search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    காராமணி சுண்டல்
    X
    காராமணி சுண்டல்

    காராமணி சுண்டல்

    காராமணி சுண்டல் வித்தியாசமான சுவையில் இருக்கும். மேலும் குழந்தைகளும் விரும்பி சாப்பிடும் வகையிலும் இருக்கும்.
    தேவையான பொருட்கள் :


    காராமணி - 1/4 கப்
    எண்ணெய் - 2 டீஸ்பூன்
    கடுகு - 1/2 டீஸ்பூன்
    கறிவேப்பிலை - சிறிது
    வரமிளகாய் - 1
    பெருங்காயத் தூள் - 1 சிட்டிகை
    துருவிய தேங்காய் - 2 டேபிள் ஸ்பூன்
    சீரகப் பொடி - 1/4 டீஸ்பூன்
    உப்பு - தேவையான அளவு

    செய்முறை:

    * முதலில் காராமணியை வாணலியில் போட்டு 5 நிமிடம் வறுத்து, பின் அதனை நீரில் 3 மணிநேரம் ஊற வைத்த பின் குக்கரில் போட்டு, தண்ணீர் ஊற்றி, 5 விசில் விட்டு இறக்கி நீரை வடித்து, காராமணியை தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.

    * ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு, உளுத்தம் பருப்பு, வரமிளகாய், கறிவேப்பிலை, பெருங்காயத் தூள் சேர்த்து தாளித்து, பின் அதில் உப்பு தூவி, வேக வைத்துள்ள காராமணியை சேர்த்து கிளறி விட வேண்டும்.

    * அடுத்து அதில் துருவிய தேங்காய் சேர்த்து நன்கு கிளறி, இறுதியில் சீரகப் பொடி தூவி பிரட்டி இறக்கினால், காராமணி சுண்டல் ரெடி!!!
    Next Story
    ×