங்கிய பின் குக்கர் மூடியை திறந்து தேங்காய் பாலை விட்டு 3 நிமிடங்களுக்கு கொதிக்க வைத்து இறக்கி பரிமாறவும்.

    * இதற்கு தொட்டு கொள்ள புதினா துவையல், கறிவேப்பிலை துவையல் சுவையாக இருக்கும்.

    - உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    Next Story
    ×