என் மலர்

    ஆரோக்கியம்

    ராகி சேமியா உப்புமா செய்வது எப்படி
    X

    ராகி சேமியா உப்புமா செய்வது எப்படி

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    சுவையான சத்தான ராகி சேமியா உப்புமா செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    ராகி சேமியா  - 200 கிராம்
    நீர் - 1.5 கப்
    வெங்காயம் - 1
    பச்சை மிளகாய்  - 2
    கேரட் - 1
    பீன்ஸ்   - 6
    குடை மிளகாய்   - ½
    உப்பு  - தேவையான அளவு
    கொத்தமல்லித்தழை -  சிறிதளவு

    தாளிக்க :

    எண்ணெய் - 2 தேக்கரண்டி
    கடுகு - 1 தேக்கரண்டி
    உளுத்தம் பருப்பு  - 1 தேக்கரண்டி
    பெருங்காய தூள் - ¼ தேக்கரண்டி
    கறிவேப்பிலை  - ஒரு கொத்து

    செய்முறை :

    * வெங்காயம், ப.மிளகாய், காய்கறிகளை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

    * கடாயில் எண்ணெய் விட்டு சூடானதும் கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை, பெருங்காயம் போட்டு தாளித்த பின் வெங்காயத்தை சேர்த்து நன்கு கிளறவும்.

    * பின்பு பச்சை மிளகாய் மற்றும் அனைத்து காய்கறிகளையும் சேர்த்து நன்கு கிளறவும்.

    * அடுத்து அதில் உப்பு சேர்த்து காய்கறிகளின் பச்சை வாசம் போகும் நன்கு கிளறவும்.

    * காய்கறிகள் பாதியளவு வெந்ததும் அதில் தண்ணீர் சேர்த்து கொதி வந்ததும் ராகி சேமியா சேர்த்து சிறிது நேரம் நன்கு மூடி வைக்கவும்.

    * மிதமான தீயில் வேக வைக்கவும். அவ்வப்போது கிளறி விடவும்

    * வெந்ததும் கொத்தமல்லித் தழை தூவி இறக்கவும். சூடாக பரிமாறவும்.

    * சுவையான ராகி சேமியா உப்புமா ரெடி.

    - உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    Next Story
    ×